கோவில்பட்டியிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் வெம்பக்கோட்டை என்னும் கிராமம். இங்கு தேவர் சாதியினரால் வழிபடப்படும் உடையாண்டியம்மா, சங்கரக்குட்டித்தேவர் கோவில், ஊரின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது.

வெம்பக்கோட்டையில் வாழ்ந்த வளமிக்க குடும்பப்பெண்ணான உடையாண்டியம்மாவை சங்கரக்குட்டி என்ற வளம் குறைந்த தேவர் குடும்பத்து இளைஞன் விரும்பினான். இவன் கிழக்குகேயிருந்து மாட்டு வண்டியில் வெற்றிலைப் பொதி கொண்டு வந்து வெம்பக் கோட்டையில் வியாபாரம் செய்து வந்தான்.

இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட நெருக்கமான பழக்கத்தின் விளைவாக உடையாண்டியம்மா கர்ப்பமடைந்தாள். அதனையறிந்து ஆத்திரமுற்ற அவளது ஐந்து சகோதரர்களும் அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். முதலில் ஒப்புக் கொண்டாலும் ஐவரில் ஊனமுற்ற மூத்த சகோதரன் அத்திட்டத்தைக் கைவிட்டுவிடும்படி வேண்டினான். ஆனால் இதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஊனமுற்ற சகோதரனுக்குத் தெரியாமல் உடையாண்டியம்மாளை வைப்பாறு ஆற்றுக்கு வடக்குப்புறம் அழைத்து வந்து தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்து சமாதி கட்டினர்.

மறுநாள் ஆடுமேய்க்க வந்த ஊனமுற்ற சகோதரன், தங்கையின் குரலைக்கேட்டு அந்த திசைநோக்கிச் சென்று பார்த்தபொழுது அவள் உயிருடன் சமாதி ஆக்கப்பட்டிருந்தாள். அவள் தனது சகோதரனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டாள். உடனே தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்ந்து ஆற்றில் நனைத்து தங்கைக்கு தண்ணீர் கொடுத்தான். அவள் மரணமடையும் முன்பு நீ கிழக்கு நோக்கி சென்று பிழைத்துக்கொள், மேற்கே செல்லாதே என்று கூறி மரணமடைந்தாள்.

உடையாண்டியம்மாள் மரணத்தைக் கேள்வியுற்ற சங்கரக்குட்டித் தேவர் தற்கொலை செய்து கொண்டார். காலப்போக்கில் கிழக்கே பிழைக்கச் சென்ற மூத்த சகோதரனின் உறவினர்கள் உடையாண்டியம்மாளை வழிபடத் தொடங்கினர். இன்று பத்திரகாளிபுரம், சங்கம்பட்டி, தூத்துக்குடி ஆத்தூர், புளியங்குளம் பகுதியிலுள்ள தேவர் சாதியினர் வழிபடுகின்றனர். மாசி சிவராத்திரியில் சிறப்பாக வழிபடுகின்றனர். வழிபாட்டின் போது பேறுகாலமான (கர்ப்பிணி) பெண்ணுக்குத் தரும் நாட்டு மருந்துப் பொருட்களைப் படையலாகப் படைக்கின்றனர்.

     கருவுற்ற நிலையில் உடையாண்டியம்மா கொல்லப்பட்டதன் அடிப்படையில் இப்படையல் இடம்பெறுகிறது

Comments

2 comments

2
Thirumugam V P
The author has exposed the caste name in the name of the murder of a pregnant lady. First and foremost there is no caste name exist in the name of Devar. Actually the devar name is belongs to the people of Mallars/Devendrar. Namely, Devar + Vendhan = DEVENDRAR as per our epic and literatures. One can't claim merely its name only as Devar. If we accept this, those who have the name of Staline is belongs to Russia's Stalin's relation or their national. Whether the name of the person of Victoria is eligible for the claim of the relation of then British's Empire. No. The claim should be based on the real historical evidences, epigraphic of ancient temples, Tamil Sangam's literatures and their inheritances among the society.
Senthan
Thirumugam, You are perfectly correct, there is no caste name as Devar. These people belong to Castes like Maravar, Agamudaiyar or Kallar. There was no caste termed as Devar until the rise of British Empire. Anywere in this world the rulers or chiefs were always called as "Lord", thats the reason why even in England when commoners address their King or Dukes, they addressed them as "My Lord", which in tamizh means "Devar". Since these people were the rulers of tamizh country until the British Regime, those rulers or chiefs were the ones who were called as Devars. Thats the reason in all the inscriptiosn of Chola, Chera and Pandya the kings name end with Devar. Moreover பள்ளு பாடல்கள் were also sung during the Sangam periods, if so then how could you claim there is no Pallar during that age. The claim that Thivagara nigandu says "Arunthiral Ulavarkkum, Perunthiral Veerarkkum Mallar endru Peyar" is wrong there is a difference between "மல்லர்" and "மள்ளர்". Tamizh language creates a lot of difference between each character (Alphabet), and each word combination creates different meanings. For Ex: ஆள் ஆல் ஆழ் / கால் காள் காழ் conveys different meanings. The claim of Devendra Kula Velalar What you guys are doing is to meddle with actual history. Your claims are totally wrong. Stop wrong ancestry claims and work towards improving your community. Your community needs leaders who can uplift them from the clutches of economic poverty, they dont need wrong history to be proud of.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.