“இந்தி தெரியாததால் தமிழர்கள் வடநாட்டில் மரியாதை இழக்கிறார்கள்” -பண்டிட் சாலமன் பாப்பையா.

தமிழ்மக்கள் மொழிப் போராட்டம் நடத்தினோமேயொழிய உலகின் மிகப்பெரும் அடிமைச் சமூகங்களுக்குள், 'யார் மிகச்சிறந்த அடிமைகள்?' என்று போட்டி வைத்தால் நாம் தான் மிகப்பெரும் பெரும்பான்மையில் ஜெயிப்போம். உதாரணமாக, நாம் இந்தி பாட்டு பாடும்போதோ அல்லது இந்தி படம் பார்த்துகொண்டு இருக்கும்போதோ, இந்தியின் மீது பிடித்தமே இல்லாதவன் கூட என்ன சொல்கிறான்?, "பெரிய இவரு... இந்தி பாட்டுதான் கேப்பாரு" என்கிறான். இது மேலோட்டமாகப் பார்த்தால் சாதரணமாகத் தெரியலாம். ஆனால் எவ்வளவு பெரிய அடிமைப் புத்தி இது? இந்தி பாடலோ, இந்தி படமோ பார்த்தால் 'அவரு பெரிய இவரு' என்று இந்தியே தெரியாத அல்லது இந்தியே பிடிக்காத ஒரு சராசரி தமிழன் மனதில் கூட பதியவைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு உதாரணம். இதுபோல் அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இரண்டு வருடம் டெல்லியில் ஒரு தமிழ் குடும்பம் இருந்தால் போதும், தமிழ்நாடு வந்தபின்னும் கூட இந்தியிலேயே அவர்களுக்குள் கதைப்பதும், சுற்றி இருப்பவர்களுக்கு இந்தி தெரியுமா என்ற நினைப்பே இல்லாமல் தங்கள் குடும்பத்திற்குள் இந்தியில் பேசிக்கொள்வதும் கூட இந்தி பேசுவதை எதோ பெருமையெனச் நினைத்துச் செய்யும் இழிசெயல்கள் தான். என்றாவது தமிழகத்தில் வாழும் வடநாட்டவர்கள் தமிழ் நன்றாக பேசத்தெரிந்தால் கூட தங்கள் குடும்பத்திற்குள் தமிழ் பேசி பார்த்திருக்கிறீர்களா தமிழர்களே?

இந்தி என்பது சராசரியான ஒரு மொழி. ஆனால் மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் அதை ஒரு ஏழாம் அறிவாக நினைத்துச் செயல்படுவதுதான் தவறு. தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டங்கள், 'இந்தி எதிர்ப்பு போராட்டங்கள்' அல்ல. அவை 'இந்தி திணிப்பு எதிர்ப்பு' போராட்டங்கள். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இந்தி படிப்பதை தமிழகத்தில் யாரும், எந்த இயக்கமும், எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. அப்படிப்பட்ட உரிமைக்கான, வேண்டிய மொழியை சுயமாய் சிந்தித்துப் படிப்பதற்கான சுதந்திரத்துக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை, சிலர் 'இந்தி மொழிக்கு எதிரான போராட்டமாக' சித்தரிப்பது, திராவிட இயக்கங்களுக்கு எதிராக செய்யப்படும் படுபயங்கர விஷப்பிரச்சாரம்.     

சாலமன் பாப்பையா போன்ற தமிழ் அறிஞர்கள் முக்கியமாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளில் இந்தி உண்டு. தமிழ் எழுதப் படிக்கவே தெரியாமல் இந்தி மட்டுமே கற்றுவைத்துள்ள ஏராளமான 'மானமுள்ள' தமிழர்களும் தமிழகத்தில் உண்டு. அங்கவை சங்கவையை கிண்டல் செய்தால் கூட கைதட்டிச் சிரிக்கும் தாராள மனப்பான்மையுள்ள தமிழர்களும் உண்டு. நிலைமை இப்படி தாராளமாக இருக்கையில், பேராசிரியர் சாலமன் பாப்பையா இந்தி படித்து பண்டிட் பாப்பையா ஆகவேண்டாம் என இங்கே யார் அவரைத் தடுத்தது? தாராளமாய் இந்தி படித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் "இந்தி படிக்காததால் தமிழருக்கு வடநாட்டில் மரியாதையே இல்லை" என சிந்தனையே இல்லாமல் பேச பாப்பையாவால் எப்படி முடிகிறது? ஒருவேளை அந்தக் கூற்று உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இருமொழிக்கொள்கை உடைய இந்தியாவில், "அப்படி நடப்பது நியாயமா?" என்றல்லவா சாலமன் பாப்பையா கேள்வி கேட்டிருக்க வேண்டும்? சிந்தையின்றி அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் அறிஞர் எனப்படுபவருக்கு அழகா? இன்று இந்தி படித்தால் மரியாதை என்று சொல்லுவான். நாளை நிர்வாணமாக நடந்தால் மரியாதை எனச் சொன்னால் அதையும் செய்வாரா பாப்பையா?

தமிழகத்தில் இந்தி படிக்க தடையேதும் இல்லை. படிக்கத் தோன்றினால் படியுங்கள். ஆனால் "இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி, இந்தி படித்தால் தான் இந்தியாவில் எங்கும் வேலை, எங்கும் மரியாதை" என்றெல்லாம் அடிமைத்தனமான, பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம். வடநாட்டுக்கு வேலைக்குச் சென்றால் ஆறு மாதத்தில் பேச்சுப் பழக்கத்திலேயே இந்தி சரளமாக வந்துவிடும். இந்தியை ஏட்டில் படிப்பவர்களை விட பழக்கத்தில் படிப்பவர்கள் தான் தொடர்ச்சியாக நன்றாக இந்தி பேசுகிறார்கள். வடநாட்டில் இருக்கும் தமிழர்களைக் கேட்டாலே இது தெரியும். மேலும் தமிழர்களுக்கு ஆங்கிலம் நன்றாக பேசுபவர்கள் என்று வடநாட்டில் மரியாதை அதிகம். ஏனெனில் வடநாட்டான் ஆனால் தென்நாட்டான் ஆனாலும் ஆங்கிலம் தான் பலருக்கு சோறு போடுகிறது.

ஆனால் ஏற்கனவே, தமிழால் சோறு தின்று, தமிழால் புகழ்பெற்று, பாரியின் மகள்களான அங்கவை சங்கவையைக் கேவலப்படுத்திய பாப்பையா போன்ற தமிழ் விரோதிகளின் முட்டாள்த்தனமான, அடிமைத்தனமான பேச்சுக்களை கடுமையாக கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தே ஆகவேண்டும். சாலமன் பாப்பையா போன்ற ஊடக வெளிச்சத்தில் உள்ளவர்கள் தவறான கருத்துக்களைப் பரப்பும்போது அதைக் கேட்பவர்களின் மனதில் எவ்வளவு அதிகமான உளவியல் ரீதியான மாற்றங்களை அது நிகழ்த்தும்? ஏற்கனவே எவ்வளவு பழமை என்றே ஆராய இயலாத அளவிற்கு உலகின் மிகத்தொன்மையான மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழர்களில் பலர் தங்கள் மொழியின் அருமை தெரியாமல் அடிமைப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான பேச்சுக்களை அனுமதிக்கலாமா? இதையெல்லாம் விடக் கொடுமை பல தமிழர்கள் சாலமன் பாப்பையாவிற்கு கைத்தட்டிக்கொண்டும், அவரை எப்படி நாசூக்காக விமர்சிக்கலாம் என நமக்கு வகுப்பெடுத்துக்கொண்டும் இருப்பதுதான்! சூடாக கண்டித்தால் தான் சாலமன் பாப்பையா போன்ற தமிழால் சோறு உண்டு தமிழை இகழும் துரோகிகள் திருந்துவார்கள் அல்லது குறைந்தபட்சம் நாக்கை சுருட்டிக்கொள்வார்கள்.

Comments

15 comments

15
saaral
nanraga sonnergal.... ivar oru salaman 'pope'iya
Vinayagam.R
Nandraaga sonneer aiya....avaru periya athi methaavi...
Samuel
Excellent news.
thamizhchudar
sulikka sonnal thaan ,chullenru uraikkum.

by
thamizhchudar.
TVS ARUL
வெளிச்சத்திற்கு வந்த சாலமன் பாப்பையா போன்ற தமிழ் துரோகிகளுக்கு இன்னும் அதிக பட்ச சூடு வேண்டும் என்பது அடியேனின் ஆழ்ந்த கருத்து.
senthilkumar
ethu pondra mutal thanama pechekuali vetil vaithu kollatum, medai pechukalil pesa vendam,
தமிழ்நாடன்
/தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டங்கள், 'இந்தி எதிர்ப்பு போராட்டங்கள்' அல்ல. அவை 'இந்தி திணிப்பு எதிர்ப்பு' போராட்டங்கள்/
/வடநாட்டுக்கு வேலைக்குச் சென்றால் ஆறு மாதத்தில் பேச்சுப் பழக்கத்திலேயே இந்தி சரளமாக வந்துவிடும்/
/பாப்பையா போன்ற தமிழ் விரோதிகளின் முட்டாள்த்தனமான, அடிமைத்தனமான பேச்சுக்களை கடுமையாக கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தே ஆகவேண்டும்/

யதார்த்தம், தோழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
பொன்பரப்பியான்
மானங்கெட்ட நடை பிணங்கள் தமிழ்நாட்டில் அதிகம் .அதில் ஒன்று சாலமன் பாப்பையா
Sharma
எந்தவிதமான சூழ்நிலையில் சாலமன் பாப்பையா அவர்கள் அப்படிக் கூறினார்? தனியாக அதை மட்டும் எடுத்துப் பார்த்தால் வரும் பொருள், அந்த சூழ்நிலையோடு பார்த்தால் வராது என்றே நினைக்கிறேன்.. எது எப்படி இருந்தாலும், சாலமன் பாப்பையா அவர்களைத் தமிழ்த் துரோகி என்று கூறுவது சிறிது அதிகம் தான்!!!
TVS ARUL
//இந்தியின் மீது பிடித்தமே இல்லாதவன் கூட என்ன சொல்கிறான்?, "பெரிய இவரு... இந்தி பாட்டுதான் கேப்பாரு" என்கிறான். இது மேலோட்டமாகப் பார்த்தால் சாதரணமாகத் தெரியலாம். ஆனால் எவ்வளவு பெரிய அடிமைப் புத்தி இது? இந்தி பாடலோ, இந்தி படமோ பார்த்தால் 'அவரு பெரிய இவரு' என்று இந்தியே தெரியாத அல்லது இந்தியே பிடிக்காத ஒரு சராசரி தமிழன் மனதில் கூட பதியவைக்கப்பட்டுள்ளது.//

இது மட்டுமில்லை, செயலலிதா போன்ற ஆங்கிலம் அறிந்தவர்களையும் அதிமேதாவி என்று நினைத்து போற்றி கொண்டிருப்பவனும் தமிழன்தான்.
திலிப் நாராயணன்
//வடநாட்டுக்கு வேலைக்குச் சென்றால் ஆறு மாதத்தில் பேச்சுப் பழக்கத்திலேயே இந்தி சரளமாக வந்துவிடும். இந்தியை ஏட்டில் படிப்பவர்களை விட பழக்கத்தில் படிப்பவர்கள் தான் தொடர்ச்சியாக நன்றாக இந்தி பேசுகிறார்கள்//.

பாப்பையா சொன்ன கருத்து மோசமானது. வட இந்தியாவினின்றும் இன்றைக்கு கட்டிட வேலைகளில் இருந்து அனைத்து சிறு வியாபாரம் ஏன் திருட்டு கூட செய்யும் அளவுக்கு பிகார் உபி ராஜஸ்தான் போன்ற ஹிந்தி பேசும் மா நிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பிழைக்க வந்தவர்கள் நிறையப்பேர். ஹிந்தி அருமையாகப் பேசத் தெரிந்தவர்கள்; தாய் மொழியாகக் கொண்டவர்கள்தான் அவர்கள்.
ஹிந்தி பேசத்தெரிந்தவர் என்று கருணா நிதி என்ற தமிழ்ப்போராளியால் அடையாளம் காட்டப்பட்ட தயாநிதி மாறனின் நிலைமை இப்போது இந்தியாவிற்கே நன்றாகத்தெரியும். ஹிந்தி தெரியாத ராசா, கனிமொழி போல்தான் ஹிந்தி தெரிந்த தயாநிதியும் என்பதை தமிழகம் பதிவு செய்யும்.ஆறு மாதமாக காலத்திற்குள்ளாக குஜராத் மாநிலத்தில் கோத்ராவில் ஹிந்தியும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் குஜராத்தியும் கற்றுக்கொண்டவன் நான்.
அமீர் அப்பாஸ்
சாலமன் பாப்பையா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்படி பேசி வருகிறார். பிழைப்புவாதியான அவர் கொள்கையற்ற கோமாளியாக பேசி வருவது புதிதல்ல.” புலவன் என்பவன் பொறுக்கித் தின்பவன்” என்கிற பெரியாரின் சொல்லுக்கு நிகழ்கால சான்று சாலமன் பாப்பையா.

தான் பிறந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவர்களின் குரலாக ஒலிக்காமல்.. ஒளிந்து வாழும் கோழை.
HARI
sujatha , cho , subramaniya swami, director sankar, pontra brahmin pontror ithuku utharanam.
director shankarku oru kelvi
athu ennanga aniyathtai olikka poravan ellame brahminave katra.,
Ex
anniyan., gentleman...
Ramea
Any person can continue in lime light of media, only if he / she subjugates himself / herself to domination of ruling class. There is nothing wonder in Saloman Pappaiah's words. If he talks otherwise media will ignore him.
karu
Good article.,keep writing like this.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.