கீற்றில் தேட...

shankarஉன் மேல்
அவன் மண்ணள்ளி வீசுகிறானா
நீ சேறள்ளிப் பூசு
அவன் சேறள்ளி வீசுகிறானா
நீ சாணியைக் கரைத்தூற்று
அவன் சாணியைத் தெளிக்கிறானா
நீ மலம் அள்ளி வீசு
அவன் மலம் அள்ளி வீசுகிறானா
நீ அதுக்கும்.... மேல
யோசி.
தமிழ் சினிமா
சாகிற காலத்துல
சங்கரா சங்கரான்னு
உன்னைத் தான் நம்பியிருக்கு
அதுக்கும்.... மேல
உனக்கொரு தகுதியிருக்கு.
அதுக்கும் மேல...
யோசி.

- சேயோன் யாழ்வேந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.