koodanagulam_380அது சமுத்திரத்தின் பிரதிபிம்பமாய்ப் பிறக்காது

அதன் மரத்த கைகளில் மண் இருக்காது

அது சீதோஷ்ண நிலைகளின் பகுதியாயிராது

அது தன் பெயரை வெளியிடாது

அதிலிருந்து உறுதிதரும் கனவுகள் பிறக்காது

அது போட்டோவில் அழகாக வராது

அது நமது துக்கத்தை விசாரிக்காது

அது நமது சந்ததிக்கு ஆறுதலளிக்காது

நமக்கு உதவ அதற்குத் திறனிராது

தமிழில்: கவிஞர் பிரமிள்

Pin It