பீகார்ல எதோ காங்கிரசு பிச்சை எடுத்து பொழைச்சிட்டு இருந்துச்சு. அதை கூட எடுக்கவுடாம அன்ட்ராயிரக் கழட்டி ஊரைவிட்டு விரட்டுனவரு நம்ம காங்கிரசோட வருங்கால தூணு. அதுனால இப்போ எந்த ஊருக்கு போனாலும் காங்கிரஸ் தலைவரு எல்லாம் வீட்டுல ஆமை புகுந்துட்ட மாதிரி பதறுறாங்களாம். ஒருத்தர் ராகுல் வந்துட்டு போன தொகுதிய கழுவி ஓமம் வளர்த்ததா கூட தகவல்!! நம்மாளு பார்த்தாரு.. இனிமே காங்கிரசே இல்லாத ஊருக்கு தான்டா டூர் போனும்னு முடிவு பண்ணி நேரா தமிழ்நாட்டுக்கு வந்துட்டாரு!

"தொண்டர்களே நான் எப்படி காங்கிரசை முன்னேத்த போறென்னா.. மச்சி நீ கேளேன்.. மச்சி நீ கேளேன்"னு சொல்றப்ப "போடா.. சுடுதண்ணிய மூஞ்சில புச்சி ஊத்திருவேன்"னு எல்லாரும் சொல்லிட்டாங்களாம். அப்புறம் கடைசில நிறைய காமெடி பீஸ் அப்புறம் ஆர்.கே.செல்வமணி, ராமநாராயணன் மற்றும் கவர்ச்சிக்காக நடிகை ராதாவோட மகள், இதுங்க கிட்ட போய் "டேய் வான்டட்டா வந்து காங்கிரச முன்னேத்த வந்திருக்கேன்டா நானும் ரவுடிதான்டா நம்புங்கடா. நார்த் இண்டியால ஃபார்ம் ஆயிட்டேன்டா"னு கெஞ்சி கதறி பேசிருக்கு. தமிழக இளைஞர் காங்கிரஸ்ல ஒருத்தரு தமிழக முதலமைச்சர் ஆவாராம். ஜோசியம் சொல்லிட்டு போயிருக்கு இந்த 'நார்த் இட்டாலியன் நாய் சேகர்!' சும்மாவே முதியோர் காங்கிரஸ்ல "நான் தான் ஃபர்ஸ்ட்.. நீதான் ஃபர்ஸ்ட்"னு அடிச்சுக்குவாய்ங்க. இதுல இது வேற இப்படி கிளப்பி விட்டுட்டு போயிருக்கு! இனிமே இளைஞர் காங்கிரசும் அடிச்சுகிட்டு நாறப் போறாய்ங்க.

இன்னொரு காமடி, விலைவாசியை பத்தி கவலைப்பட வேண்டாமாம். அதை மத்திய அரசும், மாநில அரசும், பிரதமரும் பார்த்துக்குவாராம். ஏம்பா ராகூலு தமிழகத்தோட வருங்கால முதலமைச்சர்களுக்கு விலைவாசி பத்தி அக்கறை இருக்காதாப்பா?

ஒரு காங்கிரஸ் தொண்டன் வேற "நீங்க ஏன் காமராஜர் பொறுப்பை ஏற்க கூடாது?"னு தண்ணிய போட்டு நகைச்சுவை உணர்வோட கிண்டல் பண்ணிருக்கான். இந்தாளுக்கு குஷியாயிருச்சு. "நான் அப்படி காமராசர் பொறுப்பை எடுக்கனும்னா நான் தமிழ் கத்துருக்கனும்"னு சொல்லிருக்காரு! நீ இப்ப மட்டும் என்னத்த கத்துகிட்டு அரசியலுக்கு வந்த? ஏதோ தமிழ் கத்துகிட்டா மட்டும் இவரு காமராசர் ஆகி கிழிச்சிருவாரு!

ஊருக்குள்ள எல்லாரும் சனி ஞாயிறுனா முன்னால கறி எடுப்பாய்ங்க. இப்பலாம் கூடைய தூக்கிட்டு போய் வெங்காயம் வாங்கி வெங்காய சாம்பார் வைக்கிறாய்ங்க. பார்க்கவே பாவமா இருக்கு! கேட்டா இப்போ அதான் ஸ்பெஷலாம். கல்யாண மறுவீடு ஃப்ங்ஷன்ல 'தயிர் வெங்காயம்' வைக்கலேனு சம்பந்தி வீட்டுக்குள்ல அடிதடி வருது. இதெல்லாம் அடுக்குமா? ஆனா இந்த மாதிரி சப்ப மேட்டரெல்லாம் பிரதமர் பார்த்து கிழிச்சுருவாராம். நம்ம காங்கிரசு ஆட்சிக்கு வர்றத மட்டுமே சிந்திச்சுகிட்டு உக்காந்திருக்கனுமாம்! அடேய் கோவிந்தசாமி, பிரதமருங்குறதே அந்தாளுக்கு கொடியேத்துறப்ப மட்டும் தான் ஞாபகம் வரும். ஒபாமா "வேர் இஸ் தி பாத்ரூம் Mr.சிங்? (where is the bathroom Mr.Singh?)"னு கேட்டதுக்கு கூட "ஐ மஸ்ட் கன்சல்ட் சோனியாஜி. கொஞ்ச நேரம் அடக்கிக்கங்க"னு சொன்னவரு அந்தாளு! வெங்காயத்த பத்தி அந்தாளுக்கு எங்க தெரிய போகுது? யப்பா ராகூலு நீ உங்க ஆத்தாவ மிஞ்சிருவடா சாமி!

சரி. நீ அதெல்லாம் விடு ராகுல் மச்சி. நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆயிருவோம். இளைஞர் காங்கிரசுல நாளைக்கே தமிழகத்தின் முதல் உறுப்பினரா பதிஞ்சுர்றேன். ஆனா அதுக்கு நீ என்கிட்ட ஒரே ஒரு மேட்டர் மட்டும் சொல்லனும். என்னத்துக்கு மச்சி நடிகை ராதா மகளை கட்சி மீட்டிங்குக்கு கூப்ட? சரி. அதைக் கூட நான் மன்னிச்சுருவேன். நாப்பது வயசுல கல்யாணம் ஆகாம இருக்க வயசு கோலாறு. கேர்ள் ஃபிரண்டு வேற ஸ்பெயின்ல இருக்கு.. ரொம்ப டிஸ்டன்சு ஓகே! ராமநாராயணனையும், செல்வமணியையும் எதுக்கு கூப்ட? தமிழக காங்கிரசுக்கும் இவய்ங்களுக்கும் என்ன சம்பந்தம்? அதுவுமில்லாம "அறிவுஜீவிகளுடன் ராகூல் உரையாடினார்"னு நியூஸ் கொடுக்க வுட்ருக்க? அறிவுஜீவினா என்ன தெரியுமா? உன்ன வச்சு காமடி பண்ணிருக்காய்ங்க எங்கூரு காங்கிரஸ் இளைஞர்கள்!

எங்கூரு அரசியல்வாதிங்க பரவால்ல போலயே! உன் அரசியல் உணர்வு, காங்கிரச முன்னேற்றனும்ங்குற வெறி எல்லாம் என்ன புல்லரிக்க வைக்கிது மச்சி. இப்படியே அடுத்த தடவ வர்றப்ப தமன்னா, இலியானா, த்ரிஷா, ஏ.எல்.அழகப்பன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த மாதிரி அரசியல் செல்வாக்கு உள்ள ஆட்களா உள்ள இழுத்துட்டீனா காங்கிரஸ் முன்னேறிரும். அப்புறமா நம்ம ஜாலியா அப்பன் இத்தாலிக்காரிய கூட்டிட்டு வந்த மாதிரி உன் கேர்ள்ஃபிரண்டு இருக்குற ஸ்பெயினுக்கு போயி அந்த வெள்ளைக்காரிய கூட்டியாந்து 'கானியா வாந்தி'னு பேரு மாத்திறலாம். அப்புறம் வழக்கம் போல காங்கிரஸ் கிழம் எல்லாம் அதுகளுக்குள்ள அடிச்சுகிட்டு 'கானியா' கிட்ட கட்சிய கொடுத்துருங்க. அப்புறம் தமிழ்நாட்டு இளைஞர் காங்கிரசை முன்னேத்த உன் மகன் வருவான். எங்களுக்கும் ஜாலியா டைம் பாஸ் ஆகும்.

ஆனா மகனே உங்க குடும்பத்துக்கு காந்தினு பேரு இருக்குறது மட்டும் மகாத்மா காந்திக்கு தெரிஞ்சுச்சு, தடியாலயே உங்கள அடிச்சு போட்டுட்டு கரண்ட் கம்பிய புடிச்சு தொங்கிருவாரு.

இப்பலாம் மனுஷன் சிரிச்சே சாகனும்னாலோ அல்லது குடிச்ச விஷத்தை வாந்தியெடுக்கனும்னாலோ ஒரே வழிதான். உங்க மீட்டிங்குக்கு வந்தா போதும்!

அது என்ன.. ஆங்.. ஊழல ஒழிப்பீங்களா? முதல்ல கொள்ளையடிச்ச காசை எங்க ஒளிப்பீங்க? அதை ஒளிக்கனும்னா பாகிஸ்தானை வாடகைக்கு எடுக்கனுமே! ஆனா ரொம்ப தைரியம் உங்களுக்கு. கூச்சப்படாம எப்படி ஊழலை ஒழிப்போமுங்குறீங்க. சிரிப்பு வரலையா அப்டி சொல்றப்ப? "நல்லா படிப்பேன் இனிமேலுனு" ஸ்கூல் படிக்கும்போது எங்க சார்ட பொய் சொல்றப்ப கூட சிரிப்பு வந்துச்சே எனக்கு. ஆனா கூச்சப்படாம சிரிக்காம ஊழலை ஒழிப்போம்னு உங்காத்தா சொல்லுது பாரு, அங்க நிக்குது உங்க குடும்பம்!

சரி ராகுலு. அதெல்லாம் விடு. என்னமோ பண்ணித்தொலை. இன்னும் காங்கிரசு ஆட்சில இருக்க மாநிலத்துக்கெல்லாம் போயி அங்க இருக்க எதிர்கட்சி தலைவர்களுக்கு உதவி பண்ற வேலை உனக்கு இருக்கு! ஆனா மவனே இனிமே நீ தமிழ்நாட்டுக்கு மட்டும் வந்தீனா, என் நிலம், வீடு, காரு, பைக்கு, ஹெல்மெட்டு, ஹெல்மெட் லாக்கு, எல்லாத்தையும் வித்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி காங்கிரசு ஆபீசை கொளுத்தி புடுவேன் ஆமா! கேசு கூட வராது! ஏன்னா அங்க ஆள் இருந்தாதானே!!! 

Pin It