சிநேகத்தின்  வேர்கள்
கருகுவதை கண்டு
உயிர்ப்பின் தாள லயம்
ஸ்வரம் தப்பிடும்...

நிகழ்கால நிஜத்திற்கு
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம் வெகுவாய்
அலைப்புறும்...

பொய்யென
தெரிந்தும் மெய் 
அன்பின் வாசனையை
விரும்பும்...

இனம்புரியா ஏதோ ஒரு
உணர்விழை புதிதாய்
நெய்யப்படுவதும்
நெய்யப்பட்ட
அம்மாயத்திரை
சிதறடிக்கபடுவதுமாய்
நீளும் இகற்போரில்
என் நெஞ்சம் துவளும்...

More articles by சக்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.