நிலத்தின் மெளனங்கள் பற்றி
இரவும் பகலும்
நிறைய பதிப்புகளை வெளியிட்டு விட்டது
அதன் பிரசவம் குறித்து
நிறைய மேடைகளில் பேசப்பட்டுவிட்டன
அதன் பொறுமை கருணை குறித்து
குழந்தைகளுக்கு
சொல்லிக் கொண்டு தானிருக்கின்றோம்
குழந்தையாக இருக்கும் போது
தொட்டிலாகும் நிலம்
வளரும் போது நண்பனாகிறது
காதலிக்கும் போது
பூக்கள் தந்து வாழ்த்துகிறது
பசிக்கும் போது கனிகளையும்
தானியங்களையும் தருகிறது
முதுமையில் அனுபவங்களை கேட்கிறது
இறந்த பின் அணைத்துக் கொள்கிறது
எல்லாவற்றிலும்
மெளனத்தின் அங்கமாக இருக்கும் நிலம்
நிலத்தின்
வலிமையான வார்த்தைகள் எது தெரியுமா
பாறைகள்
எளிய வார்த்தைகள்
தண்ணீர்
கருணை வார்த்தைகள்
தாவரங்கள்
அடக்கிவைக்கப்பட்ட வார்த்தைகள்
எரிமலை
கோப வார்த்தைகள்
சூறாவளி
காதல் வார்த்தைகள்
மழை
நிலத்தைப் பற்றி பாடமல்
மாயைகளை பற்றி பாடுகின்றோம்
நிலம் பாதைகளை திறந்து வைத்திருக்கிறது
அதன் பாதையில் நடந்தால்
யாரும் வழி தவறிப் போக முடியாது.
கீற்றில் தேட...
நிலத்தின் பாதை
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.