வீதிக்கு வந்து
உன் மீது
கற்களை வீசுவதற்கான
காரணங்கள்
எம்மிடமும் நிறையவே இருக்கின்றன

எம் உறவுகள்
அங்கே
செத்து மடிந்த போது
நாதியற்ற நாங்கள் -
உன்
உதவியை நாடினோம்
கதறினோம்
துடித்தோம்.

நீயோ
எம்
எதிரியோடு சேர்ந்து
எம் இனத்தை அழித்தாய்

முப்போகம் பயிரிட்ட
நாங்கள்
ஒற்றைப் போகத்திற்கு
நீர் வேண்டி
நீதி கேட்டோம்
உன்னிடம்

இங்கேயும் நீ
எதிரியின் பக்கமே
இருக்கிறாய்

எம் உரிமைத் தீவை
எதிரிக்குக் கொடுத்தாய்

மீளாத் துயரத்தோடு

மீன் பிடிக்கச் செல்கிறான்
எம் சகோதரன்

அவனை
அழிக்கிறான்
அடிக்கிறான்
அசிங்கப்படுத்துகிறான்

இப்போதும் நீ
எதிரியின் பக்கமே
இருக்கிறாய்

ஒற்றை வரியில்
சொல்கிறாய் நீ
எம் எதிரிகள் யாவரும்
உன் நண்பர்களென்று.

நாங்கள்
வேறென்ன சொல்வது -
வீதிக்கு வந்து
உன்மீது
கற்களை வீசுவதற்கான
காரணங்கள்

எம்மிடமும்
நிறையவே இருக்கின்றன
என்பதைத் தவிர.

More articles by சிவ.அருளமுதன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.