cross man

கோடி அற்புதரே

இந்த அற்பனின் ஒரு கேள்வி,

கோடி அற்புதத்துக்குக்

கூடுதலாய் ஒன்றும்

அற்புதம் செய்வதில்லை என்று

ஏன் முடிவெடுத்தீர்?

 

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள்

உம்மிடம் வந்தால்தான்

வருத்தம் குறைப்பீராம்.

எம் வருத்தமே அதுதான்.

 

- சேயோன் யாழ்வேந்தன்

Pin It