இயற்கையின் படைப்பில் மனித உடலில் கண்கள் ஒப்பற்ற உறுப்பு என்பதோடல்லாமல் முகத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பதும் கண்களே; பிற பொருளையெல்லாம் நமக்கு காட்டும் கண்கள் தன்னை மட்டும் முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் நமக்கு காட்டுகிறது. நாகரீகமும் அறிவியல் வளர்ச்சியும் ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியும் அதிகரித்துள்ள இக்காலத்தில் நோய்கள் குறைந்த பாடில்லை.
பள்ளி செல்லும் சின்னஞ்சிறிய பாலகர்கள் கண் கோளாறினால் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து பள்ளிக்குச் செல்லும் காட்சி கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேர்களுக்கு (1,50,00,000) பார்வையில்லை. இதில் 55% சதவீதம் பேர் கண்புரை காரணமாக பார்வை பாதிப்பு ஏற்பட் டுள்ளது.
மனித உடல மைப்பில் நெற்றிக்கு கீழே இருபுறமும் குகை போன்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக கண்கள் அமைய பெற்று இருக் கின்றன. முழு கண்ணின் 15% சதவீதம் மட்டுமே நமது பார்வைக்கு தென்படுகிறது. மீதி 85% சதவீதம் கண் நமது பார்வையில் கானும். 15% சதவீதத்திற்கு பின்புறமாய் மறைந்துள்ளது. நெற்றியின் வியர்வை கண்ணை நோக்கி வழிந்துவிடாமல் புருவ ரோமங்கள் பார்த்துக் கொள்கிறது. கண்கள் அதிக வெளிச்சத்தை காண நேரும் போதும் ஆபத்தான அவசர நேரத்திலும் கண்களை இமைகள் மூடித்திறந்து காப்பாற்றி வருகிறது.
மனதுக்கும் கண்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. மனதில் துக்கம், துயரம், வேதனைப் படுகிற தருணங்களில் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. மனம் மகிழ்ச்சியாக உள்ள சமயங்களில் கண்கள் ஒளிவீசி ஜொலிக்கிறது. சிலர் இமை மூடித்திறக்கும் அழகே தனியழகு! இச்செயலை பல கவிஞர் பெருமக்கள் கவிதைக ளாக, பாடலாக தந்துள்ளனர். இலக்கியங் களில் கூட மான்விழி, வேல்விழி, கயல்விழி, மீன்விழி என வர்ணித்திருக்கிறார்கள். வாய் மொழி கூறாமல் கண்களால் ஜாடை காட்டி மனதிலுள்ள எண் ணத்தை பகிர்ந்து கொள்ளக் கூடியளவிற்கு கண் கள் மிக வலிமைமிக்க முக்கிய உறுப்பாக திகழ் கிறது.
பிறந்த சிசு 6 மாதங்கள் கழித்துத்தான் கண்ணினுடைய முழு வளர்ச்சியை பெறுகிறது. உயிரினங்களில் சிலந்திக்கு எட்டு கண்கள் உள்ளன. மீன்கொத்தி பறவைக்கு தண்ணீரிலும் பார்வை தெளிவாகத் தெரியும். கருடன், பருந்து இவை இரண்டும் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தனது இரையை தரையில் துல்லியமாக கண்டு பிடித்து விடும். முத லைக்கு வியர்வை கண்வழியாகவே வெளியேறும். மீனுக்கு கண்ணை மூடி தூங்கத்தெரியாது. மனிதனுக்கு தூக்கத்திலும் கண்விழிகள் இருபுறமும் அசைந்து கொண்டு தானிருக்கும். சிங்கம் நாள் ஒன்றுக்கு ஒருமுறைதான் கண்களை மூடித்திறக்கிறது. குரங்கு நாள் ஒன்றுக்கு 45 முறை இமையை மூடித்திறக்கிறது. கண்களை மூடித்திறப்பின் மூலம் கண் வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளமுடியும்.
கண்களின் செயல்பாடுகள் :
வெளிச்சத்தில் உள்ள பொருட்களை மட்டுமே கண்ணால் காணமுடிகிறது. பார்வையில் படும் பிம்பம் முதலில் (Cornea) கார்னியா எனும் வெள்ளை விழி பகுதியில் சேகரிக்கப்பட்டு கண்ணின் நடுவில் உள்ள (Iris) ஐரீஸ் எனும் கருவிழிக்கும் கருவிழியின் நடுவில் உள்ள கண் மணிக்கும் ஒளிக் கற்றைகளாக அனுப்பி வைக்கப்படுகிறது. கார்னியா மூலம் கிடைக்கப் பெற்ற ஒலிக்கற்றைகளுக்கு தகுந்தாற் போல் கரு விழியும் கண்மணியும் சுருங்கி விரிந்து கருவிழிக்கு பின்புறமுள்ள ஒளி எளிதாக ஊடுருவக்கூடிய புரதங்களின் தொகுப்பான விழி லென்ஸ்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விழி லென்ஸ தாங்கியுள்ள சிலியரி தசைகள் முன்னும் பின்னும் அசைந்து சுருங்கி விரிந்து வெங்காய சருகு அளவு கனமும் கோடிக்கணக்கான நரம்புகளை கொண்டுள்ள (Retina) ரெட்டினா எனும் விழித்திரையில் பிம்பத்தை தலைகீழாக பதிய செய்கிறது. இங்கிருந்து (Optic) ஆப்டிக் எனும் நரம்புகள் மூலம் மூளையை சென்றடைகிறது.
இரு கண்களிலிருந்தும் மூளைக்கு வரும் பிம்பங்களை மூளை ஒருங்கிணைத்து தலைகீழ் பிம்பத்தை நேராக்கி அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று தண்டுவட நரம்புகள் மூலம் மூளையின் உத்தர வுகள் சென்றடைகின்றன. ஏதாவது ஒரு கண்ணில் குறைபாடு இருந்து பிம்பம் தெளிவற்று இருந்தால் சரியாக உள்ள பிம்பத்தை மட்டும் மூளை எடுத்துக்கொள்ளும். இவ்வளவு வேலைகளுக்கும் ஒரு விநாடியின் 500-ல் 1 பங்கு நேரத்தில் செய்து முடித்துவிடுகிறது.
Cataract - கேடராக்ட் என்றால் நீர்வீழ்ச்சி என்று பொருள். தமிழில் கண்புரை எனப்படு கிறது. கண்ணில் உள்ள லென்ஸில் தோன்றும் குறைபாட்டினால் பார்வை மங்குதல், பொருட்கள் பனித்திரையினூடே பார்க்கப்படுவது போல் தோன்றுதல். பிரகாசமான வெளிச்சம் கண்களை கூசச் செய்தல். பௌர்ணமி நிலா கூட இரண்டு மூன்றாக தெரிதல் போன்ற அறிகுறிகள் தென்படும்போது கேடராக்ட் அல்லது கண்புரை என அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட வயதுக்கு மேல் விழிலென்ஸின் முன்புறம் பழுதடைய துவங்குகிறது.
லென்ஸின் காலாவதியாகிப் போன திசுக்கள் இயற்கையாக புதுப்பிக்கப்படாததாலும் கழிவுகள் கருவிழியிலும் லென்ஸ் மீதும் படிந்து வருவதாலும் லென்ஸின் தகுதி தேய்வினாலும் லென்ஸின் ஆடி ஒளி ஊடுருவிப் பாயும் தன் மையை இழந்ததினால் விழித்திரையில் பிம்பம் தெளிவாக பதிவாகததின் காரணமாகவும், உஷ்ண மான சூழ்நிலைகளிலும் நெருப்பின் அருகே பணிபுரிபவர்களுக்கும் விபத்து நேரங்களில் கண்ணில் காயம்படுவதாலும் பென்சில், பேனா, குச்சி போன்ற பொருட்கள் எதிர்பாராதவிதமாக கண்ணில் படுவதாலும், ஆஸ்துமா, மூட்டுவலி நோய்களுக்கு வழங்கப்படும் ஸ்டீராய்டு மருந்து கள், நீரழிவு பரம்பரை காரணமாகவும் காய்கறிகள், கீரைகள் உணவில் போதுமான அளவு சேர்த்துக் கொள்ளாததின் காரணமாகவும் கர்ப்ப காலத்தில் தாய்க்கு ரூபல்லா வைரஸ் போன்ற நோய்த் தொற்றால் கருக் குழந்தையின் கண்ணில் கண்புரை தோன்றலாம்.
சிகிச்சை முறைகள் :
- ஆங்கில மருத்துவ முறையை பொறுத்த வரையில் விழிலென்ஸ் மீது படிந்துள்ள கழிவுகளை அறுவை செய்து நீக்குவதும் புதிய லென்ஸ் பொருத்துவதுமாகும்.
- முற்றிய நிலையில்லாத கண்புரைக்கு ஹோமியோ அக்குப்பஞ்சர், திசு மருத்துவம் மூலம் விரைவில் குணம் பெறலாம்.
ஹோமியோபதி :
-
15 நாட்களுக்கு ஒரு முறை காஸ்டிகம் 1M.
-
மாதவிடாய் முற்றுப் பெற்ற பெண்களுக்கு தோன்றும் கண் புரைக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை செபியா 1M மற்றும் கல்கேரியா கார்ப், கல்கேரியா ப்ளூ, நேட்ரம்மூர், பாஸ் பரஸ்,சிலிகா ஆகிய மருந்து களும் நோயாளி யின் உடல்வாகிற் கேற்ப தேர்வு செய்யப்படும்.இத்துடன் CMS Eye Drops தினம் 3 வேளை இரண்டு சொட்டு வீதம் கண்ணில் விட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
-
திசு மருத்துவத்தில் முதன்மையான மருந்து CF6X மற்றும் CP6X, NM6X, சிலிகா 6X KM6X. ஆகிய மருந்துகள் பயன்படும்.
அக்குப்பஞ்சர் புள்ளிகள் :
DU:20, GB:8, 14, 20, 37 , St:1, UB:2, EX:2,4, LIV:3, LI:4, 11
கண்புரை ஏற்படுவதை தவிர்க்க, பார்வையை மேம்படுத்த உணவில் சேர்க்க வேண்டியவை :
சாத்துக்குடி, திராட்சை, ஆரஞ்சு, நெல்லிக் கனி, மாம்பழம், பலாப்பழம், மாதுளை, கரும்பு, எலுமிச்சை, தக்காளி, தர்பூசணி, வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசிப்பழம், பேரீட்சை, உலர் திராட்சை, பப்பாளி, கொய்யா, முந்திரி, தேங்காய், இளநீர், முருங்கை, வெள்ளரி, காரட், முட்டைக் கோஸ், முள்ளங்கி, புடலை, பீர்க்கை, வெண் பூசணி, வெங்காயம், அவரை, பீன்ஸ், உருளைக் கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பொன் னாங்கன்னி, மணத்தக்காளி, வெண்ணெய், பச்சைப் பயிறு,வேர்க்கடலை, கம்பு, கோதுமை, உளுந்து, முளைக்கட்டிய தானியங்கள்.
ஆலோசனைகள் :
-
மன அமைதியும், மூச்சுப் பயிற்சியும், சத்தான உணவும், தெளிவான பார்வைக்கு அவசியம்.
-
மன உழைச்சலும், கவலையும் தெளிவற்ற பார்வைக்கு முதற்காரணம்.
-
முருங்கையும், நெல்லிக்கனியும் கண்களின் நண்பன்.
-
சமைக்காத காரட், கறிவேப்பிலையும் கண்களுக்கான மிகச் சிறந்த டானிக்.
-
கண்களில் தூசி விழுந்தால் விரலால் தேய்க்கக்கூடாது. இமையை திறந்து மூடினால் கண்ணீருடன் தூசி சேர்ந்து வெளியேறி விடும்.கண்களுக்கு மிகப்பெரிய பகை புகையாகும்.
-
பச்சை நிறம் பார்வையை மேம்படுத்துவ தோடு கண்களுக்கு குளிர்ச்சியை தரும்.
-
உணவு உண்டதும் சிறிது நேர ஓய்வின்றி கடின வேலையும், மூளை உழைப்பும் செரிமானத்தில் தடையேற்படுவதோடு பார்வைகோளாறையும் உண்டாக்கும்.