கூட்டிப் பெருக்கிய
அலுவலகத் தரையில்
எச்சில் துப்புவதில்
துவங்குகிறது எங்கள் கலகம்.
உங்கள் மனைவியுடனான
யாத்திரையில்
எங்கள் தெருவோரப் புணர்ச்சி
பெரும் இடையூறு.
எங்கள் வளர்ப்புப் பன்றிகளின்
மலமொட்டிய வாயினின்று
வந்தமரும் ஈக்களை
என்ன செய்யப் போகிறீர்கள்?
அடித்த சாராயத்தில்
அவிழ்ந்து விழும் கைலி தாண்டி
உள்ளாடையற்ற உறுப்புகளை
திட்டிக்கொண்டே மேயும்
உங்கள் மனைவிமார்களின்
கண்களுக்குப் புண்ணியம்.
ஒருநாள்
எதிரெதிர் நேரலாம்
உங்கள் சாமி ஊர்வலமும்
எங்கள் சவ ஊர்வலமும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- அன்புச்செல்வன்
- பிரிவு: கவிதைகள்