1

அடித்துத் துவைக்கும்

பெண்களை

எதிரொலி

எழுப்பி

நகைக்கிறாயே

உன் சப்தத்தின்

கூடு எங்கே

திறந்து காட்டு

2

பூக்களைக் கொய்யும்

சிறுமிகளை கவனியுங்கள்

அவர்களின் கொய்தலுக்கும்

சேகரிப்பிற்கும் இடையே

எத்தனை சிரிப்புகள்

யாராவது சொல்லியிருக்கவேண்டும்

மறு நாளும் சிரிப்பொலிக்காகவே

பூத்து குலுங்கும்

மரத்தின் காத்திருப்பை

3

மழை பெய்து ஓய்ந்தாலும்

வெள்ளம் கட்டி கிடக்கும்

முற்றம் மாத்திரம்

மழையை தானோ

ஞாபக படுத்துகிறது

வெறுங்கல்லோ

மழையில் அடித்து

வரப்பட்டதோ

பூமியிகி மேலெழுந்ததோ

முற்றத்தைப் பெருக்காத

போதும்

முற்றத்தையன்றோ

பார்க்கத் தோன்றுகிறது

4

எழுதி எழுதிக் களைத்தாயோ

என்று கேட்குமட்டும்

ஆன உனக்கு

நீண்ட நெடிய

ஒரு இருப்பு

ஆகவே ஆகாதடி

கிளியே

5

பழைய கல்மண்டபத்தின்

தூணிலிருக்கும்

நாட்டிய மங்கை

தீராத நடனத்தை

முடிக்கக் கூடாதோ

காலம் முடித்து

வைக்கும்

என்றொரு

யோசனையோ?

- நட்சத்திரவாசி

Pin It