முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் நேற்று முன்தினம் (27-07-2015) அன்று மரணமடைந்துவிட்டார். அதையொட்டி மத்திய அரசு 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. நாடே கண்ணீரில் மிதப்பதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. பாஜக, காங்கிரசு உட்பட அனைத்துக் கட்சிகளும் அவருக்காக கண்ணீர் வடிக்கின்றன. நமக்கு ஆச்சரியமாக உள்ளது, ஒருவர் எப்படி அனைவருக்கும் நல்லவராக இருக்க முடியும்! முற்போக்குவாதிகளும் அவரைக் கொண்டாடுகின்றார்கள், பிற்போக்குவாதிகளும் அவரைக் கொண்டாடுகின்றார்கள். இது எப்படி சாத்தியமானது?
அப்துல் கலாம் என்ற நபர் கோடானகோடி இந்திய மக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டார்? ஏவுகணைகளை உருவாக்கினார், அணுஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். கனவு காணுங்கள் என்று சொன்னார், குழந்தைகளுடன் கலந்துரையாடினார், 2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று சொன்னார். அப்புறம் ஏழையாக இருந்து சிரமப்பட்டு, படித்து, மிக உயர்ந்த நிலையை அடைந்தார். ஒரு மனிதரைக் கொண்டாட இது மட்டும் போதுமா?. அவர் கண்டுபிடித்த ஏவுகணைகளும் இன்னும்பல அறிவியல் கண்டுபிடிப்புகளும் யாருக்கானவை? நிச்சயமாக அவை ஒருபோதும் சாமானிய மக்களுக்கானது அல்ல. அவை ஆளும் வர்க்கங்களுக்கானவை. சாமானிய மக்களுக்கு அவர் எதையாவது செய்திருக்கின்றாரா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. பின்பு ஏன் சாமானிய மக்கள் அப்துல் கலாமின் மறைவிற்காக அழவேண்டும்? உங்கள் விலைமதிப்பில்லா கண்ணீரை சமர்ப்பனமாக பெரும் தார்மீக தகுதி கலாமுக்கு இருக்கின்றதா?
அவர் ஒரு அறிவியல் அறிஞராக இருந்திருக்கலாம்; அதைப் பற்றி மட்டுமே பேசுபவராக இருந்திருக்கலாம். அப்படி இருந்திருப்பாரேயெனில் அவரைப் பற்றி பேசுவதற்கு நம்மிடம் எதுவும் இல்லை. ஆனால் அவர் தன்னை ஒரு பன்முக ஆளுமைமிக்க நபராகவே எப்போதும் அடையாளப்படுத்தி வந்தார். பொது அரங்கங்களில் பங்கேற்று பல சமூகம் சார்ந்த செய்திகளை பேசியிருக்கின்றார். எனவே நாம் அவரைப் பற்றி பேசுவதற்கு உரிமை உள்ளது.
ஆளும் வர்க்கங்கள் ஒரு மனிதரைக் கொண்டாட பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. அவர் ஆளும்வர்க்கத்தின் கைக்கூலியாக, அவர்களுக்கு பயன்படுபவராக இருந்தாலே போதும். ஆனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்காகப் போராடுபவர்களும் அவ்வாறே ஒருவரைக் கொண்டாட முடியுமா? அப்படி கொண்டாடும் பட்சத்தில் அவர்களை எப்படி சாமானிய மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் என்று சொல்லமுடியும்? அப்துல் கலாம் எப்போதாவது சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காக ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் பேசியிருக்கின்றாரா? அவருடைய சமகாலத்தில் பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்து இருக்கின்றது. இந்திரா காந்தியால் நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது, அவரது மறைவையொட்டி சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரும் மனிதப் படுகொலை, போபால் விஷவாயு கசிவால் 25000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது, ஈழமக்கள் படுகொலை, குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு, பசுமை வேட்டை, விவசாயிகள் தற்கொலை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதைப் பற்றியெல்லாம் கலாமின் கருத்து என்ன? தனது உதவியாளர்களிடமும், நெருக்கமானவர்களிடமும் தனிமையில் அவர் ஆதங்கப்பட்டிருக்கலாம், சில கருத்துக்களைச் சொல்லியிருக்கலாம். பொதுவெளியில் என்ன செய்தார்? ஆளும்வர்க்கங்களுக்கு எதிராக சுண்டு விரலைக்கூட நீட்டாத வீரர்தான் கலாம் அவர்கள்.
அவர் பள்ளி மாணவர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களிடம் ஒரு பத்து உறுதிமொழிகளை எடுக்கச் சொல்லுவார். அந்த உறுதி மொழிகளை நீங்களே படியுங்கள்.
நான் எனது வாழ்க்கையில் நல்ல லட்சியத்தை மேற்கொள்வேன்.
நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கை லட்சியத்தை அடைய முற்படுவேன்.
நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்துபேருக்காவது எழுதப் படிக்க சொல்லித் தருவேன்.
நான் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்த பட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதைப் பாதுகாத்து மரமாக்குவேன்.
மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துயருரும் ஐந்து பேரையாவது மீட்டு அதில் இருந்து நல்வழிப்படுத்த முயற்சி செய்வேன்.
துயர்படும் ஐந்துபேரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரை துடைப்பேன்.
நான் சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எவ்வித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.
நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
என் தாய் மற்றும் தாய் நாட்டை நேசித்து பெண்குலத்துக்கு உரிய மரியாதையும் கண்ணியத்தையும் அளிப்பேன்.
நான் நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர்விடச் செய்வேன்.
ஒருவன் நன்றாகப் படித்து உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதெல்லாம் அப்பட்டமான முதலாளித்துவ சிந்தனையே அன்றி வேறல்ல. நாட்டில் கோடானகோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு நன்றாக படிக்காமல் போனதோ, உழைக்க முடியாததோ காரணம் அல்ல. உண்மைப் பொருளாதாரத்தை கட்டியமைக்காமல் பங்குசந்தை சார்ந்த ஊகப் பொருளாதாரத்தை கட்டியமைத்து அதைக் காப்பாற்றி வரும் இந்த அரசே காரணமாகும். இது கலாமுக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டாரா?. சாதியைப் பற்றி, மதத்தைப் பற்றி எல்லாம் பேசும் கலாம் அவர்கள் இந்தியாவில் சாதிக் கலவரங்களும், மதக் கலவரங்களும் நடந்த போது அதை குறைந்தளவு கண்டித்தாவது பேசி இருக்கின்றாரா? பெண்களுக்கு மரியாதையும், கண்ணியத்தையும் அளிக்கவேண்டும் என்று சொன்ன கலாம் எப்போதாவது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் பேசியிருக்கின்றாரா?
இப்படி எதுவுமே பேசாத, செய்யாத கலாமுக்காக சாமானிய மக்கள் எதற்காக அழவேண்டும்? அவர் இதுவரை எத்தனை தனியார் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசியிருக்கின்றார், எத்தனை அரசு பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசியிருக்கின்றார் என்று கணக்கிட்டுப் பார்த்தால் அவர் எந்த வர்க்கத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு ஆதரவானவர் என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். கலாம் தமிழ்நாட்டில் பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவது என்பது மிக அபத்தமானதாகும். காவிரிப் பிரச்சினையாகட்டும், மீத்தேன் வாயு திட்டமாகட்டும், தமிழ்நாட்டையே அழித்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக் பிரச்சினையாகட்டும் அல்லது வேறு எந்த பிரச்சினையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர் எப்போதாவது தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து இருக்கின்றாரா? மீனவ சமூகத்திலே பிறந்து அந்த மீனவ சமூகத்திற்கே துரோகம் செய்த கலாமின் கதையை கூடங்குளத்தில் உள்ள குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்!.
கார்ப்ரேட் சாமியார்களின் காலில் விழுந்து ஆசிவாங்கும் ஒரு அறிவியல் மேதையே அப்துல் கலாம் அவர்கள். சமஸ்கிருதத்தைப் பற்றியும், வேதங்களைப் பற்றியும் பெருமையாகப் பேசியும் எழுதியும் வந்தவர் தான் கலாம் அவர்கள். அதர்வண வேதத்தில் விமான அறிவியல் உள்ளதாக கண்டுபிடித்து காவிக்கூட்டத்திற்கு கருத்தியல் ஆயுதமாக பயன்பட்டவர்தான் கலாம் அவர்கள்.
அப்துல் கலாம் ஏழையாகப் பிறந்தார். இந்திய ஆளும்வர்க்கத்தின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தார். அதற்காக குடியரசுத் தலைவர் பதவியை பரிசாகப் பெற்றார். அப்பட்டமான முதலாளித்துவ நச்சுக் கருத்துக்களை இளைஞர்கள் மத்தியிலே விதைக்க முயற்சித்தார். கலாமிடம் இருந்து இன்றைய இந்திய இளைஞர்கள் கற்றுக்கொள்ள ஒன்று இருக்கின்றது. அது என்னவென்றால் அவரைப்போல இல்லாமல் இருப்பதே!
- செ.கார்கி
உங்களைஒவ்வொரு மாணவனின் பேச்சு போட்டி .கட்டுகளில் அவரது சிந்தனை துளிகள் சிதறியிருக்க கூடாது இன்றளவும் என்னைமாதிரி சில பேர் அக்த்தனை..
ஒவ்நீஅவர்உங்கள மாதிரி சுயநல புழுக்கள் நெளியும் வாழ்ந்ததே மாபெரும் பெர்ுமைுமை பெருமை... விவேக் என்னும் நகைச்சுவை நடிகர் 2100000 மரகன்றுகள் நட்டுறுகிறார்.. காலாம் அவரை 1கோடி மரங்களை நடவேண்டும் என கூறியிறுகிறார். ..இன்னுமும் அவரை உண்மையாக நேசுகிறவர்கள் அவர் பாதை ஐயமின்றி செல்லலாம்.. அவரை பிடிக்காதவர் ஒதுங்கி நின்றுவிடாலாம். .. மனதை எளியதாக்கி அறிவை பெரியதாக்கியவர் .,எனக்கு தெரிந்து இவர் மட்டுமே இந்தியா வல்லரசாக வேண்டும் என ஆத்மார்தமாக ஆசைபட்டவர்.. ஒவ்வொருவரும் முதளாலி ஆகவேண்டும்,புது புது தொழில்களை கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு மனம் ஒருநிலையில் இருந்தால் தினமும் அதை நினைத்து கனவு கண்டால் நிச்சயம் நிறைவேறும் என்று எல்லொருக்கும் ஒரு தந்தையாக சொன்னவர்.. தயவு செய்து ஏளனமாக பேசீவிடாதீர்கள்..
நீ நீயா இரு ஆனால் உன் எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும் என்று இவர் தான் கூறியுள்ளார்..
வேறு எந்த அரசியல் ஆசாமிகளும் எங்களுக்கு கூறவில்லை கீற்ற்றல்
Oru vishyatha pesradhuku munnadi adhuku first thagudhi venum, chumma internet um computer um irundha enna venumnalum eludhirradhu. Ipdi eludhirukiye ne venumna yaaroda kaikooliyaga irukalam.
of so many things.
his asset is books and people's only.
There is some thorn in the rose... In your view
எத்தனை 100மரங்களை நட்டுறுப்பீர்கள்
எத்தனை ஏழை குழந்தைகளை படிக்க வைத்து இருப்பீர்கள்
1. அவருடைய வேலை வு*விஞ்ஞானம் அதுல சிறந்து விளங்கினார்
2. ஜனாதிபதியாக இருந்த போதும் அவர் வேலையிர்*ல் சிறப்பாக செய்தார்
3.ஏழை குடும்பத்தில் பிறந்த அவர் அறிவை மட்டும் நம்பி வானில் பறந்தவர்
அரசியல் சாக்கடையை அவர் ஒருவரால் மட்டும் சுத்தப்படுத்த முடியுமா
அவர் எத்தனை கோடியை ஒழித்து வைத்துள்ளார்.
ஒரு மென்மையான பூவினால் ஒரு மரத்தை சாய்க்க முடியுமா!
அவரால் எது முடியுமோ அதை சிறப்பாக செய்தவர்
கருநாநிதி போல் செல்வாகெகு அடியாட்கள் இருந்திருந்தா்* ல் கண்டிப்பாக இன்னும் உழைத்திருப்பார்.
கடவுள் ஆயுள்ளயும் அதிகப்படுத்திருப்பார்
அடுத்த தலைமுறையினறை நேரில் சென்று வழிநடத்தியவர்
இளைஞர்கள் மூலம் மறைமுக போராட்டம் செய்தவர்,
தனக்காக எதையும் சம்பீ*பாரிக்கவில்லை
ஏழையாக பிறந்தார்
எளிமையாக வாழ்ந்தார்
அறிவால் வானுற பறந்தார்
அமெரிக்கா போன்று நம்நாடும் வல்லராசாக வேண்டுமென நம் நல்லதுக்காக கனவுகண்டார்
அவரை பாராட்ட மனமில்லை எனில் நல்ல மனிதரை குற்றம்கூற வேண்டாம்.
இதுனால் வரை நீங்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்துள்ளீர்கள்!!!!!!!!!
முடிந்தால் அவரின் ஆசைப்படி ஒரு மரக்கன்றாவது நடுங்கள்!!!!!!
1. எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டுவது.
2. கருத்தியல் ரீதியாகவும் தர்க்க ரீத்யாகவும் பேசுவதாக நினைத்து கொண்டு பொது மக்களின் இயல்பான மனநிலையை புரிந்துகொல்லாம ல் நடப்பது
3.பொதுமக்களிடம் இருந்து அந்நிய பட்டு விடுதல்
4. தங்களை மிகப்பொறிய புரட்சி யாளர்களாக கற்பனை செய்து கொள்ளல்
5.மற்றவரிடம் உள்ள நல்லதை விட்டுவிட்டு கெட்டதையேஎப்பொழ ுதும் பார்ப்பது
6.அறிவாளித்தனமும் இவர்களிடம் காணப்படும்
கலாம் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் மட்டுமல்ல. வாழ்நாள் முழுதும் எளிய வாழ்க்கை முறையை கடைபிடித்தவர். இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஓர் வல்லரச்சகக்க விரும்பியவர். தமது வாழ்நாளை அதற்காக தனது செலவழித்தவர். மகாத்மா காந்தி அஹிம்சை கொள்கையை வலியுறுத்தினார் என்ற போதிலும், இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்று சொல்லவில்லையே! குடியரசுத் தலைவர் பதவி கலாம் அவராக கேட்டுப் பெற்றதல்ல. அவரை நாடி வந்தது. கலாமுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டம் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டதல்ல. யாரும் காசு வாங்கிக் கொண்டு அழவில்லை. அவசரநிலை பிரகனடனம், ஈழமக்கள் விடுதலை, பாபர் மசூதி இடிப்பு, விவசாயிகள் தற்கொலை... என அனைத்துக்கும் அவர் பதில் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையற்றது. இதற்கு பதில் சொல்ல அவர் ஒன்றும் ஓர் அரசியல்வாதி அல்ல. ஓர் செயலை செய்ய நல்ல நேரம் பார்ப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது... போன்ற ஜோதிடஸ்தாத்திரங ்களை எல்லாம் கலாம் ஒத்துக்கொண்டதே இல்லை. இதனை அறிய அவரது அக்கினி சிறகுகளை வாசித்துப் பாருங்கள். கல்லூரிகளில் எத்தனையோ தலைப்புகளின்கீழ ் பாடங்கள் இருக்கின்றன. ஒருவர் குறிப்பிட்ட படிப்பை எடுத்து படிப்பதினால் அவர் மற்ற படிப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டுமா என்ன?
இவ்வளவு பேசுகிறீர்களே, இத்தனை காலம் மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த கம்யுனிஸ்டுகள் அந்த மாநிலத்தின் சுபீட்சத்துக்கு எதை செய்து விட்டீர்கள்? வங்கத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சி, வாழ்வாதாரம் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றுவிட்டது - போராடுவதை தவிர? இன்னமும் மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஸாவை கூட உங்களால் அங்கு ஒழிக்க முடியவில்லையே? சோவியத் மக்களாலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் தூக்கி எறியப்பட்ட உங்களது உழுத்துப்போன கொள்கையை இன்னமும் கட்டி மாரடித்துக் கொண்டிருக்கிறீர ்கள்.
கலாம் சொன்ன அறிவுரையில் ஒன்றை மட்டுமாவது நீங்கள் பின்பற்றுங்கள் அல்லது பின்பற்ற உதவுங்கள். ஆம், மரம் நடுங்கள். வருகிற தலைமுறைக்கு நீங்கள் செய்யும் புண்ணியமாக இருக்கும். மாறாக, வறட்டு வேதாந்தங்கள் அல்ல.
சூலை 30, தனி மனித இறப்பில் கூட நாட்டில் எழுச்சியை தூண்ட முடியும், தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்கிற வலிய கருத்துக்களை முன்வைத்து தனது இறப்பிலும் கூட சாதனைக் கருத்துகளை கூறிய மாமனிதர் அய்யா அப்துல் கலாம் அவர்கள், எதுவும் சாதிக்கவில்லை என்கிற தொனியிலும், அவரை ஒரு அரசியல் கைக்கூலியாகவும் சித்தரித்துள்ளன எனக்கு கிடைத்த சில Whats App தகவல்களும், ஒரு blogல் எழுதியிருந்த கட்டுரையும்.
Whats App இல் நான் கிடைக்கப்பெற்ற தகவலானது ஒரு தமிழனத்துக்கு குரல் கொடுக்கும் ஒரு நல்ல போராளியின் பெயரில் பதிவானது. அத்தகவலுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு அவ்வியக்கம் சார்ந்த Whats App குரூப் லிருந்தும் வெளியேறிவிட்டேன ்.
மற்றொரு தகவல் குறித்து தெரிந்து கொள்ள:
keetru.com/.../...
தன்னை மாற்றுச் சிந்தனையாளனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் இவ்விரு நபர்களுக்கும் இதோ சில கேள்விகள்.
1. அப்துல் கலாம் விதைத்த தன்னம்பிக்கையை உங்களால் விதைக்க முடியுமா இளைஞர்களின் இதயத்தில்? ஏனெனில், ஒரு நம்பிக்கையை உடைக்க முற்படுவோர் அதைவிட பெரிய நம்பிக்கையை உங்கள்பால் உருவாக்க வேண்டும்.
2. "அவர் ஏவுகணை தானே விட்டார், மக்களுக்கு என்ன செய்தார்?" என்கிற உங்கள் கருத்துக்கு,
நீங்கள் என்ன செய்தீர்கள்?
ஏவுகணை விட்டது ஆளும் வர்க்கத்திற்காக அல்ல. நம்மை அழிக்க நினைக்கும் அந்நிய வர்க்கத்திற்காக.
3. இவ்வளவு குறைகூறும் நீங்கள் இவ்வளவு நாட்களாக எங்கு சென்றீர்கள்?
4. உங்களின் இந்த மாற்றுச்சிந்தனை யின் நோக்கம் பகட்டு விளம்பரத்திற்கா க அல்ல என்று உங்கள் மனசாட்சி பதில் சொல்லுமா?
ஆம் எனில், Whats App இல் பதிவு செய்திருந்த ஒரு பேரியக்க தலைவரே, நீங்கள் பகிர்ந்த செய்தியை தொலைக்காட்சி ஊடகங்களுக்கும், பத்திரிக்கை ஊடங்ககளுக்கும் பகிர முடியுமா? அந்த அளவுக்கு உங்களுக்கு திராணி இருக்கிறதா? பகிர்ந்து பாருங்கள்.. இளைஞர்களின் எழுச்சியை இந்தியா காணும்.
5. மதுவுக்காகவும் ஒரு வேலை பிரியாணிக்காகவு ம் கூடிய கூட்டம் என்றா நினைத்தீர்கள்? உங்கள் கருத்துகளை படிக்கும் ஒவ்வொரு இளைஞனும் கொந்தளிப்பான். தங்களால் சாதிக்க முடியவில்லை என்றால் முயற்சி செய்யுங்கள். முயற்சிக்கக்கூட முடியாதவர்கள் மட்டும் தான் குறைகூறும் வேலைகளை செவ்வனே செய்வர்.
கேள்விகள் முடியவில்லை... இனி ஒவ்வொரு இளைஞனும், ஒவ்வொரு மாணவனும் உங்கள் பதிவுகளை காணும் போது பெரிய மனிதர்கள் என்றும் பாராமல் கேள்வி கேட்பார்கள்.
கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் விளம்பர வியாபாரம் செய்வதை கூடுமான வரையில் தடுக்கும் முயற்சியே தவிர விளம்பரத்திற்கா க எழுதப்பட்டது அல்ல.
-மதன்
but Now, after reading this article I changed my mind........... .CURSE OF GOD ON YOU Mr.KARKI,
RSS feed for comments to this post