பனித்துளிகளால்
கழுவிக் கொண்ட கண்களை
பத்திரமாக வைத்திருக்கிறேன்
நகர்வலமற்ற பரிசுத்த மேகத்தை
அணிந்து கிளம்புகையில்
தூரத்து வெயில் மினுமினுக்கும்
கிட்டத்து வானம் சிலு சிலுக்கும்
நடுமுதுகில் துள்ளிடும் தகிப்புக்கு
ஏழு மலை ஏழு கடல் தாண்டிய நினைப்பு
எங்கிருந்து எப்போது கிளம்பினேன்
என்றெல்லாம் தெரியாது
மனம் குடித்த குருதிக்கு மாற்று
யாருமற்ற பொழுதுகளை
தலைக்குள்ளிருந்தெடுத்து
சாலையோரம் மரம் நடுகிறேன்
தயவு செய்து பின்னால் வராதீர்கள்
நிழலைக் கொண்டாடுங்கள்
நிஜங்கள் போர்வாள்களில்
சிக்கிக் கொண்டிருக்கின்றன
மரங்களே மானுட சுத்திகரிப்பு
அசோக வனம் சாட்சி
கலிங்க போரை நிகழ்த்திய பிண்டத்தை
இலையாக்கி இதயம் செய்கிறது
இன்னொரு மரமும்.......!
- கவிஜி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வகுப்புரிமையா? வகுப்புத் துவேசமா?
- முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை!
- தமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா?
- நான் யார்
- தேடல்கள்
- கர்ப்பத்தடை
- பாசிச பாசக எதிர்ப்பு
- தனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்
- தமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு
- விவரங்கள்
- கவிஜி
- பிரிவு: கவிதைகள்
அசோக வனம்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.