யூத சியோனிச வெறி கொண்டவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. அவரது மகன் மட்டும் அந்த வெறிச் சிந்தனை இல்லா மலா இருப்பார்!

யூத வெறியை விட இஸ்லா மிய எதிர்ப்பில் முழுமையாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறார் நெதன் யாஹுவின் மகனான யாயிர் நெதன் யாஹு. இவர் அண்மையில் தனது பேஸ் புக் கில் முஸ்லி ம்களைக் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான செய்தி களை பரப்பி கண்டனத்துக்குள் ளாகியிருக்கிறார்.

மரணத்தையும் துவேஷத்தையும் கொண்டிருப்பார்கள் முஸ்லிம்கள்; தீவிரவாதத்திற்கு ஒரு மதம் உண்டென்றால் அது இஸ்லாம்தான்; பாலஸ்தீனம் ஒருபோதும் தனி நாடாக முடியாது...'' என்றெல்லாம் விஷ(ம)க் கருத்துகளை தனது பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் உலகின் அதி பயங்கரவாத நாட்டின் பிரதமர் நெதன் யாஹுவின் மகன்.

முஸ்லிம்களுக்கு எதிராக யாயிர் கருத்துகள் எழுதியதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கண்டனங்கள் பேஸ்புக் வாயிலாகவே பதிவு செய்யப்பட்டவுடன் இரண்டே மணி நேரத்தில் யாயிரின் கருத்துகளை நீக்கி விட்டது பேஸ் புக்.

தனது மகனின் தறுதலைத்தனத்தப் பற்றி பெஞ்சமின் நெதன் யாஹு கருத்து ஏதும் தெரிவிக்காத நிலையில் இஸ்ரேல் அரசு வழக்கறிஞர் ஷிம்ரோன், “ஒரு இளைஞனின் கோபத்தால் எழுந்த வார்த்தைகள்தான் அது. ஆனால் அது நீக்கப்பட்டு விட் டது.

நெதன் யாஹுவும் அவரது மனைவியும் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை (?!) கொண்டவர் கள். மதப்பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் அவர்கள் மதிக்கி றார்கள் (?!) தங்களது பிள்ளைக ளையும் அவர்கள் அப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள்...'' என்று புண்ணாக்கு விளக்கம் கொடுத்தி ருக்கிறார்.

தனது மகனை அவர்கள் வளர்த்த விதத்தை மகனே வெளிப்படுத்தி காட்டியிருக்கி றார். இந்த தறுதலை பிள்ளை இந்த கீழ்த்தரமான செயலில் இறங்கியிருப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கெனவே 23 பேருடன் சேர்ந்து பேஸ் புக்கில் குரூப் ஒன்றை உருவாக்கி அரபுத் தொழில்களையும், உற் பத்தி பொருட்களையும் யூதர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அரபுகளை வம்புக்கி ழுத்திருந்தார்.

இவருக்கு அரபுகள் மீது உள்ள துவேஷ த்தை இப்படிக் காட்டு வதைவிட - இஸ்ரேல் உற்பத்தி செய்யும் கார், மோட்டார் பாகங்கள், போர்த் தளவாடங்கள், இன்ன பிற உற்பத்திப் பொருட்களை அமெரிக்கா வின் வாயிலாக அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று தனது தந்தை யான பிரதமர் நெதன் யாஹு விற்கு சொல்லியிருந்தால் யாயிர் மான, ரோஷம் உள்ளவர் என்று ஒப்புக் கொள்ளலாம்.

அரபு நாடுகள் இஸ்ரேல் பொருட்களை நேரடியாக புறக்க ணிக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அமெரிக்கா மூலம் மார்க்கெட்டிங் செய்யும் இஸ்ரே லின் திருட்டுத்தனத்தை கண்டிக்க முன் வராமல் அரபு நாட்டு உற் பத்தியைப் புறக்கணிக்க வேண்டு மாம்!

அரபு நாட்டு உற்பத்தி யென்ன? பெரும்பாலும் பெட் ரோல்தான்! அதைப் புறக்கணித் துப் பார்க்கட்டுமே! அப்புறம் பேஸ் புக்கில் கூட யாயிர் அக்க வுண்ட் வைக்க முடியாது!

பாலஸ்தீனம் தனி நாடாக முடியாது என்று தனது தந்தை யின் குரலை பிரதிபலித்துள்ளார் யாயிர். கடைசி பாலஸ்தீனன் உள்ளவரை யாயிரின் ஆசை நிறைவேறாது என்பதை யாயிர் தெரிந்து வைத் திருப்பதால்தான் தனது ஆதங்கத்தையும், வெறித்த னத்தையும் பேஸ்புக்கில் வெளிப் படுத்தியுள் ளான்.

“தந்தையின் போதனையைத் தான் இப்போது மகன் வெளிப்படுத்தி யுள்ளான். தனது குடும்பத்தை நெதன் யாஹு எப்படி வளர்த்து வருகி றார் என்பது யாயி ரின் பேச்சைப் பார்த் தாலே தெரிகிறது...'' என்று கடுமையாக விமர்சனம் செய்திருக் கிறார் பாலஸ்தீனச் செய்தித் தொடர்பா ளர் ஹுசாம் úஸôம் லாட்.

யாயிர் இஸ்ரேல் இராணுவத்தில் பணி யாற்றி வருவதால்... யாயிரை அழைத்த இராணுவத் தளபதி கள், ஒரு இராணுவ வீரர் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று அறிவு றுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது - இது சர்வதேச சமுதா யத்தை திருப்திபடுத்த செய்யும் முயற்சி. உண்மையில் இஸ் ரேல் இராணுவத் திற்கு மனித நேயமோ, மனித நாகரீகமோ கிடை யாது.

பாலஸ்தீன அப்பாவி மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இஸ்ரேல் இராணுவத்தினர் இடித்தபோது - இந்த அக்கிரமத்தை தடுத்து நிறுத்த புல்டோச ருக்கு முன் நின்று அநியாயத்தைத் தட்டிக் கேட்ட அமெரிக்கப் பெண் பத்திரிகையாளரான ரேச்சல் கொரியை புல் டோசரால் ஏற்றிக் கொன்ற காட் டுமிராண்டி நாகரீகம் கொண்ட வர்கள் என்ற அடையாளம்தான் இஸ்ரேல் ராணுவத்திற்கு உண்டு.

அதனால் யூத வெறியில் மூழ்கியிருக்கும் இஸ்ரேல் இராணுவம் யாயிருக்கு அறிவுரை சொல்வது என்பது நம்பிக்கைக்கு அப்பாற் பட்ட செய்திதான்.

இஸ்லாம் குறித்து விமர்சனமோ, துவேஷக் கருத்துகளோ யாயிருக்கு இருந்தால் அதை நேரடியாக வெளிப்படுத்தி இஸ் லாமியர்களோடு அறிவுப்பூர்வ மான விவாதத்திற்கு முன் வரட் டும். அப்பொழுது அவருக்கே தெரிந்து விடும். தீவிரவாதத்தை தூண்டுவது இஸ்லாமியச் சித் தாந்தமா யூதச் சித்தாந்தமா என்று!

அறிவுப்பூர்வமானவர்கள், ஒழுக்கப் பேணுதலுடன் வளர்க்கப்பட்டவர்கள் மாற்று கருத்துக ளுக்கு இதுபோன்ற வழிமுறை களைத்தான் கையாளுவார்கள். நெதன் யாஹு பெற்ற பிள்ளை அக்மார்க் தறுதலை என்பதால் தான் ஒழுக்கக் கேட்டிற்கு அப் பால் நின்று கருத்துகளை சொல்லி வருகிறார் என்பதில் சந்தேகமென்ன இருக்க முடியும்!

- ஃபைஸல்

Comments

2 comments

2
Tamilmaravan
Ayyeyo ayyeyo ayeeo ayeeo Mr Paisal Keetru is for mainly tamil peoples, who can share their thought about problems they are faced in srilanka and India. yourself always engaged with muslim problems in the whole world. Eventhough I didn't read the article by the tiltle it is clearly known it's for your people. Hello Mr moderator and the writer please publish these kind of articles in muslim magazines. otherwise I will give one better Idea. Please open one special page for only Muslim peoples and publish this kind of articles in that page. Mr Paisal worry aboout atleast muslim peoples in tamilnadu not all over the world. Arab countries are take care for them. You peoples don't have the rights to comment about other peoples nature and culture, because you are the one who created the male sarvounist society. go to your peoples country and get support from them to rectify this ****.
Neverevert
"அரபு நாட்டு உற்பத்தி யென்ன? பெரும்பாலும் பெட் ரோல்தான்! அதைப் புறக்கணித் துப் பார்க்கட்டுமே!" It is Europeans & Americans (including Jews) who discovered the petroleum, found uses for it, discovered all the technology and equipments to explore it, to extract it, invested in Research and development, etc. etc. So petrol is not Arab product. Only thing the Arabs can boast is the petroleum is there in thousands of feets below their lands. If it is not for Europeans & Americans (including Jews) this liquid would not have come out at all.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.