வினாக்கள்... விடைகள்...!

1) நடிகர்களை நம்பி பா.ஜ.க. கட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. - தமிழிசை சவுந்தரராஜன்

அப்படியா? ரஜினி, பா.ஜ.க.வுக்கு வர மாட்டேன்னு தனது முடிவை உறுதியா தெரிவிச்சுட்டாரா?

2) அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்னை “பினாமி முதல்வர்” என்று கூறுகிறார்கள். - ஓ. பன்னீர்செல்வம்

நியாயமான பேச்சு! ‘முதல்வர்’ என்று கூறுவதையே ஏற்க மறுக்கும் ‘முதல்வரை’ பினாமி முதல்வர் என்று எப்படிங்க சொல்லலாம்?

3) இந்தியாவில் சிறைச் சாலைகள் அனைத்தும் கல்விச் சாலைகளாக மாறவேண்டும். - கிரண்பேடி

அது முடியாது என்பதால்தான் கல்விச் சாலைகளையாவது சிறைச் சாலைகளாக மாத்துவோமேன்னு தீவிரமா, முயற்சி செஞ்சுகிட் டிருக்கோங்க!

4) வாக்காளர்களுக்கு எந்த காலத்திலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று தமிழகத்திலுள்ள கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும். - மருத்துவர் இராமதாசு

வாக்குறுதிதானே! ஓ, தாராளமாக தரலாமே!

5) புதுவை முதல்வர் டெல்லி மாநாட்டில் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் அழுக்கு சாமியார் குரு பூஜையில் கலந்து கொண்டார். -செய்தி

மோடியை சந்திச்சு என்ன கிடைச்சுடப் போவுது? சாமியாரிடம் ஆசியாவது கிடைக்கும்னு முடிவு செஞ்சுட்டார் போல.

6) பழனி கோயிலுக்கு பக்தர் வாங்கிய 1000 கோடி சொத்து, கணக்கில் வரவில்லை. - செய்தி

எதுக்கும், சுவிஸ் வங்கியில் முருகப் பெருமான் பெயரில் கணக்கு இருக்குதான்னு விசாரிச்சுப் பாருங்க.
7) சர்ச்சைக்குரிய ‘இராமன் பிள்ளைகள்’ பேச்சினைப் பேசிய பெண் அமைச்சர், கிராமத்துப் பெண் என்பதைப் பார்க்க வேண்டும். - மோடி
அதனால்தான் பா.ஜ.க. பேச விரும்பி, பேசத் தயங்கி மறைப்பதை வெளிப்படையாக போட்டு உடைச்சுட்டார் போலிருக்கு.

Comments

1 comment

1
mohaideen m
Modi Sonnadhu Ennanga pramaadham
Mathyapradhesh-la PJP Amaichar kailash vijayavargayvukku Amaidhikkana NOBEL parisu kidachirukunu Mathyapradhesh MLA varaikum phone panni vaalthu therivikkiranglam Amaidhikkana NOBEL parisu yaruku Koduthirukuney theriyaadha Mutta peesungla irukku PJP/MLAkkall Enna seiya solreeha Namma amaicharum Udaney eeeeenu palla ilichukitu kailash sathyarthiyavida nan romba prabalama irukuradhunala enaku phone panni ellarum vaalthu solranganu solrapla. kiruku paya pullavala Amaithikkana NOBEL parisu yaruku koduthirukunay theriyadha nee ellam arasiyal panni ENGA VELANGA POHUDHUNU KEKKA VENDAMA

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.