‘பெரியார் பிறந்த பூமி’ என்று நாம் அவ்வப்போது பெருமையடித்துக் கொள்வதற்குச் சொல்லும் காரணங்களில் பிரதானமானது, ‘அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா தொடங்கி வடமாநிலங்கள் வரை பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள். மய்யநீரோட்ட இடதுசாரி அமைப்புகள் தொடங்கி புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் கூட சாதி ஒற்றைப் போட்டுக் கொள்ளும் வழக்கத்தைக் கைவிடவில்லை. ஆனால் தமிழகத்தின் பொதுவெளியில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்வது என்பது கூச்சகரமான செயலாக மாற்றப்பட்டிருக்கிறது’ என்பது. ஆனால் தமிழகத் தலைநகர் சென்னையின் மய்யப்பகுதியன்றில் ஒரு சிலை சாதிப்பெயரோடு நிற்கிறது. அந்த சிலை அமைந்த சாலையும் சாதி ஒற்றைத் தாங்கியிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக தமிழகச் சாதிகளுள் ஒன்றில் பிறக்காத எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தெருக்கள் மற்றும் பூங்காக்கள், நினைவிடங்களில் இருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. பிற்காலத்தில் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் காயிதேமில்லத் பெயரால் மாவட்டம் அமைக்கப்பட்டதையட்டி எழுந்த மதக்கலவரம், வீரன் சுந்தரலிங்கம் பெயர் அரசுப்போக்குவரத்துக் கழகமொன்றிற்கு வைக்கப்பட்டதன் விளைவாய் எழுந்த சாதிய வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தமாக தலைவர்களின் பெயர்கள் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக்கழகங்களிலிருந்து நீக்கப்பட்டன. இத்தனைக்கும் மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களின் ஒன்றில் கூட தலித் தலைவர்கள் இல்லை. ஆனால் இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் அசையாமல் அப்படியேதான் நிற்கிறது பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சிலையும் பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சாலையும்.
முக்குலத்துச் சாதி அதிகாரத்தையும் அரசியலையும் கேள்விக்குட்படுத்தாமல் தமிழ்ச்சமூகத்தின் பல தீர்மானகரமான மய்யங்கள் ஏற்றுக்கொண்டது என்பதே இதன் அர்த்தம். இன்று வரை வெகுஜன ஆதரவு பெற்ற எந்த ஒரு சின்ன அசைவும் கூட இந்த முக்குலத்தோர் அதிகாரத்திற்கு எதிரானதாக இல்லை. மாறாக அதற்கேற்றவாறு சமூகம் ஒத்திசைந்து தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது. அதன் உச்சம் ‘தேவர் ஜெயந்தி’ என்னும் கலாச்சார அநாகரீகம், ஜெயமோகனின் வார்த்தையில் சொல்வதானால் ‘ஜனநாயகரீதியிலான மக்கள் கூடுகை’. சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் எவ்வாறு தமிழ்ச்சமூகம் பெருவாரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மூன்று விதமான தளங்களினின்றும் அணுகலாம்.
அரசியல்:
திமுகவும் கருணாநிதியும் ஒருகாலத்தில் முக்குலத்தோரால் விலக்கப்பட்ட சக்திகளாகவே இருந்தனர். காரணம், திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி போன்ற ‘எளியசாதி’ மனிதர்களை அவர்களின் சாதிய உளவியல் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தேவர் சாதிக் கருத்தியல் பிதாமகன் பசும்பொன் முத்துராமலிங்கம் திமுக முன்வைத்த தமிழின -பார்ப்பன எதிர்ப்பு & இந்துமத எதிர்ப்பு அரசியலுக்கு எதிராய் இயங்கி வந்தவர். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர் அதிமுகவிலும் அரசு அதிகாரங்களிலும் போதுமான செல்வாக்கைச் செலுத்தினர். காளிமுத்து, திருநாவுக்கரசர் போன்றவர்கள் கட்சியில் அதிகார மய்யங்கள் என்றால், பொன்.பரமகுரு போன்ற முக்குலத்துப் போலீஸ் அதிகாரிகள் அரசு எந்திரங்களின் தீர்மானகரமான சக்திகளாக இருந்தனர். முக்குலத்தோர் & அதிமுகவினர் உறவு என்பது ஜெயலலிதா தலைமைக்காலத்தில் உச்சத்தை எட்டியது என்பதும் அதற்குக் காரணம் சசிகலாவின் செல்வாக்கு என்பதும் சாதாரண தமிழ்ஜனங்களும் அறிந்ததுதான்.
ஆனால் இப்போது இழந்துபோன முக்குலத்தோர் ஆதரவைப் பெறுவதற்காக கருணாநிதியும் பல உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளார். தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக மாற்றுவது, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டுவதான அறிவிப்பு என்பதாகத் தொடர்கிறது. மேலும் இப்போது தென்மாவட்ட திமுகவில் அதிகார மய்யங்களில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் முக்குலத்தோர்தான். ஆனால், என்ன ஒரு மனத்தடையாலோ இதுவரை கருணாநிதி நேரடியாக முத்துராமலிங்கத்தின் சமாதிக்குச் சென்று மாலை அணிவித்தது இல்லை. இந்த ஆண்டு சென்னையில் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்தது மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, ஆற்காடு வீராசாமி. இதில் ஒருவர் கூட முக்குலத்தோர் அல்ல. பசும்பொன்னில் மரியாதை செலுத்தியது அழகிரி. ஆனால் அவருடன் சென்றது ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு போன்ற முக்குலத்து அமைச்சர்கள். தன்னுடைய கருத்தியல் அடிப்படைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விடுகிற திமுக சாதி ஓட்டுக்காக எந்த சமரசத்தையும் செய்துகொள்ள தயாராகத்தானிருக்கும்.
ஜெயலலிதா பொதுவாக எந்த அரசியல் முன்னோடிகளையும் மதிக்கும் பழக்கம் கொண்டவர் அல்ல. அண்ணா, பெரியார், காமராசர், காயிதேமில்லத் போன்ற அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஜெயலலிதா போவது அரிதினும் அரிது. ஜெயலலிதாவின் கைத்தடிகளை அந்த வேலையைச் செய்ய பணித்து விடுவார். அதுவும் இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாளுக்கு சிலைக்குக் கூட மாலை அணிவிக்கச் செல்லவில்லை. தான் இருந்த கொடநாடு எஸ்டேட்டிற்குப் பெரியாரின் புகைப்படத்தை வரவழைத்து ‘மரியாதை’ செய்தார். அண்ணாவுக்கும் அஃதே. கொடுமை என்னவென்றால் இத்தனைக்கும் இந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழாவும்கூட. ஆனால் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளைக்கு நேரடியாகச் சென்று மாலை அணிவிக்க ஜெயலலிதா தவறியதேயில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் நிலவிய கச்சாடாவான ஜனரஞ்சகக் கலாச்சாரத்தை அழித்து இந்துத்துவ பார்ப்பனியச் சார்பு நிலை எடுத்து வலதுசாரி அமைப்பாக மாறிப்போன ஜெ&அதிமுகவிற்கு மிகவும் இசைவானதுதான் இந்த முக்குலத்தோர் அதிகார அரசியல்.
திமுக, அதிமுக என்கிற திராவிடக் கட்சிகளைத் தாண்டிப்போனால் தென்படுபவர்கள் ‘இடதுசாரிகள்’. சென்ற ஆண்டு முத்துராமலிங்க ஜெயந்திக்கு மரியாதை செலுத்த அதே சாதியைச் சேர்ந்த நல்லகண்ணுவை அனுப்பி தன் ‘புரட்சிகரத் தன்மையை’ நிறுவிக்கொண்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் சி.பி.எம் கட்சியின் என்.வரதராஜன். ஆனால் இந்த ஆண்டு அறுவைச்சிகிச்சை முடிந்து கறுப்புக்கண்ணாடியோடு முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போட்டு அட்டகாசமாய்ச் சிரிக்கிறார் காம்ரேட் என்.வி.
இத்தகைய சீரழிவின் கடைசிக்கொழுந்து, புளுத்துப்போன சந்தர்ப்பவாத சவடால் அரசியலுக்குப் புதுவரவு பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி, பகுத்தறிவு இயக்குனர், செந்தமிழ் நாட்டு சேகுவாரா சீமான். நல்லவேளையாக நாத்திகம் பேசுவதைத் தவிர பெரியாருக்கும் சீமானுக்கும் பெரிய தொடர்புகள் இல்லை. குஷ்பு விவகாரத்தில் ஆணாதிக்கவாதியாக அம்பலப்பட்டுப் போன சீமான், பெரியார் மற்றும் பிரபாகரனின் பெயரை உச்சரித்தே தனக்கான இளைஞர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். ‘தம்பி’ திரைப்படத்தில் முத்துராமலிங்கத்தின் புகைப்படத்தைக் காட்டி மாற்று அரசியலாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின் கீற்று இணையத்தள நேர்காணலில் ‘தான் செய்தது தவறு’ என்று ஒத்துக்கொண்டார். இருந்தபோதும் சீமானின் சாதிய உளவியல் ஒழிந்தபாடில்லை. ஈழ ஆதரவு என்ற பெயரில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரக் கூட்டங்களில் "ஈனசாதிப் பயலா இருந்தா காங்கிரசுக்கு ஓட்டுப்போடு" என்று விஷத்தைக் கக்கினார். இப்போது கொஞ்சமும் வெட்கமில்லாமல் முத்துராமலிஙக்த்தின் சிலைக்கு மாலை அணிவித்து வந்திருக்கிறார்.
"இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டோமே" என்பது சீமான் தரப்பு வாதம். சுயமரியாதைக்காகப் போராடிய போராளிக்கும் மாலை, ஒடுக்குமுறையை ஏவிய கொலைகாரனுக்கும் மரியாதை. இதுதான் சீமானின் ‘தமிழ்த்தேசிய தகிடுதத்தம்’. முத்துராமலிங்கம் மீது பேரன்பும் ராஜபக்ஷே மீது பெருங்கோபமும் கொண்ட பிஸ்கோத்து தமிழர்களை உருவாக்குவதுதான் சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம். இது சீமானோடு மட்டும் நிற்பதில்லை. தமிழ்த்தேசியம் என்ற பெயரில் இங்கு முன்வைக்கப்பட்டவை அனைத்தும் ஆதிக்க சக்தி நலன் பேணும் கருத்தியல்களே.
ஈழ ஆதரவுப் போராட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத்தோடு பல தமிழின அமைப்புகள் இணைந்து போராடின. ஆனால் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளரை எதிர்த்து பெரியார் திக போராடியபோது தமிழின அமைப்புகள் கைகோர்க்கவில்லையே. தமிழினவாதம் என்பது ஆதிக்கசாதிகளின் அயோக்கியத்தனமே என்பதற்கு ஆதாரம் தேட எங்கும் போகத் தேவையில்லை. இதே கீற்று இதழில் வெளியான முனைவர் வே.பாண்டியனின் ‘மார்க்சிஸ்ட்களின் புதிய அக்கறை & ஆலய நுழைவுப் போராட்டம்’ என்னும் கட்டுரையே போதுமானது. மார்க்சிஸ்ட் கட்சியில் பார்ப்பனத் தலைமை, மலையாளிகள் தலைமை என்று காரணங்காட்டி சாதியாதிக்கத்தைக் காப்பாற்றுகிற அயோக்கியத்தனம்தான் பாண்டியனின் ‘தமிழின ஒற்றுமை’ கட்டுரை.
சினிமா:
அவ்வப்போது சீர்திருத்தப் பூச்சாண்டி காட்டும் விவேக், எவ்வளவு மோசமான தேவர் சாதி வெறியர் என்பதை விளக்குவதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. இப்போது அதன் புதிய வரவு கருணாஸ். ‘முக்குலத்து முகவரி’ என்னும் இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கும் கருணாஸ் ‘இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என்பதுதான் முக்குலத்தோர்’ என்று ‘அறிவியல்’ விளக்கம் அளித்திருக்கிறார். இந்துமகாசபைத் தலைவனாக இருந்த முத்துராமலிங்கம் எப்படி முஸ்லீம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முகவரியாக இருப்பார் என்று நமக்கு விளங்கவில்லை. கஞ்சா கருப்பு, ஆச்சி என்று அழைக்கப்படுகிற மனோரமா என சினிமாவில் பலரும் முக்குலத்தோரே. இயக்குனர்கள், நடிகர்கள் என பலமட்டங்களிலும் சினிமாவில் முக்குலத்தோர் ஆதிக்கம் உண்டு.
உதட்டுக்கு மேலே முளைக்கிற மயிரையும் முக்குலத்தோரையும் வீரத்தின் குறியீடாக மாற்றியதில் தமிழ்ச்சினிமாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. இதை முக்குலத்தோர் மட்டும்தான் செய்தார்கள் என்றில்லை; கமல்ஹாசன் மாதிரியான பார்ப்பனர்கள் தொடங்கி பல முக்குலத்தோர் அல்லாதோரும்கூட இதைச் செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சினிமாக்களில் தேவராதிக்கம் கட்டமைக்கப்பட்டது குறித்து தனிக்கட்டுரையே எழுத வேண்டும். தேவர்சாதிப் பெண்ணைக் காதலித்ததால் சாதிய வன்முறை ஏவப்பட்டு மனநோயாளியாகும் தலித் இளைஞனைச் சித்தரிக்கும் ‘காதல்’, குறவர்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததால் அந்த குடும்பத்தையே விலக்கி வைக்கும் முக்குலத்துச் சாதிவெறியை அம்பலப்படுத்திய ‘பருத்திவீரன்’, தலித் & பள்ளர் முரண்பாட்டைச் சொன்ன ‘பாரதிகண்ணம்மா’ போன்ற சில படங்களைத் தவிர (இதனால் இந்த படங்கள் முற்றுமுழுதான & பிரச்சினைகள் எதுவுமற்ற அரசியல் சினிமாக்கள் என்று பொருளில்லை) பெரும்பாலும் தமிழ்ச்சினிமா என்பது முக்குலத்தோர் அதிகாரத்திற்கு ஒத்திசைந்தே உருவானது.
இலக்கியம்:
90களுக்குப் பிறகு உருவான கோட்பாட்டு வெளிச்சங்களில் சாதிய இழிவுகளுக்கு எதிராய்ப் பேசிய மனநிலை இன்றைய பெரும்பாலான இலக்கியவாதிகளிடம் இல்லை. தன்மய்யநோக்கு கொண்ட, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளே பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈழத் தமிழர்களுக்காகப் போராடத் துணிகிற கோணங்கி மாதிரியான படைப்பாளிகள் எப்போதும் சுயசாதி ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியதில்லை. தங்கள் படைப்புகளில் கூட பதிவு செய்ததில்லை.
சமீபத்தில் உயிரெழுத்து இதழில் இலக்கிய விமர்சகர் முருகேசபாண்டியனின் எதிர்வினை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. கவிஞர் கரிகாலன் காலச்சுவடு இதழ் குறித்து எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை. "சுந்தரராமசாமி பாவம், கண்ணன் பாவம், நோ நோ டாடி பாவம், மம்மி பாவம், ஆல் பேமிலி டேமேஜ்" என்று புலம்பும் முருகேசபாண்டியன் "பார்ப்பனர்களையே ஏன் திட்டுகிறீர்கள். இட ஒதுக்கீட்டினால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என்று அரற்றுகிறார். அரட்டை அரங்கத்தில் பேசிக் கைதட்டல் வாங்க வேண்டிய முருகேசபாண்டியன்தான் நம் காலத்து ‘இலக்கிய விமர்சகர்’.
இப்படியாகத்தான் சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் உருவாகியுள்ள மொன்னைத்தனம் நிரம்பிய இலக்கியவாதிகள் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவார்களா என்ன? இதனால்தான் "தேவர் ஜெயந்தி என்பது ஜனநாயகத்திற்கான மக்கள் கூடுகை" என்று ஜெயமோகன் ‘கருத்துமுத்து’ உதிர்க்கிறார். (ஆனால் இதே ஜெமோதான் ‘புரட்சி என்பதே மாஸ் ஹிஸ்டீரியா’ என்று ஏழாம் உலகத்தில் அருள்வாக்கு சொன்னவர்.) "நீதிக்கட்சி முக்குலத்தோருக்கு எதிரான குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியது" என்று கூசாமல் பொய் சொல்கிறார். அதுசரி கமலாதாஸையே கறுப்பு என்றவருக்கு இது எம்மாத்திரம்?
ஜெயமோகனின் மொழி ஆளுமையில் பலர் சொக்கிப் போவது உண்டாம். ஆனால் ஒரு சட்டத்தை எப்படி ‘பரப்ப’ முடியும் என்று அந்த சொக்கநாதர்களிடம் தான் கேட்க வேண்டும். (ஜெயமோகனுக்கு வந்த வாசகர் கடிதமொன்றில் முதுகுளத்தூர் கலவரம் குறித்து வாசகரொருவர் சுட்டிக்காட்டுகிறார். "முதுகுளத்தூர் பிரச்சினை குறித்து தனியாக எழுத வேண்டும்" என்கிறார் ஜெமோ. "அய்யய்யோ, அது வேறயா?" என்று அலறத் தோன்றியது.) காலச்சுவடுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆதரவாக எழுதுகிற முருகேசபாண்டியன்கள் ஜெயமோகனின் இந்த முக்குலத்துச்சார்பு கட்டுரை குறித்து எழுதுவார்களா என்ன?
இப்படியாக அரசியல், கலை, இலக்கியம் என எல்லாமும் சாதியக்கறை படிந்து இறுக்கம் சூழ்ந்துள்ள நிலையில் இந்த அழகிய கற்பனையை நீங்களும் கற்பனை செய்து பாருங்கள். சென்னை நந்தனத்தில் உள்ள ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை’யிலும் முத்துராமலிங்கத்தின் சிலையில் உள்ள பீடத்திலும் உள்ள ‘தேவர்’ சாதிப்பெயரைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்தை ஒரு இயக்கம் நடத்துகிறது என்று கற்பனை செய்யுங்கள். நிச்சயமாக அது இந்தியத் தேசியக்கொடியை எரிப்பதை விடவும் கடுமையான போராட்டமாகத் தானிருக்கும். அரசு ஒடுக்குமுறையையும் சாதிய வன்முறையையும் ஒருசேர சந்திக்கும் போராட்டமாகத் தானிருக்கும். ஆனால் சாதியெதிர்ப்புக் கருத்தியலின் சுயமரியாதையைக் காப்பாற்றும் போராட்டமாக நிச்சயம் அது இருக்கும். ஆனால் அதை யார் செய்வது? பெரியார் தி.க? ம.க.இ.க? ஆதித்தமிழர்பேரவை? காலம் நம் முன்வைக்கும் வரலாற்றுச் சவால் இது.
- சுகுணா திவாகர்
well written article. I first want to appreciate the honesty and boldness in handling this subject. Most writers including politicians delude us into believing that Brahmins are the only problem...!! Well in my view, they form less than 3% of the problem.
More powerful castes who NOT only enjoy historical privilege, but also enjoy the patronage of ruling parties create so much havoc for the Dalits and other oppressed massess.
we have to only go 10Kms into any of the towns in TN and observe life in any village...!!
This is a subject that bothers a lot of us who genuinely worry about the casteist moorings of our Tamil society, which the vote bank politics has made into a simplistic issue and mere sound bytes.
I must point however to these things:
1. Like what our brother Arul Ezhilan has pointed out, I also notice a subtle difference in your critique of Karunanidhi and Jayalalitha. Both in my view are casteist politicians who will do anything to Cling on to power. Infact atleast Jaya is brash, but kalaignar is more dangerous because he is subtle..! But the difference as Pulavar Tamarai pointed out is between "No moon day and the day after"..!
2. A well written article like this should also deal with the entire casteist apparatus. You have only handled the aspect of Devars and Brahmins(a cliche). What about Gounders and Chettiars and the rest? only when we discuss the whole issue can a solution be found.
3. In light of the happenings in Eelam, it is important that as a society we unite on the basis of our language and drive the discussion towards the solution to these issues. We Tamilians staying abroad are able to easily realte with each other on the basis of language (whether Devar, Dalit or Brahmin)and infact in melbourne we even have community events with our Eelam brothers.
But somehow this is NOT happening in TN..!!Primary reason being people like Kalaignar and Jayalalith want to perpetuate this caste issues till their grand children can become CMs talking about these issues. We need educate the people on this as well...! "keetru.com" is our only hope in achieving this.
அது சரி, இந்திய தேசிய கொடியை எரித்த போராட்டங்களில் முதல் கொடியை எரித்து மற்றவர்க்கு வழிகாட்டிய சூனா தீனா, இப்பவும் தார் வாளியோடு வெளிவந்து முன்மாதிரியாய் திகழக் கூடாதா என்ன?
அது என்ன சுகுணா ஓர வஞ்சனை. கருமாந்திரம் பெயரை மட்டும் அழிப்பானேன், அது என்ன காந்தி சிலையா அக்டோபர் 2கு மாலை போட. சிலையையும் புல்டோசரை கொண்டு நிரவிர வேண்டியதுதானே.. ஆனால் நடக்குமா? ஏன் கேட்கிறேன் என்றால் சிறீரங்கனாதனையு ம் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் என்னாளோ அந்நாளே தமிழருக்கு நான்னாள் என்று கனக சுப்பு ரத்தினம் பாடி பல ஆண்டுகளாகியும் இப்போது தான் ம.க.இ.க தோழர்கள் ஆறுமுக சாமியை சிதம்பரத்தில் பாட வைத்துள்ளார்கள் . இனி தார்பூச எவ்வளவு காலம் ஆகுமோ? சரி காத்திருப்போம். வேறென்ன செய்ய முடியும்.
மார்க்ஸிஸ்டுகளின் ஆலய நுழைவுப் போராட்டம் பற்றிய எனது கட்டுரை எந்த உள்நோக்கமும், சார்பு நிலையும் இல்லாமல், நேர்மையுடன் எழுதப்பட்டக் கட்டுரை. ஒரு சராசரி வாசகன் பலவிதமாகப் பின்னூட்டம் எழுதலாம். ஆனால், ஒரு எழுத்தாளர் இப்படிக் கருத்துரைப்பது அழகா? "Objective Reasoning" என்பது தமிழன் கைக்கொள்ள முடியாததா? நான் ஒரு இயற்பியல் அறிஞன். எனவே, இது என்னின் ஒரு அங்கம் போல.
எந்த ஒரு சிக்கலுக்கும் பவ வழிகளில் தீர்வு கிடைக்கலாம். ஆனால், எந்த வழியில் சென்றால், செலவும், சேதாரமும் மிகையாகாமல் (The Most Ergonomic Path) திட்டமிட்ட விளைவுகளை அடையமுடியும் என்பதை ஆய்வது ஒரு இயற்பியல் அறிஞனின் இயல்பான அனுகுமுறை. அதைத் தான் அக்கட்டுரையில் நிறைவாகவே செய்துள்ளேன். காரண, காரியத்தோடு தௌிவாக எழுதப்பட்ட அக்கட்டுரையை, இப்படி ஒரு எழுத்தாளர் விமர்சிப்பார் என்றால் அது எனக்கு விரக்தியைத்தான் கொடுக்கிறது. ஈழம் சிக்கல் சார்ந்து முதன்மையாகவும், பழந்தமிழர் பற்றி அடுத்த நிலையிலும், கடந்த இரண்டு வருடங்களாக நிறையவே பின்னூட்டம் எழுதியுள்ளேன். அவை தங்களது கண்களில் படாதது வியப்பாக இருக்கிறது. அவற்றைப் படித்திருந்தால் இப்படி நீங்கள் எழுதி இருப்பீர்களா?
ஒரு சான்று மட்டும் இங்கு வைக்கிறேன். இதுவும் தேவர்-பழந்தமிழர ் சமூகங்கள் சார்ந்த சிக்கல் பற்றியது தான். நல்லது, நீங்கள் ஒரு பொருத்தமான இடத்தில் தான் என்னை விமர்சித்துள்ளீ ர்கள். சட்டக் கல்லூரி அடிதடி பற்றி, சரியாக ஒரு வருடம் ஐந்து நாட்களுக்கு முன்பு,
சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை... அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!
என்ற தலைப்பில் வௌியான வினவு அவர்களின் கட்டுரைக்கான "எனது பின்னூட்டத்தை" இங்கே எடுத்துக் காட்டுகிறேன். அது என்னிலையைத் தௌிவாக விளக்கும்.
//
குருபூஜை என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. தெரிந்தபின்பு அதிர்ச்சியடைகின ்றேன். இது போன்ற அபத்தங்களுக்கு ஏன் சட்டம் மூலம் தடைவிதிக்கக் கூடாது?
நாற்றமெடுத்த சமுதாயமைய்யா இது. அடச்சீ...ச்சீ...
சென்னை போன்ற காஸ்மோ பாலிடன் நகரிலும் தீண்டாமையா?
21ம் நூற்றாண்டு. இத்தனை நூல்கள். இத்தனை தத்துவங்கள். கணணிகள். விண்வெளி ஆய்வுகள். ஆனால், அடே மனிதா, இன்றும் நீ ஒரு காட்டுமிராண்டி! மனித விலங்கு!!
ஆயினும், காலம் காலமாக இப்படி ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் ஆத்திரத்தை ஞாயப்படுத்தவே தோன்றுகின்றது.
ஆடி வாங்கிக் கொண்டிருந்தால் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான். திருப்பி அடிக்கும் போது தான் அடுத்தவனுக்கு அச்சம் பிறக்கும்.
நம்மீது அடுத்தவனுக்கு இருக்கும் அச்சம் தான், நமது பாதுகாப்பு. பௌத்த வழி வேலைக்குதவாது. வருத்தத்தோடு இப்படி உபதேசிக்க வேண்டியுள்ளது. இது ஹோமோ சாப்பியன்கள் 'மனிதர்' களாகும் வரைதான்.
//
இதன் மூலம் உங்களது என்மீதான குற்றச்சாட்டு மிகவும் தவறென நிறுவுகிறேன்.
நீங்கள் யார், உங்களின் அரசியல் பின்புலம் எது என்று எனக்கு இப்போதும் தெரியாது. நான் எதிர்கொள்வது கருத்துக்களைத் தான். கடந்த ஒரு வருடமாகத்தான் கட்டரைகள் எழுதத் தொடங்கினேன். கீற்றை எனது தளமாகக் கொண்டுள்ளேன். இங்கு வேறுபட்டப் பல சிற்றிதழ்கள் வௌியிடப் படுவதுதான் அதன் காரணம்.
எனது அரசியலைத் தௌிவாகச் சொல்லி விடுகிறேன்.
----------
சாதி, மத பேதமற்ற சம உரிமையுள்ள சமூகமாக இம்மன்னை மாற்றுவது. அதுவரை, அனைத்துத் துறையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக் காக குரல் கொடுப்பது.
அனைத்து தமிழ் மக்களின் கல்வி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற் கான நேரடி செயல்பாடுகளில் இறங்குவது.
அடிமை புத்தி கொண்ட தமிழனை அவனது மெய்யான பெருமிதங்களை நினைவுபடுத்தி, தன்மானமுள்ளவனாக மீட்டெடுப்பது.
தமிழ் மன்னைத் தமிழருக்கானதாக உறுதி செய்ய, தமிழ்த்தேசியம் கோருவது. (தமிழ் நாட்டில் நெடுநாட்களாக வாழும் அனைவரும் தமிழரே. 56க்குப் பிறகு இங்கு வந்தேறியவர்கள் அல்ல).
உலக அமைதியையும், தேசம் கடந்த நேசத்தையும் வளர்ப்பது.
----------
அனைவருக்கும் நல்லவனாக ஒரு சீர்திருத்தவாதி இருக்க முடியாது. அனைவரின் வெறுப்பையும் எதிர்கொண்டாலும் தனது நேர்மையான சிந்தையால் சரி எனப்படுவதை எழுதுபவனே, ஒரு உண்மையான எழுத்தாளன். இது எனது வரையறை.
;; தலித்களின் உரிமைகளுக்காக களத்தில் இருப்பவர்கள் மார்க்சிஸ்ட்களே சோ.சுரே~
வணக்கம்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, வ.வே.சு. ஐயர் இத்தியாதி
பெயர்களை உச்சரிக்கும்போத ு ஏற்படாத கலகக்குரல் முத்துராமலிங்கத ்தேவர் என்றவுடன் உங்களுக்கும் எனக்கும் ஏற்படுவதற்கு நியாயமான காரணங்கள் பல உண்டு.
அத்துடன் ஆதிக்கம். ஆணவம், ஆட்சி , தலைமை .. இன்னபிற சமூக ஆளுமைகளின் குறியீடாக தேவர் சமூகத்தையும் இழிவு, ஒழுக்கக்கேடு. சோம்பேறித்தனம்,
குடிபோதை இன்னபிற குறைபாடுகளின் குறியீடாக தலித் சமூகத்தையும் காட்சிப்படுத்தி க் கொண்டிருக்கும் ஊடகங்களை உடைக்காமல் வெறும் சிலைகளை எதிர்ப்பதில் பயனில்லை.
வாழ்த்துகளுடன்,
புதியமாதவி,
மும்பை
Neengalam vara oct30, pasumpon poi indha katturaya satham pottu padichuttu vanga, nalla irukkm.
சுகுணா திவாகர்.
ஜெயந்தி என்றவொன்று தெய்வீக வடிவமாய் வாழ்ந்த மனிதர்களுக்கு செய்யவேண்டிய ஒன்று.நான் அறிந்த வரை முத்துராமலிங்க தேவரை ஒரு தெய்வீக வடிவமாய் தான் பார்க்கிறேன். அதற்க்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே சொல்லியே ஆகவேண்டிய அவசியம் இல்லையென நான் கருதுகிறேன்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தியவர ். தான் சார்ந்த மக்களுக்கான குற்ற பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர். ஆங்கிலோருக்கு எதிராக போராட இந்திய தேசிய ராணுவதிற்க்காக பல இளைஞர்களை இணைய வைத்தவர்.
நீங்க என்ன கருத்தை சொல்ல வரீங்க? சாதியே இல்லாமல் ஒழிக்க போகிறேன் என்றா? ஹா ஹா ஹா. அப்படி சொன்னீங்க ன்னா உங்களை விட ஒரு பெரிய முட்டாள் உலகில் யாருமே இருக்க முடியாது. அது என்ன தேவர் என்ற பெயரை தார் பூசி அளித்தால் சாதியே இல்லாமல் போய் விடுமா? சரியான காமெடி இது தான்.
சாதிக்காக இட ஒதிக்கீடு வேண்டுமென்றால் ஆதி தமிழர் பேரவை உங்களுக்கு வேண்டும். அதை மற்றவன் செய்தால் வயிறு எரிந்து எதாவது இதுபோன்ற கட்டுரை என்ற பெயரில் புலம்பி தீர்ப்பது.
சாதியை பெரியாராலும் ஒழிக்க முடியவில்லை. இன்னும் கோடி பெரியார் வந்தாலும் ஒழிக்க முடியாது. அது வேரூன்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவனவன் தன சாதிக்கு ஒரு கட்சி வஞ்சி இருக்கான். அந்த ஒரு சாதிக்கும் பல கட்சிகளும் இருக்கு. குறிப்பா பள்ளர்களுக்கு கிருஷ்ண சாமியின் புதிய தமிழகம், பறையர்களுக்கு திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், ஆதி தமிழர் பேரவை, அருந்ததி பேரவை அது இதுன்னு ஆயிரம் சாதி கட்சிகள் இருக்கு. அந்த சாதி பெயரை வைத்துக்கொண்டு அரசியல் பண்ணுவது என்றே முழு நேர தொழிலாக பண்ணிவரும் கும்பல்கள் பகுத்தறிவாதி என்ற தோல் போர்த்தி ஊரை ஏமாற்றி வருகிறது.
தேர்தல் வந்தால் தன சாதி ஓட்டு இத்தனை என்கிட்டே இருக்கு, அதுக்கான கோடியை வாங்கிட்டு பொழப்பை ஓட்டும் அந்த கும்பல்கள் இருக்கும் வரை சாதியை ஒழிக்க முடியாது. சாதியை ஒழிக்கணும் ன்னா சாதிய பெயருக்கு தாரை பூசினால் மட்டும் போதாது புரியுதா...
இந்த சாதியை ஒழிக்க போறேன்னு சொல்லும் எல்லோரும் ஈழத்தை ஆதரிக்கின்றன. அந்த ஈழத்தின் தேசிய தலைவர் பெயரின் பின்னால் இருக்கும் வார்த்தையான பிள்ளை என்ற சாதிய பெயரை முதலில் தார் பூசி அழிக்கட்டும்.
ஒரு விளையாட்டு போட்டியின் வீரர்களை எடுத்து கொள்வோம்: ஷர்மா, சிங்க், டெண்டுல்கர், படேல் என்ற ஒருவித தான் சார்ந்த அடையாளத்தை சாதிய பெயராக வைத்து இருப்பதை என்ன செய்ய போகிர்ரீர்கள்? சரி தேசிய கட்சியின் தலைவர்களின் பின்னால் இருப்பதை தார் பூசி அழிக்கனும் அதை செய்ய கூடிய தைரியம் இருக்கா?
உம்: சந்திரபாபு"நாயு டு", ராஜசேகர"ரெட்டி" , சந்திர சேகர"ராவ்", ராகுல்"காந்தி", லாலு பிரசாத் "யாதவ்"... இது போல பல இருக்கு முதலில் அதை எல்லாம் தார் பூசி அழிச்சிட்டு இங்கே வந்து உங்கள் வயித்தெரிசலை வார்த்தைகாளால் தீர்த்து கொள்ளலாம்.
முக்கியமா உங்களுக்கெல்லாம ் இன்னொரு ஒற்றுமை விடுதலை புலிகளை ஆதிர்ப்பது. இது மட்டும்தான் ஒரேயொரு நல்ல கொள்கை வச்சி இருக்கீங்க... அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு தேசிய தலைவர் அண்ணன் வேலு "பிள்ளை" பிரபாகரன் பெயரில்லும் பிள்ளை என்ற சாதிய அடையாளம் இருக்கு. அதயும் முடிஞ்சா தார் பூசி அழியுங்கள்.
அது ஏன் உங்களுக்கு எல்லாம் தேவர் ன்னு சொன்னாலே உடம்பு முழுதும் எரியுது? நீங்களும் போட்டுக்க வேண்டியது தானே...(தானும் படுக்குரதல்ல ... தள்ளியும் படுக்குரதல்ல... என்ன பொழப்பு இது?)
இதையே ஒரு வேலையை செஞ்சிகிட்டு இருக்கீங்க பல பேரு.. கேட்டா பகுத்தறிவாதி ன்னு பசுதோல் போர்த்திகிறது.. . உங்க பகுத்தறிவாதம் தான் என்ன?சரியா புரிஞ்சிக்க முடியல? அதற்க்கான சரியான அர்த்தம் என்ன? பள்ளர், பறையரை தலையில் தூக்கி கொள்ள வேண்டும்... மற்றவனை காலில் போடணும்... கேட்டால் சாதியே இல்லை ன்னு சொல்றது... அருந்ததியர் இட ஒதிக்கீடு வேணும்னு ஒரு புறம் கொடி பிடிக்கிறது... மறு புறம் சாதி ஒதிக்கீடு வேண்டாம்னு நடிக்கிறதுசாதி இல்லை நு தார் பூச சொல்வது. போயி புள்ள குட்டியை படிக்க வைக்கிற வழிய பாருங்க.. புண்ணியமாவது போகும்.
ஒருத்தவன் இல்ல ஒரு கோடி பெரியார் வந்தாலும் ஒரு _____யும் பிடுங்க முடியாது... அதை புரிஞ்சிக்கிற முயற்சி பண்ணுங்க. ஏதோ பேனா இருக்கு,ஊடகம் இருக்கு ன்னு மனசுல உள்ளதை எல்லாம் உளறி தீர்க்க வேண்டாம்.
நன்றி
இதை இங்கே வெளியிட மாட்டீர்கள் என எனக்கு நிச்சயம் தெரிவதால் மீண்டுமொரு நன்றி.
yaaravathu elutha solli kasu kuduthaangala.. .ada neenga media la irundha enna vena eluthuveengala. ...(mudinja ,dhayiriyam irundha,aananda vikatan la publish pannunga paakalaam..haha h)munnum theriyaathu.... pinnum theriyaathu.... sol buthiyum kedayaathu...su ya buthuiyum kedayaathu...
indru saathiyam pesadhavarkal yaarumey illai....aana thevannu sonna udane saaathi veri....ayyar ,nadar,parayann u sonna adhu..patru...e nna koduma sir idhu..
ella saathilayum thalaivarkal irukaanga thaana...ellork um jayanthi vila kondadunga...na anga enna venaamna sonnom...unmaya solla ponal ..engaloda ottrumaya paathu,unarva paathu ellorkum bayam...avangal oda kaithadikala ungala mathiri ippadi ethana per kathinaalum onnum panna mudiyathunnu purinjikanga... .mudinja unga saathiya munnethurathukk u enna valinnu parunga,,,,,
nandri...nalla kathineenga.... aana nallallla..bett er luck next time....
aenya Mr,suguna thaan yaarayo thirupthipaduth arathukku eluthunaru appadinna..athu ennaya kooda jalra thatrathukku ithana peru....
@yogesh
vangayya ...athu enna...thaar poosi alikanuma...bul ldozer vachu idikanuma...hahaha...
antha silaiyai nerukku nera ninnu paakra dhairiyum irukka muthalla...
@pudhiya madhavi
amma thaaye vaanga...ennath u muthuramalinga thevarnu sonna ungalluku kalahakural kekutha...nalla parunga athu suguna thivakaroda kurala iruka poguthu...unga pera kettal sethu pona kovalan kural thaan kekuthu...
@suguna
vangayya..eluthaalarey...neenga vena nalaiku thaar tinna eduthittu vareengala...th aniyallam vara venaam ..veetla periavanga irundhalum thunaikku kootitu vaanga....ada ithula enna comedynna ungala poi oruthan indha katturaiyai oct 30 pasumpon la poi vasikka solraan...mudin ja oru thadava unga veetuku veliaya ninnu vasikka mudiyumaannu parunga...
aana oru unmainga..innik u unga punniyathula nalla vilundhu vilundhu sirichen..
vanthutaryaa...adutha jaalra..
vaanga naatama suresh....solli taarpa theerpa....neen ga than idhuku sponsor panna party ah....
neenga elitjuna samooha thondu,,,naanga elithuna jaathi veri.....hahaha ...ore thamasha irukku...
கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சி சிலை உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ? மேலும் என்னட்ற சிலைகளும் மட்றும் தெருக்களும் முதலி , செட்டி , பிள்ளை போன்ற சாதி பெயர்களை தாங்கி உள்ளன... அதை பட்ரியும் சொல்லுங்களேன் .... சென்னை ல படையசிக்கள் அதிகம் அதனால் அவர்கள் சிலை தொட்டு பார்ர்க்க பயம் அப்படி தானே ...
Example:
Pasumpon Muthuramalinga Thevar College, Usilampatti.
Arumugam Pillai Seethai Ammal College , Thirupattur
Alagappa Chettiar College of Engineering & Technology, Karaikudi
.....
.....
-- தேவரைப்பற்றி பேசுவதற்கு உனக்குஎன்ன தகுதி உள்ளது. இன்னும் ஒருமுறை நீ தேவரைப்பற்றி விமர்சன்ம்செய்த ால் உன்னை நார் நாராய் கிழித்து நடு ரோடுல தொங்கவிட்டுருவே ன்.
oru visayam unkalukku teriyuma suguna , 1000 varudankalukku melaka intha thamilkathai aanada inam enkaludayathu , veru entha jathikkum ithu kidayathu , irunthalum avarkalal aala mudiyathu en teriyuma ? uyirukkum udamaikkum anjatha oru inam enkaludayathu , inru arasiyalvathika l ethanai perku tairiyam irukku. so , aanada parambarai nankal than . athukaka unkala enka keela irukka solla villai , varthaiyai payanbatuthum pothu konjam yosikkavum , enkal jathikaran ipo evanum aruvala thookarathu kedayathu atha thooka vachurathinka, unkalukku tairiyam iruntha nama rendu perum nera meeta pannalama
nanri
note> inam kaakum veera maravarkale , sooriyanai sundeli keli pesuthu sundelikku SOORIYANAI pathi teriyathu pavam
VALKA THEVAR KULAM
VALKA EM MAKKAL
VALKA TAMIL INAM
உள்ள வேறுபாடு சுயமரியாதைக்காக ப் போராடிய போராளிக்கும் ,ஒடுக்குமுறையை ஏவிய கொலைகாரனுக்கும் உள்ள வேறுபாடு" மிக சரியானது..
ஜாதி வெறியை தூண்டுவது உங்களின் கடமை. அப்படித்தானே.
RSS feed for comments to this post