இணைய இதழ்கள் அறிமுகம் ‡ 8

புலம் பெயரும் மனிதர்களுக்கு தங்கள் தாய் மண் மீதும் தாய் மொழி மீதும் பற்றதிகம் என்பதைத் தெரிய பல உதாரணங் களை கூற முடியும். காலத் தால் அழியாத மொழியையும் கலையையும் வளர்க்க நல்லதொரு வாய்ப்பை அல்லது அது வளரும் பொருட்டு உதவியாகவேணும் இருப்பது ஆகியன புலம் பெயர் தமிழர்களின் குறையில்லாத குணமாகும்.

இணைய தளத்தில் தமிழ் மொழியினை உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாசிக்கும் படியாக செய்ய புலம் பெயர் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.அப்பால்தமிழ்.காம் என்னும் இணைய இதழ் 2004 ஆண்டு ஜூன் திங்கள் முதல் நாளில் துவக்கப்பட்டிருக்கலாம் எனப்படுகிறது. கி.பி. அரவிந்தன் தளநெறியாளராகவும் வை.ஜெய முருகன் துணை நெறியாளராகவும் கொண்டு இத்தளம் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழின் பிற சஞ்சிகைகைளைப் போல், பிற இணைய தளங்களைப் போல் அல்லாமல் சற்றே மாறுபட்டு இயங் குகிறது இந்தத் தளம். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் குறித்த அவசரமான மற்றும் அவசியமான செய்திகளை பதிவு செய்ய வேண்டி செய்திகள் என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இலக்கியம் என்ற இணைப்பில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என சுவையான அதே நேரத்தில் வாசிப்பு இன்பத்தை மட்டுமின்றி அறிவு வளத் தையும் கொடுப்பதாக உள்ளது. இதில் காணப்படும் படைப்புகள் நேர்த்தியாகவும் சமூக அக்கறை கொண்டதாகவும் உள்ளன.

காட்சிக்கூடம் என்னும் இணைப்பில் நல்ல புகைப் படங்களை வைத்துள்ளனர். இவை மனதை கவர்வதோடு மட்டுமல்லாமல் கருத்தாழம் மிக்கதாகவும் உள்ளது, இந்த தளத்தில் ஒளித்தடம் என்னும் இணைப்பில் வீடியோ செய்திப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சமூக பிரச்சனைகள் பல குறித்து மிக ஆழமான விவாதங்களும் கருத்து வெளிப்பாடுகளும் இத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் வகையில் சகலமானவர்களின் பிரச்சனைகளும் ஆழமாக பதியப்பட்டுள்ளது,

தமிழக ஏடுகள் எதிலும் காண முடியாத ஒரு தூய தமிழ் மொழியை இத்தளத்தில் காணலாம். இவை வலிந்து திணிக்கப் பட்டவைகளாக இல்லாமல் இயல்பான நடையில் உள்ளன. இந்த தூய தமிழ் வாசிக்க இனிமையாக உள்ளது.

முழுக்க இலக்கிய படைப்புகளை கொண்ட வண்ணச்சிறகு என்னும் இணைப்பிதழும் உள்ளது. தேதி வாரியாக வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வாசிக்க வகை செய்யப்பட்டுள்ளது, நூல்நயம் பகுதியில் மதிப்புரைகளும், அறிமுகங்களும், விமர்சனங்களும் உள்ளன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட இணைய இதழ்களின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

யாவரும் கேளிர் என்ற தலைப்பின் கீழ் மகரந்தம் பகுதியில் வாசகர்களின் மனம் திறந்த கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வுகள் பகுதியில் தலைப்பிற்கேற்ற செய்திகள் வெளியிடப் பட்டுள்ளது,

தளத்தின் வடிவமைப்பும், படைப்புகளை வகைப் படுத்தி வைத்துள்ள விதமும் வாசகர்களை மீண்டும் மீண்டும் தளத்திற்கு வரச் செய்யும்படியானதாகும். கடல்தாண்டி, மலைதாண்டி தூரம் போனாலும், மண் குடைந்து பாதாளம் போனாலும், ஆகாயம் கிழித்து வெளி கடந்தாலும் தமிழர்கள் தமிழை விடாது காப்பதை இந்த தளத்தினை காணும் போது உணரலாம்.

அப்பால் தமிழ் என்னும் இத்தளம் இப்பாலுள்ள தளங்களை விட பல படிகள் மேலேறி இருக்கிறது என்பது உறுதி.

 இணையம்: www.appaaltamil.com

 மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Comments

1 comment

1
kavingar kaththaazhai
அருமை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.