child-abuse 300போரில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அனைத்துலக மாநாடு இலண்டனில் சூன் 1ஆம் நாள் தொடங்கியது.

‘போரில் பாலியல் வன்கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐநா பிரகடனத்தை அங்கீகரித்த அரசுகளுக்குத்தான் இம்மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதை அங்கீகரிக்காமல் இருப்பதால் எங்களுக்கு அழைப்பு இல்லை. ஆனால் நாங்கள் மாநாட்டில் பங்குபெறவே விரும்பினோம்’ என இலண்டனிலுள்ள இலங்கைத் துணைத் தூதர் நெவில் டி சில்வா பிபிசி யிடம் தெரிவித்தார்.

இலங்கை ஏன் அதை அங்கீகரிக்கவில்லை என்பதற்கான விளக்கம் தர அவர் மறுத்துவிட்டார்.

அதேபோது பிரிட்டனின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹியூகோ ஸ்வயரின் அனுப்பிய மாநாட்டு அழைப்பு எங்களுக்குக் கிடைத்தது என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி. எல். பெரிஸ் உறுதிப்படுத்தினார்.

இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டாலும், சர்வதேசத்தின் ஒரு பகுதி அரசுகள் மட்டும் ஐநா பிரகடனத்தை ஏற்றுள்ள நிலையில் நாங்கள் அதை அங்கீகரிக்க முடியாது.

இந்த மாநாடு எமது நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் இதில் இலங்கை அரசு பங்கேற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். கண்ணியமிக்க எந்த சர்வதேச அவையிலும் இலங்கை பங்கேற்க முடியாத நிலை மெல்ல உருவாகி வருகிறது. இதை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

இலங்கையைத் தனிமைப்படுத்துவதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.