சொல் பொருள் யாப்பணியும்
உயிறீறாரும், மெய் ஈரோன்பதும்
உயிருடன் மெய் புணரும்
இரு சதம் சொச்சமும்
வளை மணி குண்டலமொத்த
பிரிதிரண்டும்
உயர்திணை காதலும்
பெருந்திணை காமமும்
எழு சீர் குறளும்
எழுத்தின் இடை குறையும்
எண்ணத் தோன்றலில்
மௌனக் குறுக்கமாய்
இல்பொருள் உவமைஎன
மாயை பழிக்குதடி
உறு பசலை பெருக்கலில்
ஒரு நொடி தீண்டலென
உனக்கும் எனக்குமாய் இந்த
பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும்!
 
- அருண்வாசகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
சிலுவை முத்து
அன்பர் அருண்வாசகருக்கு,
வணக்கம்.
தங்களின் பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும் கவிதை கண்ணுற்றேன். படித்துக் களித்தேன். தமிழ் வளமை வலம் வருகின்றது.

தொடர்ந்து பகிர்வோம் அறிவை
வளர்க வளமாக.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.