கோடி அற்புதரே
இந்த அற்பனின் ஒரு கேள்வி,
கோடி அற்புதத்துக்குக்
கூடுதலாய் ஒன்றும்
அற்புதம் செய்வதில்லை என்று
ஏன் முடிவெடுத்தீர்?
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள்
உம்மிடம் வந்தால்தான்
வருத்தம் குறைப்பீராம்.
எம் வருத்தமே அதுதான்.
- சேயோன் யாழ்வேந்தன்