adam_eve_350முன்னேற்பாடில்லாத
வடிவங்களை வரைந்து
கைதட்டி மகிழும்
ஒரு குழந்தையின்
மனநிலையில் இருந்தான் ஆதாம்.

அனைத்து உயிரினங்களின்
அறிமுக அணிவகுப்பு முடிந்தவுடன்
தான் பெரும் தனிமையில் இருப்பதாக
உணர ஆரம்பித்தான்.

ஏதோ பூர்த்தியடையாத
படைப்புகள் குறித்தான
விசனத்தில் இருந்தான் எனினும்
தேவனின் மேல்
கூடுதல் நம்பிக்கையுடன் இருந்தான்

கண்களை மூடிச்சிறிது நேரம்
அத்திமர நிழலில்
உறங்கிப்போனவனின்
முதல் விழிப்பில்
முன் நின்ற
ஏவாளிடம் தெரிந்தது
தேவனின் கருணையும்
காத்திருப்பின் நம்பிக்கையும்.

Pin It