இதுவரை ஈட்டியது
மரணமே யென
உதடுகள் உணர்ந்த நொடியில்
பிரிக்க இயலா
மென்மையில் இறுகி
ஆனந்த சாந்தமுடன்
ஒட்டிக் கொண்டதொரு
மனம் மறைந்த
புன் முறுவல்

புன்முறுவலை புதைக்கவோ எரிக்கவோ முடியாது.

என் உடல் மலர் உதிர்ந்து
நறுமணமென பிரிந்த உயிர்
காற்றில் கரைந்த பின்னும்
வெட்ட வெளியில் ஒளிரும்
அந்த புன் முறுவல்
மகனே நானுனக்கு விட்டுச் செல்வது
புன்முறுவலை மட்டுமே

More articles by பாதசாரி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.