நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் – அவற்றின் முழுமையான பரிமாணங் களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த சில இதழ்களின் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

17.5.2001 – 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு நான் இரவு சுமார் 8.30 மணியளவில் போனேன். அந்த இடத்தை விட்டு மீண்டும் இரவு சுமார் 2.30 மணியளவில் திரும்பினோம். அங்கே சுமார் 5, 6 பிணங்கள் கிடந்தன. மூக்கன் என்பவருடைய பிரேத விசாரணை எனக்கு தெரிய நடந்தது. அந்த பிரேத விசாரணை செய்தது ஆய்வாளர் நாராயணசாமி ஆகும். உமச்சங்குளம் ஆய்வாளர் நாராயணசாமி டி.எஸ்.பி. மேற்பார்வையில் பிரேத விசாரணையை செய்தார். பிரேத விசாரணை அறிக்கையை பஞ்சாயத்தார்கள் முன்பாக மேற்படி ஆய்வாளர் நாராயணசாமி சொல்லச் சொல்ல காவலர் எழுதினார். டி.எஸ்.பி. மேற்பார்வையில் பிரேத விசாரணை செய்தார். எந்தெந்த இடத்தில் பிரேதங்கள் கிடந்தனவோ, அந்த அந்த இடத்தில் பிரேத விசாரணை நடந்தது. மூக்கன் பிரேதம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள் 5 பேர் இருந்தார்கள். மூக்கனின் விசாரணை அறிக்கை 1.30 மணி முதல் சுமார் 2 மணி நேரம் நடந்திருக்கும். பிரேத விசாரணையின் போது 5 சாட்சிகளிடம் கையெழுத்து வாங்கினார்கள். பிணங்களை போலிஸ் வேனில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மூக்கனின் பிரேதத்திலிருந்து கைப்பற்றிய துணிகளை தனி அறிக்கை தயாரித்து, டி.எஸ்.பி.யிடம் நான் ஒப்படைத்தேன்.

நான் அவ்வாறு ஒப்படைத்து, சடலக் கூராய்வு முடிந்தது மாலை நேரமாகும். டி.சி.பி. துணைக் கண்காணிப்பாளர் மேலூர் காவல் நிலையத்தில் இருந்தார். அவரிடம் துணிகளை நான் ஒப்படைத்தேன். அதற்குப் பிறகு மேலூரில் நான் பந்தோபஸ்து பணியிலிருந்தேன். நான் துணிமணிகளை ஒப்படைத்தபோது, டி.சி.பி. துணைக் கண்காணிப்பாளர் என்னை விசாரித்தார். பிறகு அவர் என்னை விசாரிக்கவில்லை. அப்போது என்னுடைய எண்.795. நான் சொல்கின்ற நிலையிலும், இடத்திலும், நேரத்திலும், விதத்திலும் பிரேத விசாரணை நடைபெறவில்லையென்றும் பிரேத விசாரணை அறிக்கை தயாரிக்கப்படவில்லையென்றும் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.29 : பி. கடோர்கஜன் (முதல் நிலைக் காவலர், ஏழுமலை காவல் நிலையம்) ராஜாவின் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

நான் தற்போது ஏழுமலை காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக இருக்கிறேன். இவ்வழக்கு சம்பவ காலத்தில் மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தேன். இவ்வழக்கின் சம்பவ இடத்திலிருந்து ராஜா என்பவருடைய பிரேதத்தை சடலக்கூராய்விற்காக வேண்டுகோளுடன் என்னிடம் ஒப்படைத்ததை, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தேன். சடலக் கூராய்வு முடிந்த பிறகு பிரேதத்திலிருந்து ஒரு சர்ட், ஒரு வேட்டி ஆகியவற்றை கைப்பற்றி டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். வேட்டி ச.பொ.22, சர்ட் சா.பொ.23 பிரேதத்தை உறவினர் வசம் ஒப்படைத்தேன்.

17.5.2001 – 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு சுமார் இரவு 8.30 மணியளவில் சென்றேன். அன்று பிரேத விசாரணை முடியும் வரை நான் இருந்தேன். ராஜா பிரேதத்தின் மீது பிரேத விசாரணையை டி.எஸ்.பி. செய்தார். அந்த பிரேத விசாணை அறிக்கையை ரைட்டர் கைப்பட எழுதினார். பிரேத விசாரணையின்போது பஞ்சாயத்தார்களும் இருந்தார்கள். பஞ்சாயத்தார்களை மட்டும் விசாரித்தார்கள். பிரேதங்கள் கிடந்த அந்த அந்த இடத்தில் பிரேத விசாரணை செய்யப்பட்டது. ராஜாவின் பிரேதத்தின் மீது பிரேத விசாரணை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பிரேத விசாரணை அறிக்கையை என்னிடம் ஒரு கவரில் போட்டு டி.எஸ்.பி. என்னிடம் கொடுத்ததை நான் மருத்துவமனையில் டாக்டரிடம் கொடுத்தேன். அதை அவர்கள் பார்த்து சடலக்கூராய்வு செய்தார்கள். பிரேத விசாரணை முடிந்ததும் என்னை டி.எஸ்.பி. விசாரித்து எழுதிக் கொண்டார். ராஜா பிரேதத்தின் மீது நடந்த பிரேத விசாரணை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள் தனி அறிக்கையுடன் டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். நான் சொல்கின்ற முறையிலும், நேரத்திலும் இடத்திலும், பிரேத விசாரணை நடக்கவில்லை என்றாலும், பிரேத விசாரணை அறிக்கை தயரிக்கப்படவில்லையென்றும் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.30 : க. முருகன் (காவலர், மேலூர் காவல் நிலையம்) முருகேசன் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

30.6.97 ஆம் தேதி மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தேன். இந்த வழக்கில் சம்பவ இடத்திலிருந்த இறந்து போன முருகேசனின் தலை மற்றும் முண்டம் ஆகியவற்றை சடலக்கூரõய்விற்காக என்னிடம் ஒப்படைத்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு டி.எஸ்.பி. என்னிடம் கொடுத்த வேண்டுகோளுடன் ஒப்படைத்தேன். பிரேத மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தேன். பிரேதத்திலிருந்து வெள்ளை நிற முழுக்கை சர்ட் ஒன்று, கிழிந்த சிவப்பு டவுசர் ஒன்று, மஞ்சள் நிற பனியன் ஒன்று ஆகியவற்றை கைப்பற்றினேன். டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். சா.பொ.24, முழுக்கை சர்ட், சா.பொ.25 டவுசர் சா.பொ.26 பணியன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

முருகேசனுடைய பிரேதத்தை சடலக் கூராய்வு செய்ய வேண்டி ஆய்வாளர் என்னிடம் கடிதம் கொடுத்தார் என்று நான் பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல.

2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

முருகேசனின் பாடியையும், முண்டத்தையும் நான் எடுத்துச் சென்றேன். 30.6.97 தேதியன்று 7 கி.மீட்டர் தூரத்தில் உள்ள கண்மேடு என்ற ஊரில் நான் இருந்தேன். 30.6.97 ஆம் தேதியன்று பிணம் கிடந்த இடத்திற்கு எத்தனை மணிக்கு நான் புறப்பட்டேன் என்பது எனக்கு தெரியாது. பிணம் கிடந்த இடத்திற்கு அதிகாரிகளுடன் போனேன். அப்போது எங்கள் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் எங்களுடன் வந்தார்.

நானும் மற்ற அதிகாரிகளும் போலிஸ் லாரியில் போனோம். பிணம் எடுத்துக்கொண்டு சென்றபோது, திருமங்கலம் டி.எஸ்.பி.யும் மற்றும் சில காவலர்களும் உடன் வந்தார்கள். 1.7.97 ஆம் தேதி மீண்டும் காவல் நிலையத்தில் நான் ஆஜர் ஆனேன். டி.சி.பி. டி.எஸ்.பி.இடம் நான் ஆஜர் ஆனேன். 1.7.97 ஆம் தேதி இரவு டி.சி.பி. டி.எஸ்.பி.இடம் பிணத்திலிருந்து கைப்பற்றிய துணிகளை நான் ஆஜர் செய்தேன். துணிகளைக் கைப்பற்றி ஒப்படைத்ததற்கு நான் தனி அறிக்கை எழுதி, அத்துடன் துணிகளை துணைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தேன். பிணத்தை ஒப்படைத்த நேரத்தை தவிர மற்ற எந்த விவரத்தையும் நேரம் குறித்து என்னால் சொல்ல முடியாது. 2.7.97 ஆம் தேதி துணை கண்காணிப்பாளர் என்னை விசாரிக்கவில்லை என்று சொன்னால் அது சரியல்ல. நான் பிணம் கிடந்த இடத்திற்கு அதிகாரிகளுடன் போனதாகவும் பிணத்தை கொண்டு போய் மருத்துவரிடம் ஒப்படைத்ததும் பொய் என்று சொன்னால் அது சரியல்ல.  

       நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் – அவற்றின் முழுமையான பரிமாணங் களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த சில இதழ்களின் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

17.5.2001 – 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு நான் இரவு சுமார் 8.30 மணியளவில் போனேன். அந்த இடத்தை விட்டு மீண்டும் இரவு சுமார் 2.30 மணியளவில் திரும்பினோம். அங்கே சுமார் 5, 6 பிணங்கள் கிடந்தன. மூக்கன் என்பவருடைய பிரேத விசாரணை எனக்கு தெரிய நடந்தது. அந்த பிரேத விசாரணை செய்தது ஆய்வாளர் நாராயணசாமி ஆகும். உமச்சங்குளம் ஆய்வாளர் நாராயணசாமி டி.எஸ்.பி. மேற்பார்வையில் பிரேத விசாரணையை செய்தார். பிரேத விசாரணை அறிக்கையை பஞ்சாயத்தார்கள் முன்பாக மேற்படி ஆய்வாளர் நாராயணசாமி சொல்லச் சொல்ல காவலர் எழுதினார். டி.எஸ்.பி. மேற்பார்வையில் பிரேத விசாரணை செய்தார். எந்தெந்த இடத்தில் பிரேதங்கள் கிடந்தனவோ, அந்த அந்த இடத்தில் பிரேத விசாரணை நடந்தது. மூக்கன் பிரேதம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள் 5 பேர் இருந்தார்கள். மூக்கனின் விசாரணை அறிக்கை 1.30 மணி முதல் சுமார் 2 மணி நேரம் நடந்திருக்கும். பிரேத விசாரணையின் போது 5 சாட்சிகளிடம் கையெழுத்து வாங்கினார்கள். பிணங்களை போலிஸ் வேனில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மூக்கனின் பிரேதத்திலிருந்து கைப்பற்றிய துணிகளை தனி அறிக்கை தயாரித்து, டி.எஸ்.பி.யிடம் நான் ஒப்படைத்தேன்.

நான் அவ்வாறு ஒப்படைத்து, சடலக் கூராய்வு முடிந்தது மாலை நேரமாகும். டி.சி.பி. துணைக் கண்காணிப்பாளர் மேலூர் காவல் நிலையத்தில் இருந்தார். அவரிடம் துணிகளை நான் ஒப்படைத்தேன். அதற்குப் பிறகு மேலூரில் நான் பந்தோபஸ்து பணியிலிருந்தேன். நான் துணிமணிகளை ஒப்படைத்தபோது, டி.சி.பி. துணைக் கண்காணிப்பாளர் என்னை விசாரித்தார். பிறகு அவர் என்னை விசாரிக்கவில்லை. அப்போது என்னுடைய எண்.795. நான் சொல்கின்ற நிலையிலும், இடத்திலும், நேரத்திலும், விதத்திலும் பிரேத விசாரணை நடைபெறவில்லையென்றும் பிரேத விசாரணை அறிக்கை தயாரிக்கப்படவில்லையென்றும் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.29 : பி. கடோர்கஜன் (முதல் நிலைக் காவலர், ஏழுமலை காவல் நிலையம்) ராஜாவின் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

நான் தற்போது ஏழுமலை காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக இருக்கிறேன். இவ்வழக்கு சம்பவ காலத்தில் மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தேன். இவ்வழக்கின் சம்பவ இடத்திலிருந்து ராஜா என்பவருடைய பிரேதத்தை சடலக்கூராய்விற்காக வேண்டுகோளுடன் என்னிடம் ஒப்படைத்ததை, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தேன். சடலக் கூராய்வு முடிந்த பிறகு பிரேதத்திலிருந்து ஒரு சர்ட், ஒரு வேட்டி ஆகியவற்றை கைப்பற்றி டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். வேட்டி ச.பொ.22, சர்ட் சா.பொ.23 பிரேதத்தை உறவினர் வசம் ஒப்படைத்தேன்.

17.5.2001 – 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு சுமார் இரவு 8.30 மணியளவில் சென்றேன். அன்று பிரேத விசாரணை முடியும் வரை நான் இருந்தேன். ராஜா பிரேதத்தின் மீது பிரேத விசாரணையை டி.எஸ்.பி. செய்தார். அந்த பிரேத விசாணை அறிக்கையை ரைட்டர் கைப்பட எழுதினார். பிரேத விசாரணையின்போது பஞ்சாயத்தார்களும் இருந்தார்கள். பஞ்சாயத்தார்களை மட்டும் விசாரித்தார்கள். பிரேதங்கள் கிடந்த அந்த அந்த இடத்தில் பிரேத விசாரணை செய்யப்பட்டது. ராஜாவின் பிரேதத்தின் மீது பிரேத விசாரணை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பிரேத விசாரணை அறிக்கையை என்னிடம் ஒரு கவரில் போட்டு டி.எஸ்.பி. என்னிடம் கொடுத்ததை நான் மருத்துவமனையில் டாக்டரிடம் கொடுத்தேன். அதை அவர்கள் பார்த்து சடலக்கூராய்வு செய்தார்கள். பிரேத விசாரணை முடிந்ததும் என்னை டி.எஸ்.பி. விசாரித்து எழுதிக் கொண்டார். ராஜா பிரேதத்தின் மீது நடந்த பிரேத விசாரணை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள் தனி அறிக்கையுடன் டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். நான் சொல்கின்ற முறையிலும், நேரத்திலும் இடத்திலும், பிரேத விசாரணை நடக்கவில்லை என்றாலும், பிரேத விசாரணை அறிக்கை தயரிக்கப்படவில்லையென்றும் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.30 : க. முருகன் (காவலர், மேலூர் காவல் நிலையம்) முருகேசன் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

30.6.97 ஆம் தேதி மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தேன். இந்த வழக்கில் சம்பவ இடத்திலிருந்த இறந்து போன முருகேசனின் தலை மற்றும் முண்டம் ஆகியவற்றை சடலக்கூரõய்விற்காக என்னிடம் ஒப்படைத்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு டி.எஸ்.பி. என்னிடம் கொடுத்த வேண்டுகோளுடன் ஒப்படைத்தேன். பிரேத மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தேன். பிரேதத்திலிருந்து வெள்ளை நிற முழுக்கை சர்ட் ஒன்று, கிழிந்த சிவப்பு டவுசர் ஒன்று, மஞ்சள் நிற பனியன் ஒன்று ஆகியவற்றை கைப்பற்றினேன். டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். சா.பொ.24, முழுக்கை சர்ட், சா.பொ.25 டவுசர் சா.பொ.26 பணியன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

முருகேசனுடைய பிரேதத்தை சடலக் கூராய்வு செய்ய வேண்டி ஆய்வாளர் என்னிடம் கடிதம் கொடுத்தார் என்று நான் பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல.

2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

முருகேசனின் பாடியையும், முண்டத்தையும் நான் எடுத்துச் சென்றேன். 30.6.97 தேதியன்று 7 கி.மீட்டர் தூரத்தில் உள்ள கண்மேடு என்ற ஊரில் நான் இருந்தேன். 30.6.97 ஆம் தேதியன்று பிணம் கிடந்த இடத்திற்கு எத்தனை மணிக்கு நான் புறப்பட்டேன் என்பது எனக்கு தெரியாது. பிணம் கிடந்த இடத்திற்கு அதிகாரிகளுடன் போனேன். அப்போது எங்கள் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் எங்களுடன் வந்தார்.

நானும் மற்ற அதிகாரிகளும் போலிஸ் லாரியில் போனோம். பிணம் எடுத்துக்கொண்டு சென்றபோது, திருமங்கலம் டி.எஸ்.பி.யும் மற்றும் சில காவலர்களும் உடன் வந்தார்கள். 1.7.97 ஆம் தேதி மீண்டும் காவல் நிலையத்தில் நான் ஆஜர் ஆனேன். டி.சி.பி. டி.எஸ்.பி.இடம் நான் ஆஜர் ஆனேன். 1.7.97 ஆம் தேதி இரவு டி.சி.பி. டி.எஸ்.பி.இடம் பிணத்திலிருந்து கைப்பற்றிய துணிகளை நான் ஆஜர் செய்தேன். துணிகளைக் கைப்பற்றி ஒப்படைத்ததற்கு நான் தனி அறிக்கை எழுதி, அத்துடன் துணிகளை துணைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தேன். பிணத்தை ஒப்படைத்த நேரத்தை தவிர மற்ற எந்த விவரத்தையும் நேரம் குறித்து என்னால் சொல்ல முடியாது. 2.7.97 ஆம் தேதி துணை கண்காணிப்பாளர் என்னை விசாரிக்கவில்லை என்று சொன்னால் அது சரியல்ல. நான் பிணம் கிடந்த இடத்திற்கு அதிகாரிகளுடன் போனதாகவும் பிணத்தை கொண்டு போய் மருத்துவரிடம் ஒப்படைத்ததும் பொய் என்று சொன்னால் அது சரியல்ல.

(தலித் முரசு ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It