அசுத்தத்தை
அருவருப்பை
ஆபத்தை
மிதிக்க ,
கிருமிகள் தொற்றை
முள், கல் ,ஆணி
குத்தும் கொடுவலி
தடுக்க ,
நாம் கண்டிருக்கும்
நல்லதோர் கருவி
கற்றோர் மற்றோர்
நாடிடும் உதவி
நாகரீக மாந்தர்
நடையின் அறிகுறி
வீதிதோரும் கடைவிரித்து
கொள்வீர் கொள்வீரென
கூவி விற்கும் நற்பொருள்
எவனோ சொல்கிறான்
காலிலே போட்டு
நடக்காதே என் தெருவில்
ஆகட்டும் ஆண்ட
இனி ..
காலிலே போடலே.
கையிலே எடுக்கிறேன்
செருப்பை