பாலையில் விழுந்த 
மழைத்துளியாய் 
ஆவியாகிறது என் ஆவல்

இரையுடன் வந்து 
குஞ்சுகளில்லா கூட்டைக் காணும் பறவையாய் 
நோகிறது என் விழிகள்

பிலத்தினுள் நுழைந்த நீரென 
மறைகின்றன 
என் சொற்கள்

உயிர்வாயுக் கலமின்றி 
விண்ணில் மிதப்பவனாய் 
தவிக்கிறது உள்ளம்

அவளில்லாத 
அவளிடத்தை காணும்போது

- கா.சிவா

Pin It