காஞ்சிபுரம், மதுராந்தகம் வட்டத்தில் வயல் வெளிகளைக் கடந்து ஊருக்கு செல்லும்போது உயர்ந்து நிற்கிறது 190 வருட பழமை மிக்க தூயஆரோக்கிய அன்னை தேவாலயம். பழமையும், கம்பீரமும் உடைய இத் தேவாலயத்தின் கல்லறையில் இதுவரை தலித் மக்களின் உடல் புதைக்கப்படவே இல்லை . தலித் மக்கள் பல வருடங்கள், தொடர் போராட்டங்கள், எண்னெற்ற முயற்சி கள் என்று தொடர்ந்தபோதும் கல்லறை உரிமை என் பதை சாதி ஆதிக்க சக்திகள் தொடர்ந்து மறுத்துள்ளனர். இத்தோடு வழிபாட்டில் சம உரிமைகோரி இத்தேவால யத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 12 வருடம் இக் கோவில் பூட்டப்பட்டிருந்ததும் நீதிமன்ற உத்தரவு பெற்று தான் திறக்கப்பட்டுள்ளது.

தேவாலயம் பூட்டப்பட்டதற்கான காரணம் ஒன்று தான். ஆலயத்தின் மையப்பகுதியில் தலித் மக்கள் அமரக் கூடாது என்பதுதான். இந்த உரிமை மீட்கப்பட்டு திறக்கப் பட்ட நிலையில் கல்லறை உரிமை தலித் மக்களுக்கு மறுக் கப்பட்டே வந்துள்ளது.

2011 ஜனவரி 22 அன்று தலித் இளைஞன் வேளாங் கண்ணி மரணம் அடைகிறார். அவரை தேவாலயக் கல்ல றையில் அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு ஆதிக்க சாதியின ரால் தெரிவிக்கப்படுகிறது. தலித் மக்கள் ஒன்றிணைந்து சட்டமன்ற உறுப்பினர் லதா உடனிருக்க அடக்கம் செய்யப் படுகிறது. அடக்கத்திற்காக குழி வெட்டிய இராஜேந்திரன் இறுதி நிகழ்ச்சி முடிந்தபின் மாலை தோட்டத்திற்கு செல் கிறார் இரவாகிறது.

அடுத்த நாள் விடிகிறது தோட்டத்திற்கு சென்ற இராஜேந்திரன் வீடு திரும்பவில்லை. காவல்துறையினரி டம் ஜனவரி 23 அன்று புகார் தெரிவிக்கப்படுகிறது. ஜன வரி 24 அன்று மாலை இராஜேந்திரன் ஏரியில் கொலை செய்யப்பட்டு பிணமாக மிதக்கிறார்.

தச்சூர் இராஜேந்திரனை கொலை செய்த கொலை யாளிகளை கைது செய்யக்கோரியும், அவரது உடலை பொதுக் கல்லறையில் புதைக்கும் உரிமை கோரியும், உரிய இழப்பீடு கோரியும் உடல் வாங்க மறுக்கப்படுகிறது. ஜன வரி 25 காலை தச்சூர் தலித் மக்களின் வாழ்வில் மீண்டும் ஒருநாள் அல்ல. மதுராந்தகத்தில் கோரிக்கைக்காக விடுதலை சிறுத்தைகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றுபட்ட எதிர்ப்பாக ஆர்ப்பாட்டம் செய்கிறது.

இந்நிலையில் மூவரை காவல்துறையினர் கைது செய் கின்றனர். எனவே, தச்சூர் இராஜேந்திரன் உடல் பெறப் பட்டு கிராமம் நோக்கி விரைகிறது. எஸ்.பி, எ.எஸ்.பி, டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோர் தங்கள் கைகளில் லத்திக்கள், கவ சங்கள் அணிந்து போருக்கு போகும் உணர்வோடு, ரப்பர் குண்டு வைத்து போராட்டக்காரர்களை கலைக்கும் அதி நவீன ஆயுதங்களோடு முழு பலத்தோடு மனுநீதியை தேவா லயத்தில் பாதுகாப்பதற்காக அணிவகுத்து நிற்கின்றனர்.

அரசியல் சட்டமும், உறுதிமொழியும் மறந்து போன வர்களுக்கு சட்ட அறியாமையை, சட்டம் மன்னிக்கா விட்டாலும் மீண்டும் நாம் எடுத்துரைத்தோம். திரண்டு நின்ற உரிமைக்கான கூட்டத்தின் ஆவேசக் குரல் ஆட்சியா ளர்களின் காதுகளை பிளந்தது, ஆட்சியாளர்களும், அதி கார வர்க்கமும் மீண்டும் மீண்டும் கூறினார்கள். ஆதிக்க சாதியினர் கொடுத்த மனு அமைதியை பாதுகாக்க என.

தச்சூர் இராஜேந்திரன் கல்லறை உரிமைக்காக உயிர் தந்தவன். அவனுக்கு கல்லறை மறுப்பா? அனுமதியோம் என நம் குரல் விண்ணை பிளந்தது. அமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாதென்று.

நிறைவாக நீதியே வென்றது. சம உரிமையை எட்டியது தேவாலயக் கல்லறை..

Pin It