1. நீல நிற மேடையிலே
கோடி மலர் கிடக்குது.
எடுப்பாரும் இல்லை
தொடுப்பாரும் இல்லை!-அது என்ன?
2. எட்டாத தூரத்திலே
எவரும் இல்லா காட்டிலே
எழிலான பெண் ஒருத்தி
இரவெல்லாம் சிரிக்கிறாள்!-அவள் யார்?
3. விதைக்காத விதை விண்ணிலே
அறுக்காத கதிர் மண்ணிலே!-அது என்ன?
4. ஊருக்கு அழகு எது என்றேன்
ஒன்றுடன் சேர்ந்த அய்ந்து என்றார்!-அது என்ன?
5. சித்திரையில் சிறு பிள்ளை
வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப்பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?
6. உச்சியில் பூவிருக்கும்
ஊருணிக் கரையிலிருக்கும்
வெள்ளம் புரண்டு வரும்
அவரை வீழ்த்த முடியாது!-அவர் யார்?
7. பூத்த போது மஞ்சள்
பூத்ததும் சிவப்பு
காய்த்த போது சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?
8. வந்ததுதான் வந்தீர்களே
வந்து ஒருதரம் போனீர்களே
போய் ஒரு தரம் வந்தீர்களே
போனால் இனிமேல் வருவீர்களா?-அவர் யார்?
9. அண்ணன் தம்பி அய்வரும்
ஆளுக்கு ஆள் வேறு உயரம்
அய்வர் வீட்டுக்கும் ஒரே முற்றம்!-அது என்ன?
10. மூன்றெழுத்து விலங்கு.
நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்
கடைசி எழுத்தோ மாதமாகும்!-அவை யாவை?
விடைகள் :
1. விண்மீன்கள்
2. நிலா
3. சூரியன், சூரிய ஒளி
4. ஆறு
5. பனம்பழம்
6. நாணல் புல்
7. பேரிச்சை
8. பல்
9. விரல்கள், உள்ளங்கை.
10. கழுதை
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- தலித் முரசு செய்தியாளர்
- பிரிவு: தலித் முரசு - நவம்பர் 2008