கடவுள் என்ற ஒன்று இருக்கின்றதோ இல்லையோ, ஒரு சமூகம் ஒரு பொதுக்கோயிலில் வழிபடுகிறதென்றால், அம்மண்னைச் சேர்ந்த மற்ற சமூகத்தினருக்கும் உரிமையுண்டு. ஆனால், அந்த உரிமையை நிலைநாட்டும் பயனளிக்கக் கூடிய செயல்முறை எது?
பெரியார் காலத்தில் இருந்த தீண்டாமை நிலைமைக்கு ஒரு அதிரடி செயல்முறை தேவைப்பட்டது. அது தான் பலவந்தமான ஆலய நுழைவுப் போராட்டம். அதுவும் அன்று பெரும்பாலும் பார்ப்பன ஆதிக்க கோயில்களில் தான் நடைபெற்றது. அன்று தீண்டத்தகாதவர் நுழைந்து விட்டாலே கடவுள் அங்கு குடிகொள்ள மாட்டான் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு, அந்த அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது. ஆலய நுழைவு நடைபெற்ற கோயில்களில் தொடர்ந்து அர்ச்சனை செய்யவேண்டிய நிலையிலிருந்த பார்ப்பனர்களால், தீண்டத்தகாதவர் என்றழைக்கப்பட்டவர்கள் நுழைந்த பின்பும் கடவுள் அங்கே தொடர்ந்து குடிகொண்டிருக்கிறார் என்பதை மறைமுகமாக ஏற்கவேண்டிய நிர்பந்தம் இருந்தது. தவறான புரிதலில் இருந்த சமூகம், விழிப்புணர்வு பெற அந்த அதிரடி நடவடிக்கை தேவைப்பட்டது.
ஆனால், இன்றய நிலை பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. பெரும்பாலான கோயில்களில் அனைத்து சாதியினரும் தடையின்றி வழிபட முடிகிறது. தீண்டாமை எனும் கோரப் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இரண்டு நிலைகளும் முழுமை அடையவில்லை என்பது தான் நமது விசனம். தீண்டாமையும், கோயில் ஒதுக்கும் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் கோர முகத்தைக் காட்டி நிற்கின்றன. இவற்றிற்கான விரைந்த தீர்வு வேண்டும். அந்தத் தீர்வுக்கான செயல்முறை என்னவாக இருக்க முடியும்?
பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியினரும், பழந்தமிழரும் (தாழ்த்தப்பட்ட மக்களை இவ்வாறு இனி அழைக்கிறேன். தலித் என்ற தமிழல்லாத சொல்லால் அழைப்பதை ஏற்க இயலாது), பார்ப்பனியத்தின் வர்ணாசிரமக் கோட்பாட்டால் வஞ்சிக்கப்பட்ட சமூகங்கள். இப்போது சிக்கலில் உள்ள சமூகங்கள் பார்ப்பனரால் சூத்திரர் என்றழைக்கப்பட்ட நான்காம் வர்ணத்தவரும், பார்ப்பனரின் நான்கு வர்ணங்களில் அகப்படாத, Social OutCaste என்றழைக்கப்பட்ட, ஐந்தாம் வர்ணத்தவரும் (பஞ்சமர்) தான். எனவே, இப்போதுள்ள ஏற்றத் தாழ்வுக்கு இவர்கள் காரணமல்ல. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான அந்த போதிக்கப்பட்ட வேற்றுமையால், அந்தப் புரையோடிப்போன ஏற்றத் தாழ்வுகளால் உண்டான சமூக மதிப்பீடுகளால், பிளவுண்டு ஒருவிதமான சமூக அச்சத்தில் வாழும் சமூகங்கள் தான் இவை.
எனவே ஆதிக்க சாதியரிடம் உள்ள பழந்தமிழர் பற்றிய தாழ்வான எண்ணங்களை, அவை செயற்கையானவை என்பதை உணர்த்தி அகற்ற வேண்டும். அதேபோல, பழந்தமிழரிடம் வேரூன்றியுள்ள தம்மைப் பற்றிய தாழ்வான எண்ணங்களையும், அவை செயற்கையானவை என்பதை உணர்த்தி, அகற்ற வேண்டும். ஒரே மண்னைச் சேர்ந்த இம்மக்கள் ஒரே தகுதியை உடையவர்கள் தான் என்ற உண்மையை, வரலாற்று ரீதியாக உணர்த்த வேண்டும்.
தமிழகத்தின் நீண்ட வரலாற்றையும், அது கண்ட பெருமிதங்களையும், அந்தப் பெருமிதங்களில் பங்கேற்ற அனைத்து மண்ணின் மக்களையும், இந்த மண்ணின் மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் அபாயங்களும், அந்த அபாயங்களை எதிர்கொள்ள இந்த மண்ணின் மக்கள் ஒன்றிணைய வேண்டிய நிர்பந்தங்களையும், அக்குவேறு ஆணி வேறாக எடுத்தியம்பினால், இம்மக்கள் விரைவில் மனமுதிர்ச்சி அடைவார்கள். ஈழத்தின் அழிவு, இந்தியாவின் துரோகம், உலகின் பாராமுகம் ஆகியவற்றின் ஆழமான உண்மைகளை முறையே விளக்கினால், தமிழருக்குள் புதிய சாதிகடந்த தோழமை உருவாகும்.
இந்த முதல்கட்ட வெற்றியை வரலாற்று மற்றும் பயிற்சி வகுப்புகள் வாயிலாக, பழந்தமிழருக்குத் தனியாகவும், ஆதிக்க சாதியினருக்கு தனியாகவும் முதல்கட்டமாக எடுத்து, அவர்களின் ஐயங்களைக் களைந்து, பிறகு இரு சாராரையும் அமர்த்தி, பொதுவான வகுப்புகள் எடுத்து, அந்த இரு சமூகத்தினரும் சக-மதிப்போடு ஒருவரையொருவர் நடத்திக்கொள்ள வகை செய்ய வேண்டும். இந்த முதல் கட்ட வெற்றிக்குப் பிறகு இருசாராரையும் கோயிலில் சம-பந்திக்கு பங்கெடுக்க வைத்து, சமூக ஒப்புரவை இயல்பாக்க வேண்டும்.
இந்த இரண்டு சமூகங்களுக்கும் உள்ள சுயகட்டுப்பாடுகளையும், பொறுப்புணர்வையும் உணர்த்தத் தவறக் கூடாது. குறிப்பாக, பழந்தமிழரின் கல்வி, பொருளாதார அந்தஸ்து உயரும்வரை, கிராமப்புறங்களில் சாதி தாண்டிய காதலைத் தவிர்க்க வேண்டி அறிவுறுத்த வேண்டும். இது ஒரு இடைக்கால ஏற்பாடு தான். பழந்தமிழரின் பொருளாதார, கல்வி அந்தஸ்து பரந்த அளவில் உயரும்போது வேற்றுமைகளும், தடைகளுமற்ற சமூதாயமாக அது இயல்பாகவே உருப்பெரும்.
இந்த செயல்முறையை ஊர்தோறும் செய்ய, கற்றறிந்த சான்றோர்கள் ஒன்றிணைந்து பேரியக்கம் ஒன்று காணவேண்டியது காலத்தின் கட்டாயம். ஈழ அழிவுப் பின்னணியில் பொதுவான விழிப்புணர்ச்சி பரப்புரைகளாவது கிராமந்தோரும் செயல்படத் தொடங்கியுள்ளன என்பது ஒரு ஆறுதலான செய்தி.
ஆனால், இதுபோன்ற அறிவார்ந்த அணுகுமுறையை விடுத்து, C.P.M. இப்போது பலவந்தமான ஆலயநுழைவுப் போராட்டங்கள் நடத்துகின்றது. அதிரடி ஆலய நிகழ்வு என்பது அந்த மக்களின் வேற்றுமையைத் தீவிரப்படுத்துமே ஒழிய இந்த சமூகங்களுக்கிடையே ஒப்புரவை ஏற்படுத்தாது. தாம் சிறுமைப் படுத்தப்பட்டதாக உணரும் ஆதிக்க சாதி, வஞ்சம் தீர்க்க எண்ணுமே ஒழிய, வழிக்கு வாராது. அதுவும், ஒவ்வொரு ஊரிலும், பழந்தமிழரைவிட ஆதிக்க சாதிகளின் மக்கள் தொகை மிகையாயிருக்கும்போது இந்தச் செயல்கள் எதிர்பார்ப்புக்கு மாறான விளைவுகளையே தரும். இவை C.P.M. உணராததா? இருக்கலாம்! ஏனென்றால், வர்க்கத்தைவிட சாதிவேற்றுமை ஆழமானது என்பதை, இந்த "வறட்டுவாதிகள்" உணர, எழுபதாண்டுகள் பிடித்தனவே! ஆனால், பெரியார் காலத்திலிருந்து இன்றுவரை இது பற்றி சட்டை செய்யாத C.P.M. இப்போது புதிதாக ஆலயக் கதவுகளைத் திறக்கக் காரணம், இவர்களின் மேற்குறிப்பிட்டது போன்ற "அபார சிந்தனைத்திறன்" மட்டுமல்ல. அவர்களின் ஆண்டாண்டுக்கால "குயுக்தி"யும் தான் காரணம்!
அந்தக் குயுக்தி எது? ஆரியம் இங்கு வந்தேறிய சிறுபான்மையினம். இங்குள்ள மண்ணின் மைந்தர்களைவிட பல நாகரிகங்களை அறிந்த இவர்கள், எதார்த்தங்களை அறிந்த "சாமர்த்தியசாலிகளாக" இருந்தனர். வெறும் தோலின் நிறத்தால் தங்களை உயர்வாக எண்ணிய இம்மக்கள், அந்தக் கற்பனை மேட்டிமையை நிலைப்படுத்திக் கொள்ளும் விழிப்புணர்வை இயல்பாகவே கொண்டிருந்தனர். எனவே, எந்த ஒரு சமூக மாற்றத்தையும் மோப்பம் பிடித்து, அதைத் தமக்குச் சாதகமாகவோ அல்லது தமது கட்டுப்பாட்டிலோ இருக்கும்படியாக, திட்டமிட்ட எதிர் நடவடிக்கைகளை கைக்கொண்டனர்.
உலகலாவிய கம்யுனிச கோட்பாடு வளரும் தன்மையை அறிந்த அவர்கள், அது தமது மேட்டிமைக்கு வேட்டு வைக்கும் கருத்தியல் என்பதால், அதைத் தாமே முன்மொழிந்து, அரவணைத்து, திரித்து, நீர்த்துப் போகும்படிச் செய்தனர். எனவே, இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கங்களின் தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை பார்ப்பனத் தலைமையாய் இருப்பது வியப்பானதல்ல. எனவே தான், இனங்களைப்பற்றிய தெளிவான மார்க்ஸியக் கோட்பாடுகள் இருந்தும், இன உணர்வுகளைக் கடந்த வர்க்க ஒற்றுமை என்ற "இயங்காவியலை" கார்ல்மார்க்ஸின் பேரால் "புனைந்து", இந்திய உழைக்கும் வர்க்கத்தின் மீது திணித்தனர். சிங்கள JVP ஐ ஒழிக்க சீனா உதவியதை அறிந்த பிறகும், மாவோ காலத்திலேயே திபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட வரலாறு அறிந்தும், இவர்கள் உலகளாவிய வர்க்க ஒற்றுமையை, இனங்களைக் கடந்த வர்க்க ஒற்றுமையை தொடர்ந்து பீற்றிக் கொண்டிருந்தது, அறியாமையால் அல்ல! திட்டமிட்ட ஏய்ப்பு எண்ணத்தால் தான்!
பார்ப்பனீய வர்ணாசிரமக் கோட்பாட்டால் செயற்கையாக சிதைக்கப்பட்ட, தனித்துவமான, பழம்பெரும் இந்திய நிலப்பரப்பின், சாதிய வேற்றுமைகளை இவர்கள் திட்டமிட்டே குறைத்து மதிப்பிட்டு, சாதிய வேற்றுமைகளைக் களையவேண்டிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை நேர்மையுடன் முன்னெடுக்காமல், வர்க்க வியாக்கியானங்களையே நிகழ்த்திக் கொண்டிருந்தனர். சாதி களையப்பட்ட இந்திய வர்க்கங்கள் இன ரீதியாக ஒன்றுபட்டால் அது இரண்டு விளைவுகளைக் கொடுக்கும். முதலாவதாக, இந்தியா இன ரீதியாக பல தேசங்களாக பிளவுபட நேரிடும். இரண்டாவதாக, உண்மையான மார்க்ஸிய சமூகம் உருவாகும். இந்த இரண்டுமே பார்ப்பன, பனியா கும்பலுக்கு முற்றிலும் ஒவ்வாத விடயங்கள். இந்த இரண்டு இனங்களின் மேலாதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும் ஒன்றுபட்ட, "ஒற்றை" இந்தியா இன்றியமையாதது.
பனியா முற்போக்காளர் காந்தி முதல், பார்ப்பன முற்போக்காளர் பாரதி வரை இந்தக் கருத்தியல் தான், அவர்களின் அடிப்படை அரசியலை வழிநடத்தின. மார்க்ஸியப் போராளியான பகத்சிங்கை விரைந்து தூக்கிலிட, காந்தி எடுத்த ஒரு முயற்சி மட்டுமே ஆயிரம் சான்றுகளுக்கிணையானது.
இந்த "மஹாத்மாக்களின்" சிந்தனையே இப்படி என்றால், கம்யூனிச இயக்கங்களின் பார்ப்பனக் கருத்தியல் என்னவாக இருந்திருக்கும் என்பது வெள்ளிடை மலை. ஒரு வங்காளிப் பிராமணக் கம்யூனிஸ்டு தலைவர், (பெயர் நினைவில்லை) தான் முதலில் பிராமணன் பிறகுதான் கம்யூனிஸ்டு என்று பிரகடனம் செய்தது, இந்தக் கம்யூனிஸ்டுகளின் போலித்தனத்துக்கு ஒரு சான்று. இந்தப் பின்புல செய்திகளோடு தான் இப்போதய C.P.M. வழிநடத்தும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நாம் அணுக வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் கம்யூனிச இயக்கங்கள் அம்பலப்பட்டுள்ளன. அதிலும், ஈழ அழிப்பில் C.P.M., இந்திய ஆளும்வர்க்கத்துடன் துணை நின்றது. 60 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக பெரும் தியாகங்களைச் செய்து போராடிய புலிகளை பாசிஸ சக்திகளாக புனைந்து காட்ட இந்த இயக்கம் முனைந்தது. புலிகளின் ஆட்சியில் சுயமரியாதையோடு வாழ்ந்த ஈழ உழைக்கும் மக்களை இன்று எதிரியின் முள்வேலிக்குள் வைத்த பழி C.P.M. வகையறாக்களையும் சாரும். இந்தப் புரிதல் இன்று தமிழக மக்களிடையே பரவலாக உள்ளது. எனவே கடுமையாக அப்பலப்பட்டுள்ள இந்த இயக்கம் தன்னைக் காத்துக்கொள்ள தற்போது எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைதான் ஆலய நுழைவுப் போராட்டம்.
இந்த அதிரடி ஆலய நுழைவுப் போராட்டத்தின் ஊடாக இந்த இயக்கம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறது. இந்த ஆலய நுழைவுப் போராட்டத்தின் வழியாக அது, பழந்தமிழரின் ஆதரவைப் பெற்று தனது சரிந்துவரும் ஆதரவைத் தடுக்க நினைக்கிறது. அதே நேரம், சமூகத்தில் பிளவை உண்டாக்கி, உறுதிப்படுத்தி, முகிழ்ந்து வரும் தமிழ்த்தேசியக் கருத்தியலை முறியடிக்க முயல்கிறது. எனவே, இந்த பார்ப்பன கம்யூனிச இயக்கங்களின் உண்மையான நோக்கம் சமூக மலர்ச்சியல்ல.
பார்ப்பன, பனியாக்களைப் போலவே இந்த பார்ப்பனக் கம்யூனிஸ்டுகள் இந்திய தேசியத்தை எப்பாடு பட்டேனும் கட்டிக் காக்க நினைக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தில் ஒரு தேசம் மலர்ந்தால் அது காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற விடுதலைக்குப் போராடும் மக்களை வலுவாகத் தூண்டிவிடும். அதை இந்தக் கம்யூனிஸ்டுகள் விருப்புவதில்லை. எனவே, ஈழ உழைக்கும் மக்கள் அங்கே சிங்களப் பாஸிஸ்டுகளால் இனப்படுகொலை செய்யப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டாலும், அந்த அழியும் மக்களுக்கு தேசம் மட்டும் மலரக் கூடாதென கங்கணம் கட்டிப் போராடுகிறது C.P.M. எனவே, அங்கு அவதியுறும் மக்களின் நிலைமைக்குக் காரணமான இந்தியாவின் செயல்களைக் கடியாமல், புலிகளே காரணமென கடுமையான பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டன. ஆனால், அவை தமிழக மக்களிடையே எடுபடவில்லை.
C.P.M கட்சி இன்னுமொரு முறையிலும் அம்பலப்பட்டுள்ளது. அது முல்லைப் பெரியாறு. உழைக்கும் வர்க்கத்திற்கான இந்திய தேசியக் கட்சி, கேரளாவில் ஆட்சியிலிருக்கும் அந்தக் கட்சி, தமிழக உழைக்கும் வர்க்கமான உழவர்களின் நலனுக்கெதிராக பச்சையாக செயல்படுகிறது. அதைத் தட்டிக் கேட்க தமிழக C.P.M. விழையவில்லை. ஏனென்றால், தமிழக C.P.M. ஐ ஆக்கிரமித்திருப்பவர்கள் மலையாளிகளே! இந்தக் கட்சியில் பார்ப்பன, மலையாள ஆதிக்கத்தில், தமிழர்கள் அடிமைகள் போல உள்ளனர். மலையாளிகள் மலையாள தேசியத்தை விரும்பவில்லை. மலையாளிகள் அனைவரும் பச்சையான இந்திய தேசியவாதிகள். எனவே, இவர்களும் பார்ப்பனர்களும் இயல்பானக் கூட்டாளிகளாயுள்ளனர். இந்தப் புரிதல் தான் இந்திய ஆட்சியதிகாரத்தில் மலையாளிகளை, பார்ப்பனருக்கிணையான அதிகாரத்தில் வைத்திருக்கிறது. பார்ப்பனர்களைப் போலவே, மலையாளிகளும் ஒரு கடுமையான சுரண்டும் வர்க்கமே! மலையாளிகளும் ஒரு ஒடுக்கும் வர்க்கமே!
எனவே, C.P.M. என்பது வங்காள, மலையாளப் பார்ப்பனீயக் கட்சிதானே ஒழிய, அது தமிழருக்கான கட்சியல்ல. இந்தப் புரிதல் தமிழக கம்யூனிச இயக்கங்களிலுள்ள இளைஞர்களுக்கு வரவேண்டும்.
இக்கட்டுரையின் சுருக்கமான கருத்தாக, பார்ப்பனர்களால் சாதி வேற்றுமைகள் வளர்த்துவிடப் பட்டன. கடவுளின் பெயரால் அடக்குமுறைகள் மூட நம்பிக்கைகளாக பார்ப்பனர்களால் வளர்க்கப்பட்டிருந்தன. பார்ப்பனர்கள் சிறுபான்மை சமூகம். எனவே, தீண்டாமைக் கொடுமை கடுமையாக இருந்த அந்தக் காலத்தில் அதிரடி ஆலய நுழைவு பயனளித்தது.
இப்போது தீண்டாமை பெருமளவு குறைந்துள்ளது. பெரும்பான்மையான ஆலயங்களில் பழந்தமிழரின் வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. குறிப்பிடத்தகுந்த அளவு மனமாற்றம் ஆதிக்க சாதி மக்களிடையேயும் நிகழந்துள்ளது. எனவே நாம் இங்கு முன்வைத்துள்ள நெகிழ்வான அணுகுமுறைகள் மூலமே மீதமுள்ள மாற்றங்களைக் கொணர முடியும். ஈழ அழிவின் பிற்காலத்தில், சாதியத்தை ஒழிக்க வேண்டிய அவசரம் பரவலாகவும், பலராலும் உணரப்பட்டுள்ளது. நாதியற்ற தமிழினம் ஒன்றுபட வேண்டிய காலகட்டத்தில், இது போன்ற அதிரடிப் போராட்டங்கள் மக்களைப் பிளவுபடுத்த மட்டுமே உதவும். மேலும் ஆதிக்க சாதிமக்கள் பழந்தமிழரைவிட மிகையாக உள்ளதால் இது போன்ற அதிரடிப் போராட்டங்கள் எதிர்விளைவுகளைத் தான் உருவாக்கும். பார்ப்பன C.P.M. அதைத்தான் விரும்புகிறது. தமிழரைப் பிரித்தாள்வதே அதன் ஒரே நோக்கம். தமிழக C.P.ம்., வெளிமாநிலத்தவராலும், பார்ப்பனர்களாலும் நிர்வகிக்கப்படும் இயக்கம்.
சர்வதேசிய உழைக்கும் மக்களுக்கான கட்சியைச் சேர்ந்த இவர்கள், புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தக் கொட்டும் மழையிலும் தடுப்பு முகாம்களில் சித்திரவதைக்குள்ளாகும் மக்களை விடுவிக்க முயல்வார்களா அல்லது தமிழ் மக்களைப் பிரிக்கும் பலவந்தமான ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்துவார்களா? வாரந்தோரும் பலநூறு மக்களைப் பலிவாங்கும் ஈழச்சிக்கல் முதன்மையானதா இல்லை இல்லாத கடவுளின் வெற்று இல்லத்தில் நுழைவது முதன்மையானதா? சொந்த வீடுள்ள ஈழமக்களை எதிரியின் வதை முகாமிலிருந்து விடுவித்து, அவர்களின் சொந்த வீடுகளில் நுழைய விடுவது தானே உண்மையான மார்க்ஸியர்களின் தொடர் போராட்டமாக இருக்க முடியும்?
இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்னரும், ஈழ மக்களுக்கு தனித் தேசம் தான் தீர்வென்ற கருத்தை வைக்காமல், கொஞ்சமும் வெட்கமில்லாமல், ஒன்றுபட்ட இலங்கைதான் தீர்வென்று கூறிக்கொண்டு, ஈழ மக்களுக்காக வெற்று நீலிக் கண்ணீர் விடும் இந்த "மகா யோக்கியக்" கட்சியினர், தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்று நம்புவது, கசாப்புக் கடைக்காரனை நம்பும் ஆடுகளின் கதையாகத் தான் முடியும்.
விழித்துக் கொள்ளுமா தமிழகம்?
- முனைவர் வே.பாண்டியன்
திண்ணியத்தில் மலத்தை திணித்தது; மேலவளவில் ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட ஆறுபேரை வெட்டிக் கொன்றது; செகுடந்தாளியில் முருகேசன் படுகொலை செய்யப்பட்டது; சேலத்தில் சிறுமி தனத்தின் கண்கள் குத்தப்பட்டது; கண்ணகி- முருகேசன் எரித்துக் கொல்லப்பட்டது.. . தாமிரபரணியில் தலித்துக்கள் 17 பேரை கொன்று ஆற்றில் மிதக்க விட்டது... காரணமான கலெக்டரை மாற்றவேண்டும் என்று சொன்னபோது, கலெக்டரை மாற்றினால் முக்குலத்தோர் கொந்தளிப்பார்கள ் என்று இதே கருணாநிதி, அன்று சொன்னது... தலித்துக்கள் ஆண்நாய் கூட வளர்க்கக் கூடாது என்பது, தலித் ஊராட்சித் தலைவர் ஜக்கன் படுகொலை செய்யப்பட்டது, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் 10 ஆண்டுகளாக தேர்தலே நடத்த முடியாமல் போனது... உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர் இன்னும் மிச்சமிருப்பது; அரசாங்கம் தரும் புள்ளிவிவரப்படி யே, தமிழகத்தில் 7 ஆயிரம் கிராமங்களில் இரட்டைக் குவளை முறை இருப்பது.... பெரியார் வழிவந்ததாக கூறிக்கொள்ளும் கருணாநிதியின் ஆட்சியில்,- கடந்த சில ஆண்டுகளில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்போரில் பெரும்பான்மையின ர் தலித் இளைஞர்கள் என்பது- அதிலும் கூட்டணியிலேயே இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் என்பது...
இதெல்லாம் எதைக் காட்டுகிறாம்...
உமது *****க் கண்களுக்கு...?
தமிழ்த் தேசியத் தோழமைகளே... பாண்டியன் என்ற இந்த ஆள் பார்ப்பன அடிவருடி... இவர், தமிழன், தமிழன் என்று சொல்வதெல்லாம், சுத்த பம்மாத்து. இந்த ஆளுக்கு தலித்துக்களையும ், இசுலாமியத் தோழர்களையும் பிடிக்காது.! அதற்கு இவரின் பல பின்னூட்டங்களே சாட்சி. அறிய விருப்பமுள்ளவர் கள், பல்வேறு தோழர்கள் எழுதியுள்ள கட்டுரைகளுக்கு செல்லலாம்.
பாண்டியனைப் பற்றி சுருக்கமாக சொன்னால் தமிழ்த் தேசியம் பேசும் நவீன ஆர்எஸ்எஸ் பேர்வழி!
எனவே, தோழர்களே எச்சரிக்கையாக இருங்கள்..! எதிரிகளைக் காட்டிலும், துரோகிகள் ஆபத்தானவர்கள்.
ஈழத் தமிழர்கள் தொடர்பாக வெளியாகும் கட்டுரைகளுக்கு முதல் ஆளாக பின்னூட்டமிடும் பாண்டியன், இதே கீற்று இணையதளத்தில், தலித்தியம் தொடர்பான எவ்வளவோ கட்டுரைகள் வந்திருப்பினும் , அவை ஒன்றுக்கு கூட பின்னூட்டம் இட்டதில்லை. தலித் பிரச்சனைகளில் அவர்களுக்காக கண்ணீர் விட்டு கடிதம் எழுதியதில்லை.
ஆனால், தலித் மக்கள் செட்டிப்புலத்தி ல் கோயிலுக்குள் நுழைந்து விட்டார்கள் என்றவுடன் கோபம் கொப்பளிக்கிறது. சாதிவெறி எட்டிப் பார்க்கிறது.... பாண்டியனுக்குள் ஒளிந்திருந்த பார்ப்பான் பல்லை இளிக்கிறான்.
தற்போது கூட தனது கட்டுரையில், மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினரைச் வளைத்து வளைத்து சாடுகிறாரே தவிர, தலித்துக்களை கோயிலுக்குள் விட மறுக்கும் சாதி வெறியர்களை எங்காவது கண்டிக்கிறாரா? இல்லை...
கேட்டால், தமிழ்த் தேசியத்தை கட்டியமைக்க முடியாதாம். சாதியத்தை சமரசம் செய்து கொண்டுதான் தமிழ்த் தேசியம் அமைக்க வேண்டும் என்றால், அந்த தமிழ்த் தேசியத்தை உண்மையான தமிழர்களும் சரி, தலித் மக்களும் சரி, ஏற்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
நமது பிணக்குகள் புதுசா என்ன? என்னைப்பற்றிப் புரிந்துகொள்ள பல கட்டுரைகளைப் படிக்கச் சொல்லியுள்ளீர்க ள் . மிக்க நன்று! என்னை ஒரு பழந்தமிழர் பகைவனாக நீங்களும் உங்களது "இயங்காவியல்" தோழர்களும் காட்டமுயற்சித்த ு "இயலாமல்" போனவையும் தட்டுப்படும். நல்லதே!
இந்தக் கட்டுரையின்படி என்மீது ஏதாவதொரு (அபாண்டமான) குற்றச்சாட்டு வைக்க முடியும் என்றால் அது என்னை ஒரு கம்யூனிசத்திற்க ு எதிரானவராகக் காட்டுவது மட்டும் தான். ஆனால், எளிதான அதை, பாவம் ஏனோ நீங்கள் தவிர்த்துள்ளீர் கள். ஆனால், மற்றபடி என்னைப் பற்றி நீங்கள் பாடிய பாட்டெல்லாம், இக்கட்டுரையோடு சுருதி சேராத பாட்டுகள் தான் பாவண்ணனே!
நான் உளச்சான்றுள்ள பகுத்தறிவாளன். எந்த சமயமாக இருப்பினும், அது பகுத்திறிவுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாக இருக்கக் கூடாது என்று கருதுபவர். எனவே, இந்திய இஸ்லாத்தைப் பற்றி நான் வைத்த தர்க்க ரீதியான கேள்விகளுக்கு, நீவிர் உட்பட, யாரும் பதில் கூற முற்படவில்லை. ஆனால், முறையாக பதிலளிக்காமல் அவதூறு மட்டும் செய்வது "அறிவுடையோருக்க ு" அழகல்ல. தாங்கள் எப்படியோ?
எனக்கு இறை நம்பிக்கை இல்லை. அதோடு, என்னைப் பொருத்தவரை எம்மதமும் சம்மதமே!
இது போன்று நிறைய எழுதுங்கள் பாவண்ணன். அப்போதுதான் நம்மைப் பற்றி வாசகர்கள் சரியாக மதிப்பீடு செய்ய இயலும்!
இந்தக் கட்டுரை எழுதும்போது இதற்கான எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்று தெரிந்தே எழுதினேன். நாம் சாடப்படுவோம் என்பதற்காக உண்மைகளைச் சொல்லாமல் இருக்கக் கூடாது. நான் பார்ப்பனர்களைப் பற்றி எழுதும்போது, இவர்கள் எழுதுவதை மட்டும் வைத்துப் பார்க்காமல், இவர்கள் எழுத:த் தவறுகிறவற்றையும ் வைத்துப் பார்த்தால் தான், இவர்களின் உண்மை ரூபங்களைக் காண முடியும் என்று பதிவுசெய்வேன்.
இப்படி எனது அறிவுறுத்தல் இருக்கும்போது, இந்த சிக்கலான விஷயத்திலிருந்த ு விலகி இராமல், நான் சரியென்று கருதுவதை துணிவோடு எழுதவேண்டும் என்றிருந்தேன். மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை!
//
ஈழத் தமிழர்கள் தொடர்பாக வெளியாகும் கட்டுரைகளுக்கு முதல் ஆளாக பின்னூட்டமிடும் பாண்டியன், இதே கீற்று இணையதளத்தில், தலித்தியம் தொடர்பான எவ்வளவோ கட்டுரைகள் வந்திருப்பினும் , அவை ஒன்றுக்கு கூட பின்னூட்டம் இட்டதில்லை. தலித் பிரச்சனைகளில் அவர்களுக்காக கண்ணீர் விட்டு கடிதம் எழுதியதில்லை.
//
என்று எழுதியுள்ளீர்கள ். சமீபத்திய கீற்றுவின் சிறப்புக் கட்டுரைப் பகுதியில், "உடக பயங்கரவாதம்" பற்றிய தலித்முரசு கட்டுரைக்காண எனது மடலைப் படித்துவிட்டு எனக்கு பதிலெழுதியிருந் தால் நல்லது. கண்களை மூடிக்கொண்டு இருட்டெனக் கூடாது! பழந்தமிழர் பற்றிய அனைத்துக் கட்டுரைகளுக்கும ் எழுதமுடியாவிட்ட ாலும், நிறையவே எழுதியுள்ளேன்.
குறிப்பாக, சட்டக்கல்லூரியி ல் அடிதடி பற்றி நான் என்ன எழுதினேன் என்று அக்காலத்தில் வந்த சிறப்புக் கட்டுரையைப் படித்துப் பார்க்கவும். எனது கருத்துகளில் முரண்பாடுகள் காண்பது இயலாது தோழரே!
நான் கள்ளக்குறிச்சி வட்டத்தைச் சேர்ந்தவர். எங்கள் பகுதிகளில், தற்காலத்தில், கிராமக் கோயில்களிலும், நானறிந்தவரை, பழந்தமிழர் தடையில்லாமல் வழிபடுகின்றனர். எனவே, நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது. எனது சிறு வயது முதல் இன்று வரை பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தே எழுதுகிறேன். எங்கள் பகுதிகளில் கட்டாய ஆலய நுழைவில்லாமலேயே இது நிகழ்ந்துள்ளது.
எனவே, இப்படி வெறிபிடித்துக் குத்தாட்டம் போடவேண்டாமே! (உங்கள் சொற்களிலேயே!)
சேனல்-4ல் காட்டப்பட்ட படுகொலையை நம்பமுடியாதென்ற கருத்துக் கூறி. என்னிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் தானே நீங்கள்? நல்லது, வாருங்கள்!
நானே, கடந்த ஆறு வருடங்களாகத் தான், தமிழரின் உண்மையான வரலாற்றை அறிந்துள்ளேன். வள்ளுவமே, பழிந்தமிழரின் நூல்தான் என்பதையும், வள்ளுவக் கணியர்கள் அறிவார்ந்த சமூகம் என்பதையும், தெற்கு அறிவு திசை என்பதையும், தெற்கே இருப்பவன் கறுத்த தோலுடையவன் என்பதையும், இந்த அறிவார்ந்த, கறுத்த, பழந்தமிழரைத் தான் இங்கு வந்தேறியப் பார்ப்பனீயம், கடும் பொறாமை கொண்டு ஒடுக்கி, தீண்டத் தகாதவராக ஆக்கி பழிதீர்த்துக் கொண்டது என்றும், நான் தெரிந்து கொண்ட செய்திகள் ஏராளம்! (வரலாற்றாய்வாளர ் குணா போன்றோரின் நூல்கள்).
இந்த வரலாற்றின் முழுப்பரிமானத்த ையும் தெரிகின்ற எவரும், தனது நிலைப்பாடுகளில் மாற்றம் கொள்வார்கள். நான் சொல்வது ஒரு பயன்தரக்கூடிய செயல் திட்டம். அதை அறிவும், நேர்மையும் உள்ளவர்கள் உணர்வார்கள். ஆனால், பார்ப்பனீயம் இதைக்கண்டு மிரள்வது இயல்பானது தானே! உங்களைச் சாடாமல் வரலாறு சொல்ல இயலாதல்லவா?
இன்று பெரும்பாலும் திருமணங்கள் முறிகின்றதைக் காணமுடிகிறது. இந்த நிலையில் சாதிகடந்த திருமணங்கள் முறியும்போது, அது வேறு பல பரிமானங்களை எடுக்கிறது. இந்தச் சாதிகள் அடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுவதால், சாதிகளை இணைப்பதற்குப் பதிலாக, பிளவைத் தீவிரப் படுத்தத் தான் பயன்படுகின்றன. நகர்ப்புரங்களில ் சாதிகடந்த காதல்களின்/திரு மணங்களின் தாக்கம் பெரிதாயிருக்காத ு. ஆனால், கிராமப்புரங்களி ல் அது சிக்கலுக்கான அடிப்படைக் காரணம் என்பதை கருத்துகளை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.
சக மனிதனை மறியாதையோடும், சம உரிமையோடும் நடத்தும் நிலையே நமது முதன்மைக் குறிக்கோள். அதை முழுமையாக அடையும்வரை கட்டுப்பாடுகள் தேவை என்பது தான் எனது வாதம்.
பார்ப்பனீயத்தை அழிக்கச் சொல்கிறோமே தவிர, மானுடர் எவரையும் அல்ல.
உமக்குப் பிடிக்காவிட்டால ும் சொல்கிறேன், பார்ப்பனீயம் தான் இம்மன்னின் அனைத்துச் சிக்கல்களுக்கும ் மூலக் காரணம். சற்றும் குழப்பம் வேண்டாம்!
தமிழ் நாட்டில் நெடுநாட்களாக இருப்பவன் அனைவரும் தமிழனே! எனவே, யாரையும் நாங்கள் பிளவு படுத்தவில்லை. பிளவு படுத்தி பயன் காண்பது உமது சமூகம் தான்!
"பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியினரும், பழந்தமிழரும் (தாழ்த்தப்பட்ட மக்களை இவ்வாறு இனி அழைக்கிறேன். தலித் என்ற தமிழல்லாத சொல்லால் அழைப்பதை ஏற்க இயலாது)".
தலித் என்ற தமிழல்லாத சொல்லால் அழைப்பதை ஏற்க இயலாது என்று பழந்தமிழர் என்றால் தலித் மனங்களில் வாழும் அம்பேத்கரை என்ன செய்வீர்கள்
அனைவரும் திராவிடனா !!! என்று ஆதி திராவிடன் என்றார்கள் !!. அதெப்படி அனைவரும் தமிழனாக முடியும் ,இந்தா பழந்தமிழன் பட்டம் !!...
தனித்தனியாக வகுப்புகள் எடுத்து, தாழ்வுமனப்பான்ம ையை விளக்கி, காதல் வந்துவிடாமல் பார்த்து,சம-பந் திக்கு பங்கெடுக்க வைத்து, ..என்னஒரு சமுதாய அக்கறை.
சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகின்றது இன்னும் கோயில் நுழைவுப் போராட்டமா என்று வெட்கப்படுவதை விட்டு விட்டு,பாடம் எடுக்க முயற்சி செய்து கடைசியில் ஈழப்போராட்டத்த ையும் தேவை இல்லாமல் இழுத்து விட்டிருக்கின்ற ீர்கள்.
சேனல்-4ல் காட்டப்பட்ட படுகொலையை நம்பமுடியாதென்ற கருத்துக் கூறி. என்னிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் தானே நீங்கள்? நல்லது, வாருங்கள்!//
நண்பர் பாண்டியனாரே, பழைய கதையை ஞாபகப்படுத்தியத ற்கு நன்றி. ஆனால் அப்பதிவு தொடரில் நான் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை, மாறாக என்னை நாலாந்தர வார்த்தைகளால் அர்ச்சனை செய்தீர்கள் என்பது உங்களுக்கு மறந்திருக்காது என நான் நம்புகிறேன்.
//சானல் 4 விடியோ பொய் என்றும் அது செல்போனில் படமாக்கப்பட்டதல ்ல வீடியோ காமிராவினால் எடுக்கப்பட்டது என்றும் வரும் தகவல்கள் பற்றி தங்கள் கருத்து என்ன? புலிகள் இதற்கு முன்னரும் தங்கள் வலிமை வாய்ந்த பிரச்சார சாதனங்கள் மூலமாக உண்மையற்ற படங்களை, செய்திகளை வெளியிட்டது சர்வதேச சமூகம் அவர்களை நம்பாமல்போனதற்க ான காரணங்களில் ஒன்று என்பது பற்றிய தங்கள் கருத்து என்ன?//
இது தான் நீங்கள் சுட்டிக்காட்டிய ுள்ள எனது பதிவு. இதில் சானல்4 வீடியோ பொய் என்று நான் எங்கே சொல்லியுள்ளேன்? ஆனால் இலங்கை அரசு சார்பாக மற்றும் நடுநிலையினர் போல் தோன்றுகின்ற சிலர் வலுவான கருத்துக்களை முன்வைத்துள்ளனர ். அந்த வாதங்களுக்கு தங்கள் பதில் என்ன என்பதுதான் என் கேள்வி. அதற்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு என்னை சாக்கடை வார்த்தைகளால் வைதிருந்தீர்கள் . இந்த இழிந்த நிலைப்பாட்டை தற்போதும் பெருமையோடு நினைவுகூர்கிறீர ்கள், சிறப்புதான். இப்பொழுது மீண்டும் கேட்கிறேன், இவ்வகையான (பொய் என்ற) வாதங்களை தகர்க்கும் விதமாக ஏதேனும் மறுமொழி வைத்திருக்கிறீர ்களா?
என்னைப்போன்று கேள்விகேட்ட மற்றொருவரை ஏசும்போது நீங்கள் உங்களை ஒரு இயற்பியல் அறிஞர் என்றும் இயற்பியல் மேல் கொள்ளை ஆசை கொண்டவர் என்றும் வர்ணித்துக்கொண் டதாக ஞாபகம். எனில் உங்கள் இயற்பியல் அறிவை, உங்கள் ஆராய்ச்சி நிலைய வசதிகளைப் பயன்படுத்தி மேற்கண்ட பொய் என்ற வாதங்களை கட்டுடைக்க வேண்டாமா? உண்மையைத் தேடிக்கொண்டிருப ்பவர்கள் தங்கள் போன்றவர்களிடம் (அறிஞர்களிடம்) அதைத்தானே எதிர்பார்க்கிறோ ம்! அதைவிடுத்து பார்ப்பனர் பட்டம் வழங்குதல் 'பேய்' சான்றிதழ் கொடுத்தல் வயிற்றெரிச்சலை வார்த்தைகளால் வடித்தல் போன்றவற்றால் யாருக்கு என்ன லாபம்? எப்படியாயினும், சென்ற விவாதத்தில் என் மொழியை சந்தேகித்தீர்கள ், தற்போது எனக்கு பார்ப்பன சாதி 'அந்தஸ்து' வழங்கியுள்ளீர்க ள், நன்றிகள் உரித்தாகுக!
'பார்ப்பனீயம்' சாடப்படவேண்டிய மட்டுமல்ல ஒழிக்கப்படவேண்ட ிய கருத்தியல் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தங்களைப் போன்றவர்களின் சிந்தனை வழியாகத்தான் பார்ப்பனீயம் வாழ்கிறது என்பது தான் எனது சந்தேகம். காதல் திருமணங்கள் சாதிஒழிப்பிற்கா ன வலுவான ஓர் ஆயுதம் என்பதை மேலும் வலியுறுத்தி எனது கருத்துக்களுக்க ுத் தங்களுடமிருந்து ஆக்கப்பூர்வமான பதில் ஒன்றினை எதிர்பார்க்கிறே ன், வரும் என்ற நம்பிக்கை மிகக் குறைவாக இருந்தபோதும்!
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கோட்பாடுடைய செந்தமிழருக்கு, அம்பேத்கர் ஒரு அன்னியரல்ல! நல்ல கருத்துடைய எல்லோரிடமும் பாடம் கற்போம்!
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்பு பாராட்டும் உலகு.
ஆக, நல்ல கருத்துடையோரை அவர் யாராயிருந்தாலும ் வாழ்த்துவோம்! ஆனால், இது பற்றிய உங்கள் கேள்வி, ஒரு விதண்டாவாதம் மட்டுமே!
பழந்தமிழர் பற்றிய உங்கள் திரிபுவாதம் இருக்கட்டும். சில விடயங்களைத் தெரிந்து கொண்டு பிறகு பேசுங்கள். தமிழகத்திலே ஐந்து திணைகள் இருந்தன. அதில் முதல் திணை தான் குறிஞ்சி எனும் மலை. ஆரம்பகால மனிதன் அங்கு தான் வாழந்தான். பிறகு, மக்கட் பெருக்கம் கண்டு, உணவுப் பற்றாக் குறையால் காடுகளுக்கு (முல்லைத்திணை) இறங்கி வந்தான். பிறகு அங்கும் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் ஆற்றங்கரையோரம் மருத நிலத்தைப் படைத்தான். பிறகு மற்ற திணைகளையும் அடைந்தான்.
இவர்களில் மலைவாழ் மக்களை நாம் ஆதித்தமிழர் (பழந்தமிழர்) என முடியும். பொதுவாக, எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், கறுத்த நிறத்தையுடையவன் தான் உண்மை (பழந்) தமிழன். எனவே, தாழ்த்தப்பட்ட சமூகத்தைத் தான் பழந்தமிழராக அழைக்க முடியும். உலகமே, ஆதியில் தமிழரே. பிறகு உலகெலாம் பிரிந்து சென்று, சென்ற இடங்களின் சூழலுக்கேற்ப நிறமடைந்தனர். பழங்கால வட இந்தியத் தமிழர்களின் நிறம் பழுப்பு. எனவே, உமது குதற்க வாதம் போல, இது வெருமனே வேற்றுமை காட்டவோ, தாழத்தவோ அழைக்கும் சொல் அல்ல.
ஊர் பேரில்லாத மனிதரே, சற்று ஞாணம் கொள்ளுங்கள்!
நாம் வெட்கப்பட வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. கல்வி நிலை. ஊழல். மனித நேயமின்மை. உயிர் நேயமின்மை. பொருளாதாரப் பாகுபாடுகள். தாய் மொழி வழிக் கல்வி நிலை, அறிவின்மை, தாழ்வு மனப்பான்மை, தீண்டாமை, மதப்பித்து என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தச் சிக்கல்களுக்கான காரணிகளை அறிந்து அவற்றைக்களைய திட்டமிட்ட, ஒருங்கினைக்கப் பட்ட போராட்டம் தான் தேவையே ஒழிய, வெற்று அரசியலுக்கான ஆலய நுழைவுப் போராட்டமல்ல.
எனது சமுதாய அக்கரை பற்றி நக்கலா? அறிவிலியே! ஒருவரைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு கருத்துரைக்க வேண்டும். வருங்காலம் சொல்லும், எனது சமூக அக்கரையின் நல் விளைவுகளை! சற்றே காத்திருங்கள்.
//
ஆனால் இலங்கை அரசு சார்பாக மற்றும் நடுநிலையினர் போல் தோன்றுகின்ற சிலர் வலுவான கருத்துக்களை முன்வைத்துள்ளனர ். அந்த வாதங்களுக்கு தங்கள் பதில் என்ன என்பதுதான் என் கேள்வி.
//
மேற்குறிப்பிட்டது போன்ற உமது பதிவுகளுக்கு பதில் சொல்லி மாளுமா? "நடுநிலையினர் போல் தோன்றுகின்ற சிலர்" என்று நீரே சொல்லி விட்டு எனது நேரத்தை ஏன் வீண்டிக்கிறீர்! நீரே அப்படிப் பட்டவர் தான்! நடுநிலை போன்று நடித்துக் கொண்டு நஞ்சைப் பரப்பும் சாதி!
அமெரிக்க திரைத் தொழில்நுட்ப அறிஞர்கள் பார்வையிட்டு அந்த வீடியோ உண்மையானது என்று, சான்றுகளோடு சொன்னது உமது காதிலேயே விழாதோ?
வீடியோவை மதிப்பீடு செய்யும் அறிவோ, தொழில் நுட்பமோ, நாணறியாதது. எனக்குத் தெரியாத துறையைப்பற்றிப் பீற்றிக் கொள்ளும் மனோபாவம் எனக்கில்லாதது. யாருக்கு எது செய்யத் தகுமோ அது செய்போம்.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு, ஒரு M.L.A. தனது மகள் ஒரு பழந்தமிழரைக் காதலித்ததால், தானே தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு தான். பெரியவர்களுக்கு வராத மனமுதிற்சி, இளங்காதலருக்கு மட்டும் வருவதென்பது, மனமுதிற்சியாலா அல்லது பருவக் கோளாறா? பெரியவர்கள் பழந்தமிழரை மதிக்கும் மனமுதிர்ச்சிதான ் வெற்றிபெரும் காதலைக் கொடுக்கும்.
இன்றய சமூகம் மிக மோசமானதாயுள்ளது . நல்லதைப் போதிக்க அட்களில்லை. எங்குமே பணத்தின் விளையாட்டு தான். ஏகாதிபத்திய தொலைக் காட்சிகளில் சிக்கி தமிழ் சமூகம், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று திசை தெரியாமல் ஓடிக் கொண்டுள்ளது. தமிழரின் உன்னத பண்பாடு அழிகிறது. பொய்மை கோலோச்சுகிறது.
பழிந்தமிழர் பிரச்சனைக்காக மட்டுமல்ல, அனைத்துப் பிரச்சினைகளுக்க ும் இந்தப் பாமரர்களை குந்தவைத்து, வகுப்பெடுக்க வேண்டிய அவசியமான தேவையுள்ளது.
நாள் தோறும் 20, 30 என்று "சிறுவர்கள், பெண்கள்" உட்பட இலங்கை வதைமுகாம்களில் மடிந்து கொண்டிருக்க, ஒரு உண்மையான கம்யூனிஸ இயக்கம், அதுவும் தமிழ் நாட்டில் இயங்கும் இயக்கம், முதன்மை கொடுத்துப் போராட வேண்டியது ஈழப் போராட்டமே! கோயில் நுழைவு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். 60 வருட காலமாக இவர்கள் செய்யத் தவறியதை இப்போது செய்துகொண்டு, இப்போது "செய்தே ஆகவேண்டிய" போராட்டத்தை முதன்மையாக எடுத்துப் போராடாமல் இருப்பது தான், இந்த C.P.M. ன் பம்மாத்து.
இதை தோலுரித்த எனது கருத்தைத்க் கண்டு அரண்டுதான் என்னைப் பம்மாத்துப் பேர்வழி என்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பெரும்பாலான இயக்கங்கள் நடத்திய, பெரும்பாலான போராட்டங்களில், வெயில் மழை என்று பாராமல் கலந்துகொண்டவர் நான் என்பது, பலவேறுபட்ட இயக்க தோழர்களுக்குத் தெரியும். வீட்டிலமர்ந்தபட ி கட்டுரைகளும், விமர்சனங்களும் மட்டும் எழுதும் காகிதப்புலி, கணணிப்புலி மட்டுமல்ல நான்.
//வீடியோவை மதிப்பீடு செய்யும் அறிவோ, தொழில் நுட்பமோ, நாணறியாதது. எனக்குத் தெரியாத துறையைப்பற்றிப் பீற்றிக் கொள்ளும் மனோபாவம் எனக்கில்லாதது.//
// யாருக்கு எது செய்யத் தகுமோ அது செய்போம்.//
இதைத்தான் நான் உங்களிடம் கூறுகிறேன், எதிர்பார்க்கிறே ன். உங்கள் துறை இயற்பியல். நானறிந்தவரை புகைப்படம் வீடியோ போன்ற தொழில்நுட்பங்கள ் இயற்பியல் துறை சார்ந்தவை. சானல்4 வீடியோவின் எடிட் செய்யப்படாத முழு வீடியோ என்று ஒன்று பல இணையதளங்களில் காணக்கிடைக்கிறத ு. அதைப் பதிவிறக்கம் செய்து உண்மை நிலையை அறிய உங்கள் போன்றவர்களால் (உங்கள் துறையில் இது சம்பந்தப்பட்ட நண்பர்கள் மூலமாகக்கூட) முடியும் என்பதால்தான் அவ்வாறு யோசனை கூறியிருந்தேன். அடுத்தவரை தாறுமாறாக ஏசுவதைவிட உங்கள் கருத்தியலுக்கு இப்படிப்பட்ட ஆணித்தரமான செயல்கள்மூலம் வலு ஏற்படுத்த முயற்சிக்கலாமே. ஆனால் அந்த வேலை சற்று கடினமானது, உண்மையை வெளிக்கொண்டு வந்துவிடும். எனவே உங்கள் போன்றவர்களுக்கு ஒத்துவராது என்று நினைக்கிறீர்களோ என்னவோ! அமெரிக்கத் திரைத்தொழில்நுட ்பத்துறையினர் சானல்4 விடியோ குறித்து கூறியிருப்பது எனக்குத் தெரியாது. அது வந்திருக்கும் இணையதள முகவரியையோ அல்லது எந்த ஊடகத்தில் வெளியிடப்பட்டிர ுக்கிறது என்ற விபரத்தையோ தந்தீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும்.
//இன்றய சமூகம் மிக மோசமானதாயுள்ளது . நல்லதைப் போதிக்க அட்களில்லை. எங்குமே பணத்தின் விளையாட்டு தான். ஏகாதிபத்திய தொலைக் காட்சிகளில் சிக்கி தமிழ் சமூகம், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று திசை தெரியாமல் ஓடிக் கொண்டுள்ளது.//
இந்த பிரச்சனையில் சிக்கித் தவிப்பது தமிழ் சமூகம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலக சமூகமுமே முதலாளித்துவ வலைப்பின்னலின் பல்வேறு பரிமாணங்களால் சீரழிக்கப்பட்டு க்கொண்டிருக்கிற து. நம்மைச் சுற்றி நடப்பதை மட்டும் பார்த்துக்கொண்ட ு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தான் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம், அவர்களை ஒழித்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று பரப்புவது பிரச்சனையின் ஆழத்தை அறிந்தவர் செய்யும் செயலா? ஒழிக்கப்படவேண்ட ிய எதிரி இருக்கும் திசையல்லாமல் மற்ற திசையில் வாளைச்சுழற்றுவத ால் என்ன பயன்? ஒருவேளை உங்கள் தனிப்பட்ட நோக்கங்கள் நிறைவேறுமாக இருக்கலாம், ஆனால் பாதிக்கப்படும் சாதாரணருக்கு அது எந்த பயனையும் தராது.
காதல் மணங்கள் 'infatuation' மட்டுமல்ல. அறிவு, மன முதிர்ச்சி வந்தவர்களிடையே ஏற்படும் காதல் பற்றித்தான் பேசவேண்டும், ஊக்குவிக்க வேண்டும். எந்த சமூக மாற்றத்தின்போது ம் அதனால் பாதிக்கப்பட்டவர ்கள் எதிர்வினையாற்றத ்தான் செய்வார்கள், நீங்கள் குறிப்பிட்ட எம் எல் ஏ போன்றவர்கள் அவர்களுக்குத்தெ ரிந்த வன்முறை மூலமாகவும், உங்கள் போன்றவர்கள் எழுத்து, திசை திருப்புதல் போன்ற சாமர்த்தியங்கள் மூலமாகவும்!
மீண்டும் சந்திப்போம். அமெரிக்க தொழில்நுட்பவியல ாளர்கள் சம்பந்தமான விபரம் தர மறந்துவிடாதீர்க ள்.
கருத்துக்கள் விவாதத்துக்குள் ளாகும்பொழுது மாற்றுக் கருத்துள்ளவர்கள ையும் (கருத்தை அல்ல) மதிக்க வேண்டும் என்ற நாகரீகத்தை கருத்து வேறுபாடுகளால் வேறுபடுவோர் அனைவரும் கடைபிடிக்கவேண்ட ிய ஒன்று என்ற கருத்தை கொண்டிருப்பவர்க ளில் நானும் ஒருவன்.
தங்களுடைய கட்டுரையில் மார்க்சிஸ்ட்கள் ஏதோ சமீபத்தில் ஆலய நுழைவுப் போராட்டத்தை துவக்கியிருப்பத ு போல் எழுதியுள்ளீர்கள ். மார்க்சிஸ்ட்டுக ளால் நடத்தப்படும் ஆலய நுழைவுப் போராட்டங்கள் வெகுஜனப்பத்திரி க்கைகளில் செய்தியாவதுதான் சமீபம். இங்கே ஆலய நுழைவு என்பது ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு குறியீடுதான். தமிழகத்தில் ஆலய நுழைவுப் போராட்ட வரலாறுகளை தாங்கள் அறிந்து கொள்வது அவசியம் எனக் கருதுகிறேன். மேலும் மார்க்சிஸ்ட்கள் ஆலய நுழைவினை மட்டும் நடத்தவில்லை. நூற்றுக்கணக்கான தீண்டாமை வடிவங்களையும் எதிர்த்து களத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தீண்டாமை ஒரு சில இடங்களில மட்டும் இருப்பதாக சொல்வது முழுப்பூசணிக்கா யை சோற்றுக்குள் அமுக்குவது போல் உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களிலேய ே தலித் ஒருவர் தான் தலித் என்ற அடையாளத்தோடு வாடகைக்கு வீடு பெற்றுவிட முடியுமா என்பதைத் தாங்கள் சிந்திந்துப் பார்ப்பது நல்லது. ஒடுக்குமுறைக்கு எதிராக தலித் இயக்கங்கள் மற்றும் மார்க்சிஸ்ட்களி ன் தீண்டாமைக்கு எதிரான இயக்கங்கள் ஆகியவையே தீண்டாமைக் கொடுமைகள் சற்று குறைந்து வருவதற்கு காரணமாக இருக்கிறது.
நெகிழ்வான முறையில் மனமாற்றம் செய்யவேண்டும் என்கிறீர்கள். புரியாதவர்களுக் கு புரியவைப்பதில் மார்க்சிஸ்ட்களு க்கு சிரமமில்லை. ஆனால் தாங்கள் அடக்கியாளப் பிறந்தவர்கள் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்களிடம் ‘மயிலே மயிலே இறகு போடு’ கதையெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று.
ஈழத்தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிரு ப்பதை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட்டுக ளுக்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் வசிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென இயக்கம் நடத்திக்கொண்டிர ுப்பவர்கள் மார்க்சிஸ்ட்டுக ள். அதே நேரத்தில் நம் வீட்டிற்கு அருகில் தெருவிற்கு அருகில் கிராமத்திற்கு அருகில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்களை அடக்கிவைக்கும் பொழுது ஈழத்தமிழர் பிரச்சனை தீரும் வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனையி ல் கேரள அரசு செய்வது சரிதான் என்று தமிழக மார்க்சிஸ்ட்டுக ள் எப்பொழுதுமே சொன்னதில்லை. நதிநீர்ப் பிரச்சனை உட்பட மாநிலங்களுக்கு இடையேயான எந்தப் பிரச்சனையானாலும ் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்கசிஸ் ட்)யின் நிலைபாடு.
குற்றம் கூற வேண்டும் என்பதற்காக எதையாவது கூற வேண்டாம். ஒரு இயக்கத்தையோ அல்லது தனிநபரையோ விமர்சிக்கும் பொழுது அவற்றைப்பற்றி அல்லது அவர்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு விமர்சிப்பதுதான ் விமர்சனத்துக்கு அழகு.
தலித் மக்களுக்கு காந்தி "ஹரிஜன்" என்று பெயர் சூட்டியதன் உள்நோக்கம் என்னவோ, அதே உள்நோக்கம்தான் தலித் மக்களுக்கு"பழந் தமிழர்" என்று பாண்டியன் பெயர்சூட்டி இருப்பதற்கும். உமக்கு ரொம்ப கெட்டிக்காரத்தன ம்னு நினைப்பு...? இது ஒன்றுபோதுமே, இதிலேயே உமது பித்தலாட்ட அரசியல் பல்லிளிக்கிறதே!
நான், இதற்கு முன்பு, உமக்கு வைத்துள்ள ஆப்புக்களை, தற்போது நீவிர் எழுதியுள்ள கட்டுரைக்கு சம்பந்தமில்லாதத ு என்று தப்பிக்கிறீர் பாண்டியன்... சபாஷ்! கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பியோடுவது எப்படி என்பதில் வெவரமான ஆள்தான் நீர்.
தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்று நான் பட்டிலிட்டவை, 1947-க்கு முன்பு நடந்தவை அல்ல... அறிவாசான் அம்பேத்கரின் நூற்றாண்டையொட்ட ி 1990களில் தலித் இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்த காலத்தில் நிகழ்ந்தவை. கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்தவை. இன்னும் வெளியுலகுக் தெரியாமல் நடந்து கொண்டிப்பவை.
சக்கிலியப்பய என் முன்னாடி சைக்கிளில் வருவதா? என்று மதுரை அருகே வடிவேல்கரையில், சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாண்டவம், போன மாதம் நடந்ததுதான். பார்ப்பன பாண்டியன் என்ன சொல்கிறார்.... //குறிப்பிடத்தக ுந்த அளவு மனமாற்றம் ஆதிக்க சாதி மக்களிடையேயும் நிகழந்துள்ளது// . இது எப்படி இருக்கு....? இதைவிட கயவாளித்தனத்தை எங்கே கண்டுபிடிக்க முடியும்...?
அது மட்டுமல்ல, //அதிரடிப் போராட்டங்கள் மக்களைப் பிளவுபடுத்த மட்டுமே உதவும்// என்று இந்த "செண்பகப்" பாண்டியன் சொல்கிறார். இந்த ஞானசூனியத்தை என்னவென்பது...? ஏற்கெனவே, சாதியால் இந்த சமூகம் பிளவுபட்டுத்தான ே கிடக்கிறது. அதை புதிதாக பிளவுபடுத்த என்ன இருக்கிறது...? இதுகூடவா, "இயற்பியல் அறிஞர்" பாண்... டியனுக்கு தெரியாது...?
சரி, பாண்டியன் சொல்வதையெல்லாம் மீறி, அதை யாரும் மதிக்கவில்லை என்றால்... சாதிக்கு எதிரான, தீண்டாமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்தால், அதனால் செட்டிப்புலத்தை ப் போல, சாதிவெறிக் கூட்டம் ஊரையே காலிசெய்துவிட்ட ு ஒட வேண்டிய நிலை ஏற்பட்டால்.... அதுதான் அங்கு ஏற்பட்டு விட்டதே.. உடனே பாண்டியன் அடுத்த ஆயுதத்தை எடுக்கிறார்..
அது என்ன ஆயுதம்.... மிரட்டல் ஆயுதம் //ஆதிக்க சாதிமக்கள் பழந்தமிழரைவிட மிகையாக உள்ளதால் இது போன்ற அதிரடிப் போராட்டங்கள் எதிர்விளைவுகளைத ் தான் உருவாக்கும்// பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதா....? இதுதான் பாண்டியனின் சுயஉருவம். சாதிவெறியை இவ்வளவு நாசூக்காக வேறுயாராலும் தூண்டிவிட முடியாது. சாதிவெறியர்களைத ் தவிர!
ஆனால், இந்தப் பேர்வழிதான், கீற்று இணைய தளத்தைப் பயன்படுத்திக் கொண்டு, "நான் ஒரு பகுத்தறிவாளன்.. . நான் ஒரு பகுத்தறிவாளன்" என்று வடிவேல் பாணியில் கூப்பாடு போடுகிறார். டாக்டர், என்ஜினியர் என்று எந்த முன்னொட்டையும் டா.பா. போட்டுக்கொள்ளட் டும். தயவுசெய்து பகுத்தறிவாளன் என்று மட்டும் சொல்லிக் கொள்ள வேண்டாம். வடிவேல் பாணியிலேயே "அதுக்கு" பாண்டியன் சரிப்பட்டு வரமாட்டார்....
டா.பா.வே, ஏதோ நான் நிறைய எழுதினால், நம்மைப் புரிந்து கொள்வார்கள் என்று தத்துவம் பேசுகிறீர் அல்லவா... ஆனால், நான் நிறைய எழுதினால், டா.பா.தான் நிறையவே அம்பலப்பட வேண்டியதிருக்கு ம்..!
உலகக் கண்ணையே கட்டிவிட்டு போர்செய்தது இல்லாமல், போர் முடிந்து ஆறு மாதங்களாகியும் இன்னும் உலக ஊடகங்களை உள்ளே நுழைய விடாமல், கேட்க நாதியற்ற சிறுபான்மை சமூகத்தை வதைமுகாம்களில் வதைத்துக் கொண்டு, தான் ஒரு பௌத்தன் என்று கூறிக்கொண்டு, தமிழரின் அடையாளங்களை அழிக்க தமிழர் பகுதிகளில் புத்த சிலையை பிரதிஷ்டை செய்துகொண்டு, திருப்பதியிலும் , கும்பகோணத்திலும ், குருவாயூரிலும் வெட்கமில்லாமல் வந்து நேர்த்திக் கடன் செய்துகொண்டு, பம்மாத்து செய்யும் "கயவர்கள்" உண்மையைச் சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள் .
வதைபடும் சிறபான்மை சமூகம் இப்படிப்பட்ட சூழலில் பொய் சொன்னாலும் நம்பித்தானாக வேண்டும். அது தான் எனது நிலைப்பாடு! அது தான் நேர்மையுள்ள ஒவ்வொருவரின் நிலைப்பாடாக இருக்க முடியும். அதோடு, வீடியோவை அதற்குரிய நபர்கள் ஆய்ந்து விட்டனர். அது மக்கள் தொலைக்காட்சியில ் விரிவாகக் காண்பிக்கப் பட்டது. பார்ப்பனத் தொலைக்காட்சிகளி ல் இவை காண்பிக்கப்படாத தால் உமக்குத் தெரியவில்லை போலும். மற்றும் இதை
www.tamilnet.com இதை வௌியிட்டுள்ளது. சென்று பார்க்கலாம்!
உலகமே மோசமாகத்தான் சென்று கொண்டுள்ளது. அதைத் தடுக்க "தாய் சமூகமாகிய" தமிழ் சமூகத்தால் முடியும். எனவே தான் தமிழருக்கான இறையாண்மையைக் கோருகிறோம். இதற்குத் தடையாக இருப்பது பார்ப்பன சமூகம் தான். சொந்த பேசும் மொழியும், தனக்கான சொந்த நிலமும் இல்லாத வந்தேறி சிறுபான்மை சமூகம், தனது வௌ்ளை நிறத்தாலும், உடன்பிறந்த சூழ்ச்சியாலும், தன்னுடைய பயனுக்காக, இப்பெரும் மன்னிலுள்ள பல தேசங்களை சிறைவைத்துள்ளது . எனவே, எமக்கு அருகாமையிலுள்ள எதிரி பார்ப்பனன் தான். இன்று கீற்றுவில் வௌியிடப் பட்டுள்ள நவம்பர், 2009 தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட்டத்தில் "ஆரியர்கள் மக்கள் பகைவர்களாக இருப்பது ஏன்?" என்ற கட்டுரை எனது எழுத்து வேலையை எளிமைப் படுத்தியுள்ளது.
இந்து ராம்களும், ராமசாமிகளும், சு. சாமிகளும், ஜெயலலிதாக்களும் , தினமலர்களும் தமிழனுக்கு, அவன் உப்பைத் தின்றுகொண்டே செய்யும் துரோகம் அசாதாரணமானது. நான் தீட்டு. எனது உன்னத மொழியும் தீட்டு. ஆனால், நான் உழைத்துப் போடும் உணவு இவனுக்கு ருசியான புஷ்டி! வெட்கமில்லை! தன்னை சொகுசாக வாழவைத்த சமூதாயத்தை தொடர்ந்து சீரழித்த சமூகம் தான் உம்முடையது. என்று நீவிர் இந்த அழகிய வள்ளுவ மன்னிலே காலடி வைத்தீர்களோ, அன்று பிடித்தது தருத்திரம்!
உம்மிடம் நேர்மை இருந்திருந்தால் இப்படியெல்லாம் நான் எழுதத் தேவை இருந்திருக்காது !
ஈழத்தை அழித்தது உமது அயோக்கிய பார்ப்பன சமூகம் தான். உமது எழுத்தும் அதைப் பிரதிபலிக்கிறது . இறையாண்மையற்ற வெறும் 40 லட்ச மக்களின் பிரதிநிதியான பிரபாகரன், தனது பொய்ப்பிரச்சாரத ்தால் உலகையே ஏமாற்றுகிறானாம் . தனக்கான தேசமுள்ள ஒன்றரை கோடி சிங்களன், இந்திய பார்ப்பனீயத்தின ் ஆதரவோடும், சீனா உட்பட கம்யூனிச தேசங்களின் ஆதரவோடும், பல இஸ்லாமிய நாடுகளின் ஆதரவோடும், ஏகாதிபத்திய மேற்குலகின் ஆதரவோடும் செய்யும் பிரச்சாரம் எடுபடவில்லை என்று சொல்லும் நீர் எப்பேர்பட்ட கயவன்? அது உண்மையானால், பிரபாகரன் எப்படி தோற்கடிக்கப்பட் டார்?
கட்டுரையில் தான் தலித்துகளுக்கு எதிராக இப்படி கப்பித்தனதனமாக பாண்டியன் எழுதுகிறார் என நினைத்தால் பின்னூட்டம் என்ற பெயரில் அதே பல்லவியை மீண்டும் பாடுகிறார்.
வன்முறை என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்கசாதியினர் ஏவிவிடுவதும், இந்தியாவில் அதிகரித்து வருகிறது. தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என எழுதிவைக்கப்பட் டிருந்தாலும் தீண்டாமையின் வடிவங்கள் பல உள்ளன என்பதை பல புள்ளிவிபரங்களை ச் சுட்டி சொல்லமுடியும். ஆனால், அந்த அளவிற்கு பாண்டியன் ஒன்றும் பெரியபுள்ளி இல்லை.
அவர் ஒரு குழப்பவாதி என்பதற்கு அவரின் எழுத்தே சான்றாக உள்ளதைப் பாருங்கள்.
//கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பெரும்பாலான இயக்கங்கள் நடத்திய, பெரும்பாலான போராட்டங்களில், வெயில் மழை என்று பாராமல் கலந்துகொண்டவர் நான் என்பது, பலவேறுபட்ட இயக்க தோழர்களுக்குத் தெரியும்.//
தமிழகத்தில் தலித் மக்களுக்கு ஆதரவாக சிபிஎம் கோவில் நுழைவுப்போராட்ட ம் நடத்துவது குயுக்தி எனக்கதைத்துவிட் டு, வெயில் மழை பாராமல் பல இயக்கங்களில் கலந்து கொண்டவன் என மார்தட்டுவது பொய்யைத்தவிர வேறு எதுவாக இருக்கும். பழந்தமிழர் என தலித் அமைப்புகளைத் தங்களைச் சொல்லிக் கொள்ளாத போது பார்ப்பன பாண்டியனோ, புதிய பெயர்சூட்டி காந்தி போல மகிழ்கிறார். அழுத்தப்படும் மக்களுக்கு என்ன பெயர் சொன்னாலும் அவர்களின் விடுதலை என்பது போராட்டத்தினால் தான் தீர்வு காணமுடியும். சிபிஎம் மீது உள்ள காழ்ப்புணர்வு காரணமாக தலித்துகளுக்கு எதிரான கருத்தை பாண்டியன் பரப்பும் வேலையை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
உங்களின் தரமான மடலுக்கு நன்றிகள். மாற்றுக் கருத்து என்ற பெயரால், திட்டமிட்ட பொய்களை எழுதுபவரை எப்படி எதிர்கொள்வது? கருத்தின் மாறுபாடு என்பது புரிதலின் அடிப்படையில் இருந்தால், அதை விவாதம் செய்யலாம். பச்சையான அக்கிரமம் எழுதினால்? நிற்க.
தீண்டாமையின் கொடுமைகள் களையப்பட்டது கம்யூனிஸ்டு இயக்கங்களைவிட, இதற்காகவே தனது வாழ்வை அற்பனித்துக் கொண்ட பெரியாரால் தான் என்பதை, ஏன் நீங்கள் எழுதவில்லை?
தென்தமிழகத்திலே தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வது எனக்குத் தெரியும். ஆனால், இந்த சிக்கலை அனுகும் முறையில் மாற்றம் வேண்டும். எனக்கே, கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் , நிறைய புத்தகங்களைப் படித்துத் தான் தமிழரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆட்டுவித்தவர் யாரோ, ஆடிக்கொண்டிருப் பவர்கள் தான் இவர்கள். இவர்கள் தங்களைப்பற்றியே அறியாதவர்கள். எனவே தான் இதுபற்றிய கல்வி வகுப்புகள், பெரும் மாற்றங்களைக் கொடுக்கும் என்று உணர்ந்தே சொல்கிறேன்.
ஆனால், இந்திய அரசியலின் அடிப்படையே, அத்தகைய பொறுப்பான அனுகுமுறைகள் கட்சியை வளர்க்கப் பயன்படாது என்பதை நிருவி நிற்கிறது. உணர்வுகளைத் தூண்டி கட்சியை வளர்ப்பது தான் இங்கு நாம் கண்கூடாக காணும் எதார்த்தம். இதை உங்களால் மறுக்க இயலுமா?
தேசிய விடுதலைக்காகவோ, மாற்றானை எதிர்கொள்ளவோ உணர்வுகளைத் தூண்டி குறுகிய காலத்தில் மாற்றங்களைக் கொணர முயலலாம். ஆனால், "ஒரே சமூகத்தின்" இது போன்ற சிக்கல்களை உணர்வுகளின் மூலமாக அனுகினால் நாம் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்காது.
ஈழப்பிரச்சினை தீரும்வரை உங்களைக் காத்திருக்க சொல்லவில்லை. அவர்கள் வதைமுகாம்களிலிர ுந்து விடுபடும் வரை "காத்திருக்காமல ்" போராடலாமே! நானும் செய்தேன் என்று அட்டன்டன்ஸ் போட்டுவிட்டு, இப்படி குதற்க போராட்டங்கள் எதற்கு?
தமிழீழம் தான் ஈழச்சிக்கலுக்கு த் தீர்வென்று நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா? உங்கள் கட்சி ஒன்றுபட்ட இலங்கைதான் தீர்வென்கின்றது ? அதை நீங்கள் ஏற்கிறீர்களா?
நான் தமிழ்த்தேசம் வேண்டும் என்கிறேன். உங்கள் கட்சி அதை ஆதரிக்குமா?
இந்தியா ஒரு கூட்டாட்சி முறைக்காவது மாறவேண்டும் என்கிறேன். அதையாவது உங்கள் கட்சி ஏற்குமா? போராடுமா? 544 பேர் கொண்ட சபையில் 40 தமிழ் பிரதிநிதிகள் தங்களது இன உரிமைகளைக் காக்க இயலாதென்ற புரிதலாவது உங்களிடம் உள்ளதா?
கூட்டாட்சி முறை இருந்திருந்தால் கட்சத்தீவு சிங்களனுக்கு போயிருக்காது. சிங்களனும் நம்மீனவர்களைக் கொல்ல முடியாது!
உங்கள் கட்சியைப்பற்றி தெரியாமல் நான் எழுதிவிடவில்லை! !!!!!!
நான் அம்பலப்படவே விரும்புகிறேன். நீங்கள் நிறையவே என்னைப்பற்றி எழுதலாம். நான் எனது சொந்த அடையாளங்களில் தான் எழுதுகிறேன். அம்பலப்படுவதின் பாதிப்பு எனக்குத்தான், உங்களுக்கல்ல. எனவே, நிறையவே எழுதுங்கள்.
பெரியாரிஸ்ட்-அம்பேத்கரிஸ்ட் எல்லாம் சரிதான். ஆனால், அவை வெற்று வாய்ச்சவடாலாக இல்லாமல், உண்மையில் பின்பற்றுவராக இருக்கவேண்டும்.
உமது பின்னூட்டங்களில ுள்ள வாதங்களின் லட்சணம் உமது பெரியாரிஸ்ட் யோக்கியதையை நன்றாக விளக்கி நிற்கிறது. உமது குதற்கமான பல கேள்விகளுக்கும் , நான் மற்றவர்களுக்கு கொடுத்த பதில்களிலேயே விடை இருக்கிறது.
ஹரிஜன் பற்றி மட்டும் இங்கு கருத்துவைத்து விடைபெருகிறேன். ஹரி என்பவன் வர்ணாசிரமக் கோட்பாட்டை உருவாக்கிய கிருஷ்ணன் தான். அவனது பெயராலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தை காந்தி அழைத்தது தான் உச்சகட்ட வக்கிரம்.
பழந்தமிழர் என்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தைத் தான் உண்மையான தமிழனாக இனங்காணும் அடிப்படை. இது ஒரு தமிழ்ச்சொல். இது ஒரு இனியசொல். தலித் என்பது அப்படிப்பட்ட சொல் அல்ல! நான் வைத்தது ஒரு மறியாதையான மாற்று!
அதோடு, தமிழ் என்பவருக்கான பின்னூட்டத்திற் கு,
//
நானே, கடந்த ஆறு வருடங்களாகத் தான், தமிழரின் உண்மையான வரலாற்றை அறிந்துள்ளேன். வள்ளுவமே, பழிந்தமிழரின் நூல்தான் என்பதையும், வள்ளுவக் கணியர்கள் அறிவார்ந்த சமூகம் என்பதையும், தெற்கு அறிவு திசை என்பதையும், தெற்கே இருப்பவன் கறுத்த தோலுடையவன் என்பதையும், இந்த அறிவார்ந்த, கறுத்த, பழந்தமிழரைத் தான் இங்கு வந்தேறியப் பார்ப்பனீயம், கடும் பொறாமை கொண்டு ஒடுக்கி, தீண்டத் தகாதவராக ஆக்கி பழிதீர்த்துக் கொண்டது என்றும், நான் தெரிந்து கொண்ட செய்திகள் ஏராளம்! (வரலாற்றாய்வாளர ் குணா போன்றோரின் நூல்கள்).
//
இவ்வாறு எழுதிய பிறகும் நான் பழந்தமிழர் என்ற சொல்லால் இழிவுபடுத்துகிற ேன் என்று நீர் சொல்வது, எப்பேர்பட்ட கயவாளித்தனம் என்பது வாசகர்களுக்குப் புரியும்.
தமிழ்த்தேசம் பற்றிய கருத்தியலால், சில வந்தேறிய சமூகங்கள் தேவையற்ற அச்சம் கொண்டுள்ளன. எனவே, அத்தகையோரின் இணைய தளங்கள், திட்டமிட்டே தமிழருக்குள் பிளவை ஏற்படுத்தி, தமிழத்தேசக் கருத்தியலை முறியடிக்க முயல்கின்றன. அவர்களின் ஏஜென்ட் தான் நீரென்பது எனக்கு முன்பே தெரியும். அந்த அடிப்படையில் தான் தமிழ்த்தேசம் கோரும் என்னை பழந்தமிழரின் எதிரியாகக் காட்டமுயல்வது. இது பற்றி தனியாகப் பிறகு எழுதவேண்டும் என்றுள்ளேன்.
எனது உண்மைத்தன்மை எனது செயல்பாடுகளால் தெரியும். தமிழ்ச்சமூகம் எல்லோரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தான் நானும் சொல்வேன். கண்மூடித்தனமாக யாரையும் தமிழ் சமூகம் நம்பக்கூடாது.
தேரான் தௌிவும் தௌிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
என்பது வள்ளுவன் வாக்கு!
ஆனால், முருக சிவகுமாரின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியை சாக்காக வைத்துக் கொண்டு, வன்னியர் மக்களின் தரப்பாக நின்று பாண்டியன் படம் காட்டுகிறார்... இதற்காக ஈழம், பெரியாறு என்று எங்கெங்கோ பயணிக்கிறார்... இதுதான் உண்மை!
நான் சொல்வது உண்மையில்லை என்றால், முருக சிவகுமார் எழுப்பியுள்ள கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பாண்டியன் நேரடியாக பதிலளிக்கலாம்.
குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் போன்றோர் தலித்துக்களாக இருந்தும் கூட, இவர்களின் அதிகாரத்திற்கு கீற்பட்டதாக மாவட்ட நிர்வாகம்-காவல் துறை இருந்தும் கூட, ஒரு கிராமத்தில் தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முடியாத நிலை இருக்குமென்றால் - ஆதிக்க சாதிவெறியர்கள் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது கலவரத்தை நிகழ்த்துவார்கள ் என்றால்- ஆதிக்க சாதியினரே மாவட்ட நிர்வாகத்தை நடத்தும் இடங்களில் தலித் மக்களின் நிலை என்னவாய் இருக்கும்? என்று முருக சிவகுமார் கேள்வி எழுப்புகிறார்.. .
இதற்கு பாண்டியன் சொல்லும் பதிலென்ன? தனித்தனியாக வகுப்பு எடுப்பதுதானா?
வகுப்பு எடுப்பதில் பாண்டியன் உறுதியாக இருந்தால், அவர் உடனடியாக செட்டிப்புலத்தி ற்கு சென்று வன்னியர் மக்களுக்கு வகுப்பு எடுத்து, முன்னுதாரணம் படைக்கலாம்... யாரும் அவருக்கு தடையாக இல்லை! ரெடியா பாண்டியன்...?
பிறகு சொல்லமாட்டாரா?
*********
*********
அவரது பின்னூட்டத்தை என்னவோ, வீராப்பாக ஆரம்பிக்கிறாரே என்று பார்த்தால், அதில் நான் கடந்த பின்னூட்டத்தில் முன்வைத்துள்ள எந்த கருத்தையும் மறுக்கக் காணோம். பாண்டியனாகிய நான் சாதிவெறியன்தான் ... சமூகம் ஏற்கெனவே சாதியால் பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதை அறியாத ******தான்... ஆதிக்க சாதிமக்கள் மத்தியில் குறிப்பிடத்தகுந ்த அளவு மாற்றம் எற்பட்டுள்ளது என்று நான் கூறியிருப்பது கயவாளித்தனம்தான ்.... என்றெல்லாம் பாண்டியன் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் போலிருக்கிறது.. .
போனால் போகட்டுமென்று, "பழந்தமிழர்" என்பதற்கு மட்டும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதற்கு முன்னதாக காந்தியின் "ஹரிஜன்" என்பதையும் விளக்கியுள்ளார் . அதையும் அரைகுறையாக...
ஹரிதான் கடவுள். அந்தக் கடவுளின் குழந்தைகள்தான் சேரிமக்கள். எனவே, அவர்களை எல்லோரும் "ஹரிஜன்" என்று அழையுங்கள்... கடவுளின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணி 'பீ' அள்ளுவது; வர்ணதர்மம் ஒதுக்கிய மேன்மையான பணி அது! எனவே, அவர்களுக்கு ஒரு பீச்சட்டியையும் கொடுங்கள்... என்பதுதான் காந்தியின் பெயர்சூட்டு வைபவ உள்ளடக்கம்!
இப்போது பார்ப்பன பாண்டியன் என்ன சொல்கிறார்....
தலித் மக்களுக்கு "பழந்தமிழர்" என்ற பட்டத்தை நான் தந்துவிட்டேன்.. . எனவே, அவர்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சிக்கக் கூடாது.... தெருவில் செருப்புப் போட்டு நடக்க ஆசைப்படக் கூடாது... செத்த மாட்டை உரித்து தப்பு செய்து (பறை) அடிக்கும் (இசைக்கும்) தொழிலை, சாதிவெறியர்கள் சொல்லும் வரை செய்தே ஆகவேண்டும்... முடியை வெட்டிவிட்டால் வெட்டிக் கொள்ளவேண்டும்; இல்லையேல் சடைபோட்டு பூ வைக்க பழகிக்கொள்ள வேண்டும்... எதிர்த்தெல்லாம் பேசக் கூடாது... போராட்டமெல்லாம் நடத்தக் கூடாது.... நடத்தினால் அது தமிழர்களைப் பிளவுபடுத்தி விடும்... அதுமட்டுமல்ல, "பழந்தமிழர்களை" விட " என்னைப் போன்ற புதிய தமிழர்கள்" எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் சேதாரம் என்னவோ, பழந்தமிழர்களாகி ய உங்களுக்குத்தான ் ஏற்படும்.... எனவே, நாங்கள் "வகுப்பு எடுத்து" புரட்சி செய்யும் வரை "பழந்தமிழர்" பட்டத்தோடு வாயில் விரலைச் சூப்ப பழகிக் கொள்ளுங்கள்... ஆனால், நீங்கள்தான் "பழந்தமிழர்கள்"
- எப்படி இருக்கு பாண்டியனின் கீதாவுபதேசம்... !
இந்த லட்சணத்தில்தான் பாண்டியன் எனது பகுத்தறிவை கேள்வி எழுப்புகிறார்.. . உமக்குத்தான் கடந்த பின்னூட்டத்திலே யே செமக்க கொடுத்தேனே... அதன்பிறகும் பகுத்தறிவு பற்றி பேசலாமா?
எனது பின்னூட்டங்களில ் லட்சணம் பற்றி... நயத்தக்க நாகரிகர்கள் விமர்சிக்கட்டும ். நிச்சயமாக பாண்டியனுக்கு அந்த தகுதியில்லை... ஈழத் தமிழர்கள் சிக்கலைக் சாக்காக வைத்துக் கொண்டு, இதே பாண்டியன், மற்றவர்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசுவாராம்... திட்டுவாராம்... . கேட்டால், எனது சொந்தம் அடிவாங்கும் போது, நான் நாகரிமாகவெல்லாம ் பதில் சொல்ல மாட்டேன்.... என்று இவரே சொல்வாராம்.... ஆனால், இவருக்கு யாராவது ஆப்பு வைத்தால், உடனே "நாகரிகம்" பற்றிய நினைப்பு வந்து விடுமாம்....
இப்போது நான் சொல்கிறேன்... எனது தலித் சொந்தம் அடிவாங்கி, மிதிவாங்கி... மனிதனாகக் கூட மதிக்கப்படாமல் காலம் காலமாக செத்துப் பிழைக்குமாம்... ஆனால், பாண்டியன் வந்து நிதானமாக வகுப்பு எடுக்கச் சொல்வாராம்... நாம் நாகரிமாக பதில் சொல்ல வேண்டுமாம்.... இது எப்படி இருக்கு?
பாண்டியா... உம்மை தொடர்ந்து அம்பலப்படுத்துவ ேன்..! நான் என்ன அம்பலப்படுத்த, உமது வார்த்தைகளின் மூலமாவே நீவிர் அம்பலப்படுவதை தமிழுலகம் நன்றாகவே பார்த்துக் கொண்டு இருக்கிறது.
உங்களின் முந்தய பின்னூட்டத்தைவி ட இது நிதானமாக எழுதப்பட்டுள்ளத ு. நீங்கள் மிகச் சரியாகவே எழுதியுள்ளீர்கள ். முருக சிவக்குமாரின் கட்டுரைக்கப்புர ம் தான் இதை நான் எழுதினேன். உண்மையாகவே, இதற்கு முன்பே எழுத நினைத்தேன். வேலைப்பளுவால் தடைபட்டுக் கொண்டிருந்தது. முருக சிவக்குமார் சிறப்பாகவே அந்தக் கட்டுரையை வடித்துள்ளார். அங்கு தான் பின்னூட்டமிட இருந்தேன். எழுத வேண்டிய செய்திகளின் நீளம் கருதி கட்டுரையாக வடிக்க நினைத்துத் தான் எழுதினேன்.
முருக சிவக்குமார் எழுதியது அத்தனையும் உண்மையே. அதில் எனக்கு முழுஉடன்பாடு தான். என்னுடைய கட்டரையின் முழு வீச்சுமே, C.P.M. பற்றிய எனது மதிப்பீட்டின் அடிப்படையில் தான். இந்தக் கட்சி Forward Block கட்சியுடன் வைத்திருந்த அரசியல் கூட்டுக்காக, பல அரசியல் கொலைகளை, கொல்ல்ப்பட்ட பழந்தமிழர்களுக் கு நீதி கிடைக்காவண்ணம், அரசியலாக்காமல் இருந்த கட்சி என்று, பல கம்யூனிஸ்டு கட்சி தோழர்கள் எனக்கு சொல்லியுள்ளனர்.
எனது கட்டுரையை சுகுணா திவாகரும் தனது கட்டுரையில் என்னை விமர்சித்துள்ளா ர். அவரது கட்டுரைக்கு ஒரு பின்னூட்டமிட்டு ள்ளேன். அதையும் படிக்கவும். இந்த சிக்கல் பற்றியும், தௌிவான ஒரு கட்டுரை, சுகுணா திவாகருக்காக எழுத உள்ளேன்.
60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று அனைத்து சாதிகளிலும் உள்ள கணிசமான மக்களும் கல்வி கற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு நமது வரலாறு முறையாக போதிக்கப் படவில்லை. இது திட்டமிட்டே நடக்கிறது. எனவே தான், தொண்டியக்கங்கள் அதைச் செய்ய வேண்டியுள்ளது. இதை எப்படிச் செய்யலாம் என்று நாங்கள் விவாதித்தும் வருகிறோம்.
என்னுடைய சிறப்பானப் பணி, அறிவியலை (இயற்பியல் எனது துறை) "தமிழல்" காட்சி ஊடகங்களின் வழியாக, "அனைத்து அடித்தட்டு" மக்களுக்கும் எடுத்துச் சொன்று, மொத்த சமூகத்தையுமே அறிவியல் படுத்தி, அவர்களது கொருளாதார வாழ்வை மேப்படுத்துவது என்று முடிவு செய்து, அந்தத் திட்டத்தை நோக்கி, பயனிக்கத் தொடங்கியுள்ளேன் . இது முறையாக நடந்தால் அது இயல்பான சமூக மாற்றங்களைக் கொணரும் என்று எனது பகுதியில் நடக்கும் மாற்றத்தின் அடிப்படையில் உணர்ந்தவர் தான் நான்.
நான் எந்த ஒரு சிக்கலையும் அதன் முழுப்பரிமானத்த ில் அனுக வேண்டும் என்ற அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர். அதன் அடிப்படையில் மட்டுமே, வேறெந்த கீழ்த்தரமான உள்நோக்கம் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரைதான் இது.
வர்க்கப்போராட்ட த்தோடு, சாதியப்போராட்டத ்தையும் இணைந்து நடத்தும் தைரியமற்ற நிலையில் பல தலித் அமைப்புகள் உள்ளன. ஆனால், எந்த சமரசமற்று மார்க்சிஸ்ட் கட்சி தலித் மக்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறது. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் கோவிலுக்குள் நுழைய அவர்களுக்கு உரிமையில்லை என்றால், அண்ணல் அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த அரசியல் சட்டம் மீறப்படுகிறது என்று தான் அர்த்தம். எல்லோருக்கும் பொதுவானதாக பூமியிருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்டுக ள் நினைப்பது உங்களுக்கு தவறாக தெரிகிறது. நிலப்பிரபுத்துவ ஆண்டைகளின் குணம் இது.
சட்டகத்திற்குள் பூட்டப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு இந்து என்ற அர்த்தம் கற்பிக்கப்பட்ட நிலையில், அவர்களை இந்துக்கோவிலுக் குள் நுழைய விடாமல் தடுப்பது இடைநிலை சாதியனரின் பார்ப்பனிய மனோபாவம் தான். கேரளாவில் வைக்கம் போராட்டத்தை நடத்திய தந்தை பெரியார் வைக்கம் வீரர் எனப்புகழப்படுகி றார். தாழ்த்தப்பட்ட மக்களை ஒரு தெருவுக்குள் விடாமல் தடுத்து வைப்பதும், கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்துவதும் ஒன்று தான்.
தந்தை பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்தக்கூடிய கருணாநிதியின் ஆட்சியில் கோவில் நுழைவுப்போராட்ட ம் நடத்தச் சென்ற தலித் மக்கள் கைது செய்யப்பட்டனர். தங்களுக்குரிய நிலத்தை ஆக்கிரமித்துள்ள நீதிபதி தினகரனிடம் இருந்து நிலத்தை மீட்கச் சென்ற தலித் மக்கள் கைது செய்யப்பட்டனர். தலித்துகளின் சம்பந்தி எனச்சொல்லக்கூடி ய கருணாநிதியின் ஆட்சியில் தலித் மக்கள் மீதான தாக்குதல் குறைந்தபாடில்லை . உலகத்தமிழர்களுக ்காக குரல் கொடுக்கும் பாண்டியன், உள்ளூர் தமிழனுக்கும் குரல் கொடுக்க வேண்டும். பலர் நடத்திய போராட்டத்தில் மழை, வெயில் பாராது கலந்து கொண்டுள்ளதாக முனைவர் பகர்ந்துள்ளார். பலர் என்றால் செட்டிக்குளத்தி ல் தலித் மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்ற போது கல்எறிந்து கலகம் செய்து ஆர்ப்பாட்டத்தில ் ஈடுபட்டார்களே சாதிவெறியர்கள். அவர்களின் போராட்டத்திலா? காவேரிராஜபுரத்த ில் தலித் மக்களுடைய நிலங்களை தலித் நீதிபதியே ஆக்கிரமித்துக் கொண்டதை எதிர்த்து நடத்த போராட்டத்திலா? தன்னைப் பற்றி மிகைமதிப்புக் கொண்டுள்ள ஒரு நபருக்கு அளிக்கப்படும் சுதந்திரம் என்பது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளத்தான். ஆனால், எழுதுபவர்களை தக்குறைவாக விமர்சிப்பது, அப்படி விமர்சித்தால் பின்னூட்டம் செய்தால் அதற்கு சம்பந்தமில்லாமல ் பதில் எழுதுவது என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முனைவர் பாண்டியனாரே! பலமுறை வலியுறுத்திய விஷயம் தான். தர்க்கம் செய்வோரைத் திருத்த முடியும் குதர்க்கம் செய்வோரை?
என் மீதான உங்களின் வசைகளுக்கு நன்றிகள். நான் இதைப்பற்றி எழுதும்போது, ஒரு சிக்கலான விஷயத்தையும், ஒரு கட்சியையும் விமர்சித்து எழுதுகிறேன் என்று தெரிந்தே, எனது சிந்தனைகளைப் பதிவு செய்ய முடிவெடுத்தேன். இந்தச் சாடல்கள் நான் எதிர்பாரத்தவை தான்.
நான் ஏதோ திசை திருப்புவதாகவோ, முறையான பதில்கள் கொடுக்கவில்லை என்றோ சொல்லும் நீங்கள், நான் இந்தக் கட்டுரையில் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முனைந்தீர்களா?
ஈழத்திலே இன்று முள்வேலியில் உள்ள மக்கள் பழந்தமிழர்களே அதிகம். அவர்கள் அங்கு பழிதீர்க்கப் படுகிறார்கள். அவர்களுக்கு சம உரிமை கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக ராஜபக்ஷ சொல்லிவிட்டான். எனவே, தமிழீழம் தான் தீர்வென்பது சிறுவர்கூட சொல்லக்கூடிய கருத்து. ஆனால், அதை உங்கள் கட்சி சொல்லமறுப்பதேன் . அதைப்பற்றி நீங்களும் கருத்து சொல்ல தவறுவது ஏன்? நான் வைத்த கேள்விகளை நேராக எதிர்கொண்டு பிறகு என்னை ஒரு கைபார்த்திருக்க வேண்டும். உங்களிடம் நேர்மை உள்ளதா?
சில தேர்தல் அரசியலில் ஈடுபடாத பொதுஉடைமை இயக்கங்களுடன் இரண்டு வருடங்களாகத் தான் எனக்குத் தொடர்பு. இந்த இயக்கங்கள் எதிலும் நான் உறுப்பினர் இல்லை. ஆனால், என்னால் முடிந்த ஆதரவுகளை இந்த இயக்கங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறேன். இந்தக் காலகட்டத்தில் ஈழச்சிக்கல் முதன்மைச் சிக்கலாக இருப்பதால், அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட போராட்டங்களிலெல ்லாம் கலந்து கொண்டிருந்தேன்.
இப்போது ஒரு சில பழந்தமிழர் இயக்கங்களின் கலைக்குழுக்களோட ு தொடர்பு ஏற்படுத்தி வருகிறேன். இனி என்னாலான தொண்டு இந்த வகையிலும் தொடரும். தேர்தல் அரசியலில் உள்ள எந்தக் கட்சியுடனும் எனது தொடர்புகள் இருக்காது.
மற்றபடி பெரியாரைப்போன்ற சிந்தனை எனக்கிருக்கலாம் . ஆனால், அவரது ஆளுமை எனக்கில்லை. என்னைப் பொருத்தவரை என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.
செய்யக்கூடிதை மட்டும் சொல். சொல்வதை குறைவில்லாமல் செய். இதில் நேர்மையாய் இரு. இவை எனது கொள்கை.
இலங்கை குறித்து நீங்கள் கதைத்த விடயங்கள் புல்லரிக்க வைக்கிறது. முள்வேலி முகாம்களில் இலங்கை அரசால் சித்திரவதைக்குள ்ளாக்கப்படும் அனைத்து தமிழர்களும் காப்பாற்றப்பட்ட வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக தலித் மக்களுக்கு எதிராக கதைத்து விட்டு, முள்வேலிமுகாமில ் சிக்கியுள்ளவர்க ளில் தலித் மக்கள் அதாவது உங்கள் பாஷையில் பழந்தமிழர் அதிகம் என கண்டுபிடித்துள் ளீர்கள். அதற்காக தமிழீழம் தான் தீர்வு என சிறுவர்கள் சொல்வதாக சிறுபிள்ளைத்தனம ாக கதைக்கிறீர்கள்.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துவ ாழும் தமிழ்மக்கள் மீண்டும் தாயகம் திரும்ப, அங்கு சுமூக வாழ்நிலை ஏற்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு தீர்வு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்
செட்டிக்குளம் பிரச்சனையில் இரண்டு தரப்பினரையும் மோதவிடாமல் இருக்க சேதாரமில்லாமல் என்று மார்க்சிஸ்ட் கட்சிக்கு அறிவுரை கூறிய பாண்டியன், இலங்கைப்பிரச்சன ையில் மட்டும் சேதாரம் ஏற்படுத்திய புலிகளின் வாலைப்பிடித்துக ் கொண்டு அலைகிறார். இலங்கைத்தமிழருக ்காக குரல் கொடுத்ததற்காக பல சிங்கள பத்திரிகையாளர்க ள் படுகொலை செய்யப்பட்டுள்ள தை பாண்டியனார் அறிவார். ஆனாலும், சிங்கள மக்கள் அனைவரையும் எதிரிகளைப் போல பாவித்து எழுதி வருகிறார்.
இலங்கைப்பிரச்சன ையில் அவர் எடுத்த நிலைபாடு என்பது அவர் விரும்பி ஏற்றுக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், அதே நிலைபாட்டை அனைவரும் எடுக்கவேண்டும் என்று நினைப்பது அறிவீனம். ஒரு பிரச்சனையைக் கிளப்பிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் கைதேர்ந்த வேலை பாண்டியனாருக்கு தெரிந்திருக்கிற து. செய்யக்கூடியதை மட்டும் சொல்வதாகவும், சொல்வதைக் குறைவில்லாமல் செய்வதாகவும் பாண்டியனார் எழுதியுள்ளது குறித்து ஏற்கனவே பல பின்னூட்டங்களில ் நான் உள்பட பலர் பதிலளித்துள்ளோம ். கணினி முன் அமர்ந்து கொண்டு புரட்சி செய்பவர் பாண்டியன் என்பதை இணையம் பயன்படுத்தும் அனைவரும் அறிவார்கள். கோவில் நுழைவுப்போராட்ட ம் குறித்து மார்க்சிஸ்ட்டுக ள் மீது முனைவர்அவதூறு பொழிந்துள்ளதற்க ு தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாப ு சரியான பதில் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து விவாதிக்க பாண்டியன் தயார் என்றால் நாங்களும் தயாராவே இருக்கிறோம்.
//ஒரு பார்ப்பானிடம் விவாதம் செய்வது வீண் வேலை. ஏய்க்கும் மந்திரங்களை மனனம் செய்து, அதையே திரும்பத்திரும் ப சொல்லிப் பழகியவர்களுக்கு , தர்க்கமெல்லாம் முடியுமா என்ன?//
ஏன் இந்த சோர்வு? உங்களிடம் நான் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வரவில்லையா, உங்கள் அத்தனை அவதூறு, ஏச்சுக்களையும் பொருட்படுத்தாமல ்? ஏனெனில் பார்ப்பனீயரிடம் விவாதம் செய்வது இத்தன்மையுடையது என்று தெரிந்துதான் விவாதிக்கிறேன். பார்ப்பனீய சிந்தனை என்ற காமாலையால் பீடிக்கப்பட்டவர ்களுக்கு மாற்றுக்கருத்து டைய அனைவரும் மஞ்சளாக பார்ப்பனராகத்தா ன் தெரிவர். நிற்க.
சானல்4 வீடியோ விடியோ சம்பந்தமாக தமிழ்னெட் இனையத்தைச் சுட்டியதற்கு நன்றி. ஆனால் விஷயங்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள துபோல் இல்லையே! பெயர் வெளியிடப்படாத அமெரிக்கத் தொழில்நுட்பக்கு ழுவினரின் இடைக்கால அறிக்கை என்றபேரில் அல்லவா வந்திருக்கிறது விளக்கம். நவம்பர் ஆரம்பத்தில் முழு அறிக்கையுடன் பெயர் வெளியிடப்படும் என்று இந்த ஆய்வை ஸ்பான்ஸர் செய்த 'இனப்படுகொலைக்க ெதிரான தமிழர்' என்ற அமெரிக்க அமைப்பு அறிவித்திருப்பத ாக நீங்கள் சுட்டியிருக்கும ் தமிழ்னெட் செய்தி கூறுகிறது. சரி மேலதிக தகவல்களுக்காக 'இனப்படுகொலைக்க ெதிரான தமிழர்' அமைப்பின் இணையதளத்திலேயே நேரடியாகப் பார்க்கலாம் என்று அத்தளத்திற்குச் சென்றால் அங்கு இந்த விடியோ சம்பதமான செய்தியை விளக்கும் சுட்டி நம்மை நேரடியாக தமிழ்னெட் தளத்திற்கு கொண்டுவந்து விட்டு விடுகிறது. அதாவது தமிழ்னெட் கூறியதற்கு ஆதாரம் 'இனப்படுகொலைக்க ெதிரான தமிழர்' கொடுத்த தகவல், 'இனப்படுகொலைக்க ெதிரான தமிழர்' வெளியிட்டிருக்க ும் அதே தகவலுக்கு ஆதாரம் தமிழ்னெட்டில் வந்திருக்கும் செய்தி!. இதைத்தான் இலங்கைத் தமிழில் 'சுத்துவது' என்பதோ? எது எப்படியாயினும் முடிவான உண்மை வெளிவரும்வரையில ் இரண்டு தரப்பு செய்திகளையும் படிப்பது, எந்த முடிவுக்கும் வருவதில்லை என்பதெஎனது முடிவு, இதற்காக நீங்கள் எனக்கு பார்ப்பன நிறம் பூசினாலும்.
//உலகக் கண்ணையே கட்டிவிட்டு ...... பம்மாத்து செய்யும் "கயவர்கள்" உண்மையைச் சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள் . //
இதன்மூலம் நீங்கள் கூற முயற்சிப்பது என்ன? கயவர்கள் எப்படி உண்மையைச் சொல்வார்கள்? உண்மையைச் சொன்னால் அவர்கள் கயவர்களா?
//வதைபடும் சிறபான்மை சமூகம் இப்படிப்பட்ட சூழலில் பொய் சொன்னாலும் நம்பித்தானாக வேண்டும். அது தான் எனது நிலைப்பாடு!//
இது உங்கள் நிலைபாடு மட்டுமல்ல, எனது நிலைபாடும் அதுதான், நேர்மையாகச் சிந்திக்கும் எவரது நிலைபாடும் அதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால் இங்கே பிரச்சனையே வதைப்படும் சமூகத்தின் வதைக்கு ஒருகாரணமாக அமைந்தவர்கள் தங்கள் தலையைக் காத்துக்கொள்ள சொல்லும் தொடர் பொய்களை உங்கள் போன்றவர்கள் நம்புவதும் அவற்றைப் பரப்புவதும், அதை பகுத்தறிவோடு கேள்விக்குட்படு த்துபவர்களை அவதூறு செய்வதும்தான்.
//அது மக்கள் தொலைக்காட்சியில ் விரிவாகக் காண்பிக்கப் பட்டது. பார்ப்பனத் தொலைக்காட்சிகளி ல் இவை காண்பிக்கப்படாத தால் உமக்குத் தெரியவில்லை போலும்.//
நானிருக்கும் கிராமப் பகுதியில் மக்கள் தொலைக்காட்சி தெரிவதில்லை, மற்ற எந்த தொலைக்காட்சியைய ும் பார்க்கும் வழக்கம் எனக்கில்லை. மன்னிக்கவும்.
//இதற்குத் தடையாக இருப்பது பார்ப்பன சமூகம் தான்.//
உங்கள் சிந்தனையிலிருக் கும் பார்ப்பனீயத்தைச ் சற்று ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் இந்தத்தடை பார்ப்பனீய சமூகத்தால் என்பது புரியவரும். உங்கள் பார்வை விரிவடையும். பார்ப்பனீயம் என்பதே பிறப்பின் அடிப்படையில் தரத்தைத் தீர்மானிப்பதுதா ன். அது பார்ப்பான் செய்தாலும் பனியா செய்தாலும் அல்லது உங்கள் போன்றவர்கள் செய்தாலும் 'தலித்' என்ற் அடைமொழியோடு செய்தாலும் அது பார்ப்பனீயமே.
//உம்மிடம் நேர்மை இருந்திருந்தால் இப்படியெல்லாம் நான் எழுதத் தேவை இருந்திருக்காது ! //
உங்களிடம் உள்ள 'பார்ப்பனீய நேர்மை' என்னிடம் இல்லைதான், வருந்துகிறேன். வேறு வழியில்லை!
//ஈழத்தை அழித்தது உமது அயோக்கிய பார்ப்பன சமூகம் தான்//
தமிழர் வாழ்வைச் சீரழித்தது பார்ப்பனீய சித்தாந்தம் தான், ஈழத்தமிழ் பார்ப்பனீயத்தின ் பிரதிநிதியாகிய பிரபாகரன் தலைமையிலான 'புலி'களுக்கும் அதில் பங்கு கணிசமானது.
சரிதானா?
லண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது, “உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு, மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டு பாடுபடாமல் ராஜபோகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப்பனர்கள் - இந்த நாட்டுப் பொது உடைமைக்காரர்களு டன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தம்என்ன?” என்று கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்!......
பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும், என்னவென்றால் வர்ணாசிரமத்தையு ம், பார்ப்பனியத்தைய ும் பத்திரப்படுத்தி விட்டு, எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்திவிட்ட ாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வர்ணாசிரமப் பார்ப்பனனிடம் தானாகவே வந்துவிடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமை திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் – அவர்கள் வாழ்க்கை முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்......
ஆதலால் பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாரு க்கு உடைப்பதால், அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக் குப் பொது உடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக்காரணமாக ும். நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் பார்த்து மயங்கி விடுகிறார்கள்......
தந்தை பெரியார், ‘குடி அரசு’ - 25.3.1944
அதோடு, எதிரியோடு அவனின் நயவஞ்சகத்திற்கு உடன்படாமல் தங்களை மாய்த்துக் கொண்டதன் மூலம், இவர்கள் மெய்யான மண்மீட்பு போராளிகள் என்பதனை நிறுவியுள்ளனர்.
தமிழனுக்கு துரோகம் செய்த இந்தியாவிற்கு எதிராக இங்கு தமிழ் மக்கள் திரண்டுவிடக் கூடாதென்பதால் தான், இந்திய ஒருமைப்பாட்டை விரும்பும் சக்திகள், புலிகளின் மீது திட்டமிட்ட அவதூறைப் பரப்பி வருகின்றனர். நாம் இந்தியாவைச் சாடும் போதெல்லாம் இவர்கள் புலிகளைச் சாடுவார்கள். தமிழகத்தில் உட்பகை நிறையவே உண்டு.
தூங்கும் "உண்மைத்" தமிழன் விழித்தால் தான், தனது மண்ணையும், உரிமைகளையும் காக்க முடியும்.
RSS feed for comments to this post