ஈசன் பிரம்படி பட்டும்
இன்னும் திருந்தவில்லை
மதுரை.
----------------------------------------
இரண்டாவது முறையாக
எரிந்தது மதுரை.
வெண்கொற்றக்குடை
வெட்கப்படவில்லை
இப்போது.
----------------------------------------
ஆந்தைக்கு மட்டுமல்ல
ஆர்க்காட்டாரின்
புண்ணியம்
காரிருளிலும்
கண் தெரிகிறது எங்களுக்கு.
---------------------------------------------
பெயர் தான்
தாழ்தளப்பேருந்து
குறையவில்லை கட்டணம்.
-------------------------------------------------
இடைத்தேர்தல்
எடைத்தேர்தலாம். . .
எவ்வளவு
செலவழித்தோமென
பார்த்தீர்களா?
-------------------------------------------------
குண்டோதரன்
கை வைத்த
வைகையில்
கால் கூட வைக்கமுடியவில்லை.
---------------------------------------------------
வீதிகளில்
வன்முறை தாண்டவமாட
வீட்டுக்குள்ளோ
மானும், மயிலும் ஆட.
------------------------------------------------------
முக்கண் இருந்தும்
விட்டுவிட்டானே
கருவறை சேட்டையை.
---------------------------------------------------------
பணக்காரர்களைப் போலிருக்கிறார்கள்
பிச்சைக்காரர்கள்.
எப்போதும்
இல்லையென்றே கூறுகிறார்கள்.
------------------------------------------------------------
- ப.கவிதா குமார்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- ஆடு முயல் சிங்கம்
- கற்கச் சிறந்த 'நிற்க அதற்குத் தக'
- ஈரோடு அர்பன் பாங்கி தேர்தல்
- கனவு - மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- இறையாண்மையின் இலக்கணம் புலிகள்
- உடைந்து தொங்கும் மோடி பிம்பம்
- தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!
- ‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி
செம்மலர் - மார்ச் 2010
- விவரங்கள்
- ப.கவிதா குமார்
- பிரிவு: செம்மலர் - மார்ச் 2010