சற்று நேரத்திற்க்கெல்லாம்
நேர்த்தியாய் பொழிய காத்திருக்கும்
மழையோடு கலந்த மேகமாய்
நீயே எங்கும்
வியாப்பித்துக் கொள்(ல்)கிறாய்....
இருக்கும் இடத்திலேயே
உன் நினைவை கோர்க்கும்
அற்புத வரத்தின் தன்மையை
கண்டு நீயே அதிசயிக்கிறாய்....
உன்நிமித்தம் மாறுதலற்ற
பூரணத்துவத்தை எனதாக்கி
பின்பு உனதுமாக்கி
ரசிக்கிறாய்....
வார்த்தைகளற்ற
உன் மௌனம் எனை சுட்டே
எரிப்பதாய் சொல்லிய நீ தான்,
நேசித்தேன் என்பதையே பலமுறை
இல்லை என்கிறாய்....
குறைந்தபட்சம் உன்
விழிகளுக்கேனும்
தெரிந்திருக்க வேண்டும் - என்
இதழ்களில் அப்பியிருப்பது
கண்களில் வழிந்த
சிவப்பு தான் என.....
- ஆனந்தி ராமகிருஷ்ணன், சிதம்பரம்