சென்னையில் வரும் சனிக்கிழமை 10-05-2014 அன்று 'பாலைவனமாகும் காவேரி டெல்டா: மீத்தேன்' ஆவணப்படத்தினை செ.தெ.நாயகம் பள்ளி- தி.நகர், மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றோம்.
தஞ்சையையும், காவேரியையும் காப்பது அனைத்து தமிழர்களின் கடமை.
நம்மாழ்வார் சொல்லுவார் “தமிழ்நாட்டுல மூணுல ஒருத்தரு குடிக்கிறது காவிரி ஆற்றுத் தண்ணீ, வீராணம் ஏரியில் இருந்து தான் சென்னைக்கு தண்ணிவருது. வீராணத்துக்கு காவிரில இருந்து தான் தண்ணீ கிடைக்குது, ஆகையால காவிரிய காப்பத்தறது நம் அனைவரோட கடமை” ..
இதை மனதில் கொண்டே இந்த ஆவணப்படத்தினை தயாரித்தோம். ஒட்டுமொத்த தமிழரும், மார்வாடி-பெருவணிக கும்பல்களின் லாபவேட்டைக்காக பலியிடப்பட இருக்கும், தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாக இருக்கும் தஞ்சை டெல்டாவினைக் காக்க, களம் காண அழைக்கிறோம்.
தோழர்களையும், குடும்பத்தினரையும் அழைத்து வருமாறு வேண்டுகிறோம்.