இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் தீவிர மாகப் பங்கேற்றனர். இனி பெரியாரை கைது செய்தால் தான் போராட்டத்தை ஒடுக்க முடியும் என்று கருதிய முதலமைச்சர் இராசாசி, பெரியாரைக் கைது செய்ய முடிவு செய்தார். 1-1-1938 அன்று பெரியாருக்கு காவல் துறை கைது வாரண்ட் பிறப்பித்தது. “13.11.1938இல் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் பேசி அவர்களைக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினார். மறு நாள் 14.11.1938இல் பெண்கள் போராட்டக் களத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவர்களிடையே பேசி அவர்களை மறியலில் ஈடுபடத் தூண்டினார்” என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணை 5.12.1938 அன்றும் 6.12.1938 அன்றும் நடைபெற்றது.

பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு

சர்க்கார் தரப்பு சாட்சியம்

பெரியார் வாக்குமூலம்

3 வருஷம் கடுங்காவல்-2000 ரூபாய் அபராதம்

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14ஆவது மகாநாட்டின் தலைவரும், சுயமரியாதை இயக்கத் தலைவருமான பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மீது, சென்னை அரசாங்கத்தாரால் 117ஆவது 7(1)ஏ செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு, இன்று காலை 11.25 மணிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டு 4ஆவது நீதிபதி தோழர் மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் காலை 10.45 மணிக்கே படுக்கையுடன் தயாராகக் கோர்ட்டிற்கு வந்துவிட்டார். வழக்கைக் கவனிக்கத் தோழர்கள் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, டி. சுந்தரராவ் நாயுடு, பி.ஏ., பி.எல்., கி.ஆ.பெ. விசுவநாதம், எஸ்.வி. ராஜன், பி.ஏ., பி.எல்., தாமோதரம் பிள்ளை, ராவ் சாகிப், தர்மலிங்கம் பிள்ளை, டி.ஆர். கோதண்டராம முதலியார், பி.ஏ., பி.எல்., டி. நல்லசிவம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., சி.பாசுதேவ், பி.ஏ., பி.எல்., திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை, சேலம் எ. சித்தையன், ஓ.எஸ். சதக் தம்பி மரைக்காயர், ஜமான் இப்ராஹிம், டி.எஸ். முகம்மது இப்ராகிம், சாமி சிதம்பரனார், திருப்பத்தூர் சேர்மன் துரைசாமி நாயுடு, ஈரோடு வி. வேணுகோபால், பி.ஏ., பி.எல். ஆகியோர் வந்திருந்தனர்.

கோர்ட்டில் எல்லோரையும் அனுமதிக்காததால் ஏராளமான தமிழ் மக்கள் கோர்ட்டிற்கு வெளியே பீச் ரோட்டில் நின்று வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கினர். பெரி யார் ஈ.வெ.ரா. வந்திறங்கியதும் மக்கள் ஆரவாரித்து வாழ்த்தொலி செய்தனர்.

பெரியாருக்குப் பிராசிக்கியூஷன் மரியாதை

நீதிபதி 11.25 மணிக்கு வந்து வழக்கை ஆரம்பித் தார். கிரவுன் பிராசிகூடர் தோழர் டி.எஸ். அனந்த ராமன் சாட்சிகளை விசாரித்தார். கோர்ட் டார் பெரியாரைக் கூப்பிட்டதும், பெரியார் ஈ.வெ.ரா. எழுந்து நின்றார். உடனே கிரவுன் பிராசிக்கூட்டர் நீதிபதியிடம் தோழர் நாயக்கரவர்கள் உட்கார்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டு மென்று வேண்டினார். பின்னர் பெரியாரும் உட் கார்ந்து கொண்டார்.

ஆரம்பத்திலேயே ஈ.வெ.ரா. அவர்கள் தான் எதிர் வழக்காடப் போவதில்லை என்றும் தனக்கு யாரும் வக்கீல் இல்லை என்றும் கூறிவிட்டார்.

முதல் சாட்சி வாக்குமூலம்

சர்க்கார் தரப்பின் முதல் சாட்சியான சுருக்கெழுத்து சப்-இன்ஸ்பெக்டர் தோழர் கேசவ மேனன் தனது சாட்சியத்தில் கூறியதாவது :-

“நான் சர்க்காரின் இன்டெலிஜென்ஸ் டிபார்ட் மெண்டில் தமிழ் சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டராக சென்ற 5 வருடங்களாக இருந்து வருகிறேன். எனக்குத் தோழர் ஈ.வெ.ராமசாமியை நன்றாகத் தெரியும். அவரது சொந்த ஊர் ஈரோடு. அவர் 1923ஆம் வருஷம் வரை காங்கி ரசிலிருந்தார்.

பின்னர் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக் கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் பார்ப்பனரல்லா தாரின் சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கவும் பார்ப்பனரை எதிர்க்கவும் ஆரம்பிக்கப்பட்டது. ஜஸ்டிஸ், சுயமரியாதை இவை இரண்டுமே ஒரே கொள்கை கொண்டுள்ளவை.

21.4.38ந் தேதிய 911 நெ. இந்திக் கட்டாயப்பாட சர்க்கார் உத்தரவிற்குப் பிறகு இந்தி எதிர்ப்பு ஆரம்பிக் கப்பட்டது. அந்த உத்தரவிற்குப் பிறகே ஒரு பகுதி தமி ழர்கள் இந்தி எதிர்ப்பியக்கத்தை ஆரம்பித்து கட்டாயப் பாட உத்தரவை ரத்து செய்யுமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி வருகின்றனர். பின்னர் சென்னை நகரத்தி லும், சென்னைக்கு வெளியிலும் இந்தியைக் கண்டித் துப் பல கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் முதல் கூட்டம்

சென்னையில் இந்தி எதிர்ப்பு முதல் கூட்டம் 31.5.1938 அன்று தியாகராய நகரில் நடைபெற்றது. இந்தி எதிர்ப்பிற்கென கட்டப்பட்ட புதுக்கட்டடத்தில் (நிலை யம் ந.நி.) அக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாலை 6.30 முதல் 9.30 வரை நடைபெற்றது. சர், கே.வி. ரெட்டி நாயுடு தலைமை வகித்தார். தோழர் எஸ். முத்தையா முதலியார் தமிழ்க்கொடி ஏற்றினார்.

 நான் அக்கூட்டத் திற்குச் சென்றிருந்தேன். அன்று எதிரியும், முதல் சர்வாதிகாரி-சி.டி. நாயகமும் மற்றும் பல இந்தி எதிர்ப்புத் தலைவர்களும் பேசினர். பல்லடம் பொன்னுசாமியை அவர் நாளை உண்ணாவிரதமிருக்கப் போவதாக, தோழர் சி.டி. நாயகம் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

அடுத்த நாள் காலை 6.30 மணிக்குப் பல்லடம் பொன்னுசாமி, முதன் மந்திரி வீட்டின் முன் உண்ணா விரதமிருந்தார். அப்படியே 2 நாள்கள் உண்ணாவிரத மிருந்தார். 3.6.1938 அன்று அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் ‘பேட்ச்’ தொண்டர்கள் மறியலுக் காக வந்தனர்.

அவர்களும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். இதேபோல 1.7.1938 அன்று இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன்பும் தொண்டர்கள் மறியல் செய்யத் தொடங்கினர். 3 மாதம் வரை முதன் மந்திரி வீட்டின் முன் மறியல் நடந்து வந்தது. தொண்டர்கள் அவ் வப்போது கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். இரண்டு இடங்களிலுமாக நவம்பர் கடைசி வரை கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 400.

இதில் முதன் மந்திரி வீட்டின் முன்பு கைதியானவர்கள் சுமார் 165. தியாகராய நகரிலிருந்த இந்தி எதிர்ப்பு நிலையம் பிரிக்கப்படும் வரை அங்கேயே மறியல் தொண்டர்கள் தங்கியும், உணவு உண்டும் வந்தனர்.

மே 28ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கமிட்டிக் கூட்டத்தில், எதிரி இந்தி எதிர்ப்புக் கமிட்டியின் ஒரு அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் 69 பள்ளிகளிலும், ஆந்திராவில் 54 பள்ளிகளிலும், மலையாளத்தில் 11 பள்ளிகளிலும் இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றது. கட்டாய இந்திக்கு மலையாளத்திலும், ஆந்திராவிலும் எதிர்ப் பில்லை. எதிரி முதன்முதல் 31.5.38 அன்று சென் னையில் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார்.

பின்னர் இந்தி எதிர்ப்புக் கமிட்டியின் ஆதரவில் நடைபெற்ற பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஈரோட்டிலிருந்து வெளிவரும் ‘விடுதலை’ தினசரியும், ‘குடிஅரசு’ வார வெளியீடும் எனக்குத் தெரியும்.

தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவைகளின் வெளியிடுவோரும் ஆசிரியருமாவர், 13.11.38 ஒற்றைவாடைக் கொட்டகையில் நடைபெற்ற தமிழ் நாட்டுப் பெண்கள் மகாநாட்டிற்கு நான் சென்றிருந்தேன்.

நீதிபதி கேள்விக்குப் பெரியார் பதில்

நீதிபதி : நீங்கள் ஏதாவது சாட்சியைக் கேட்க வேண்டுமா?

ஈ.வெ.ரா. : அவர் கூறியது என் காதில் சரியாக விழ வில்லை. இருந்தாலும் இந்தக் கோர்ட்டில் நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை, எனவே சாட்சி யை நான் ஒன்றும் கேட்க வேண்டியதில்லை. கேட்ப தாலும் ஒன்றும் பயனில்லை.

2ஆவது சாட்சி வாக்குமூலம்

பின்னர் 2ஆவது சாட்சியாக தோழர் எ. கிருஷ் ணய்யர் (சுருக்கெழுத்து சப்-இன்ஸ்பெக்டர்) விசாரிக் கப்பட்டார். அவர் கூறியதாவது :-

நான் சென்ற 20 வருஷங்களாக சுருக்கெழுத்து சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வருகின்றேன். சென்னை யில் 13.11.1938 அன்று நடந்த தமிழ்நாட்டுப் பெண் கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். மாநாடு மாலை 2.45-க்கு ஆரம்பித்து இரவு 8.15-க்கு முடிவுற்றது. நான் கடைசி வரை இருந்தேன். மாநாட்டிற்கு வந் திருந்த 1500 பேரில் 700 பெண்கள் ஆகும். நடவடிக் கைகள் தமிழிலேயே நடைபெற்றன. தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் அம்மாநாட்டிற்கு வந்திருந்தார். அம்மாநாட்டில் எதிரி பேசினார். அவர் பேசும்பொழுதும் நான் அங்கிருந்தேன்.

நான் தமிழ்ச் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து பின்னர் தமிழ் நெட்டெழுத்தில் எழுதி னேன். அவர் பேச்சை ஒழுங்காகவே குறிப்பெடுத் தேன். மறுநாள் 14.11.1938 பெத்துநாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் முன் சாமி-அருணகிரி நாதர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கும் சென்றிருந்தேன்.

அக்கூட்டம் மாலை 6.15-க்கு ஆரம்பித்து 9.15-க்கு முடிவுற்றது. அங்கு எதிரியும் பேசி னார். அவர் பேச்சை சிறிதும் விடாது குறிப்பெடுத் தேன். அவரது பேச்சுகள் பொது மக்களிடையே மிகுந்த உணர்ச்சியை உண்டாக்கின. பின்னர் சாட்சி பெரியார் ஈ.வெ.ரா.வின் 2 பிரசங்கங்களையும் கோர்ட்டில் படித்தார்.

நீதி : இதில் ஏதாவது தவறிருக்கின்றனவா? சாட்சியை ஏதாவது கேட்க வேண்டுமா?

ஈ.வெ.ரா.:பல தவறுகள் காணப்படுகின்றன. ஆனால் அதுபற்றி நான் ஒன்றும் கேட்க விரும்பவில்லை.

3ஆவது சாட்சி வாக்குமூலம்

பின்னர் 3ஆவது சாட்சியாகத் தோழர் ரஞ்சித் சிங் (சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டர்) விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது :

நான் சார்க்காரின் இன்டெலிஜென்ஸ் செக்ஷனில் சுருக்கெழுத்தாளனாக இருக்கிறேன். 13.11.1938இல் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். கடைசிவரை இருந்தேன்.

அம்மா நாட்டிற்கு மறுநாள் 14ந் தேதியன்று பெண்கள் இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன் மறியல் செய்தனர். அப்பெண்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்கள் அபராதம் செலுத்தவில்லை.

இந்தி எதிர்ப்புக் கழக ஆதரவில் அன்று மாலை காசி விசுவநாதர் கோயில் முன்பு ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் கிரவுன் பிராசிக்கூடர் இந்தப் பிரசங்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருப் பதால் வாய்தா கொடுக்க வேண்டுமென்று கேட்டார்.

நீதிபதி : பிரசங்கங்கள் விளக்கமாக இருப்பதால் இதற்கு வாய்தா வேண்டியதில்லை, சில மணிநேரங் களில் மொழிபெயர்த்துவிடலாம் என்று கூறினார்.

பின்னர் சர்க்கார் சாட்சிகள் மீண்டும் கிரவுன் பிராசிகூடரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.

குறுக்கு விசாரணை

குறுக்கு விசாரணையில் முதல் சாட்சி கேசவ மேனன் கூறியதாவது:- இந்தி உத்தரவை எடுக்குமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி முதன் மந்திரி வீட்டின் முன்பும் தியாலாஜிக்கல் பள்ளி முன்பும் மறியல் நடந்தன.

அப்பள்ளியில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டி ருப்பதால் பையன்களைப் படிக்கவிடாது தடுக்கவே மறியல் நடைபெறுகிறது. அப்படி பையன் கள் போகா விட்டால் பள்ளிக்கூடம் மூடப்படும் என்று கருதியே இம்மறியலால் ஏற்படும் கூச்சல் ஆசிரியர்களையும் வகுப்பு நடத்த முடியாமல் தடைசெய்கிறது.

3ஆவது சாட்சி தோழர் ரஞ்சித் சிங் கூறியதாவது :

1411.1938 அன்று 5 பெண்கள் இந்து தியாலாஜிக் கல் பள்ளி முன் நின்று ‘இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’ என்று கூறி மறியல் செய்தனர். இதனால் ஆசிரியரும், பையன்களும் உள்ளே புக முடியாமலும், நடத்திக் கொண்டிருக்கும் வகுப்பு மேலும் நடைபெறாமலும் தடைப்படுகின்றது. வேடிக்கைப் பார்க்க ஆசிரியர்கள் வெளியே வந்துவிடுகின்றனர்.

நீதி:நீங்கள் ஏதாவது வாக்குமூலம் கொடுக்கின்றீர்களா?

ஈ.வெ.ரா. : சிறிது அவகாசம் கொடுத்தால் சாட்சியங் களைப் பார்த்து வாக்குமூலம் கொடுக்கின்றேன்.

 நீதி : சாட்சிக் காப்பிகள் மாலை தான் கிடைக்கும். எனவே வழக்கை நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கிறேன்.

மீண்டும் வழக்கு நாளை நடைபெறும்.

1.30 மணிக்கு வழக்கு முடிந்து பெரியார் கீழே வரும் வரை வெளியில் ஏராளமான மக்கள் காத்துக் கொண்டே நின்றனர். பெரியார் காரில் ஏறியதும் மக்கள் ‘பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க’ என ஆரவாரம் செய்த னர். மக்கள் காட்டிய உணர்ச்சி அளவுகடந்ததாயிருந் தது. கோர்ட்டிலும் வெளியிலும் பலமான போலீஸ் பந்தோபஸ்து செய்யப்பட்டிருந்தது.

(மறுநாள் நடவடிக்கை)

சென்னை, டிச.6 - சென்னை அரசாங்கத்தாரால் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மீது 117ஆவது செக்ஷன் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் 4ஆவது மாகாண நீதிபதி தோழர் மாத வராவ் முன்பு இன்று காலை 11.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டது.

பெரியார் வருகை

சரியாகப் 11 மணிக்குப் பெரியார், சர். ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆகியவர்களுடன் படுக்கை சகிதமாகக் கோர்ட்டிற்கு வந்து சேர்ந்தார். கோர்ட்டிற்கு வெளியில் நின்றிருந்த பதினாயிரக்கணக் கான மக்கள் கைதட்டி வாழ்த்தொலி செய்தனர். இன்றும் கோர்ட்டுக்கு அருகில் யாரையும் வரவிடாது பலத்த போலீஸ் பந்தோபஸ்து இருந்தது. நேற்று இரவு 10 மணிக் குத்தான் பெரியாருக்கு சர்க்கார் சாட்சியத்தின் நகல் கிடைத்ததாகையால் கோர்ட்டில் வந்தும் விரைவாக வாக்கு மூலத்தின் எஞ்சிய பகுதிகளை எழுதிக் கொண்டிருந்தார்.

ரசாக்கான் சாட்சியம்

ஆரம்பத்தில் கிரவுன் பிராசிக்கூட்டர், சப்இன்ஸ் பெக்டர் தோழர் ரசாக்கானை சர்க்கார் சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவர் இந்து தியாலாஜிகல் பள்ளி இருக்கும் செக்ஷனின் சப்இன்ஸ்பெக்டர் என நீதிபதி யைக் கேட்டார்.

நீதிபதியும் சம்மதிக்க, தோழர் சப்-இன்ஸ்பெக்டர் ரசாக்கான் விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது :-

நான் யானை கவுணி போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர். இந்து தியாலாஜிக்கல் பள்ளி எனது ஜுரிஸ்டிக்ஷனில் உள்ளது. நாடோறும் நடைபெறும் மறியல் காலத்தில் நேரில் பள்ளி முன் இருந்து வருகிறேன். 14.11.1938 அன்று 5 பெண்கள் பெரிய ஊர்வல மாக வந்து, பள்ளியின் வாசற்படிக்கு அருகில் நின்று கொண்டு ‘தமிழ் வாழ்க’, ‘இந்தி வீழ்க’ எனக் கூச்ச லிட்டு மறியல் செய்தனர்.

அன்றும் நான் அங்கிருந் தேன். 2000 அல்லது 3000 பேர் ஊர்வலமாக வந்த னர். எதிரியும் ஊர்வலத்துடன் அன்று வந்தார். பெண் கள் மறியலால் ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளே போகத் தடங்கலாயிற்று. வகுப்பு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் வெளியே வந்துவிட்டனர்.

பெண்களை அங்கிருந்து போய்விடுமாறு நான் எச்சரித்தும், இந்தி ஒழிந்தால் ஒழிய, போகமாட்டோமென்றனர். பின்னர் அவர்களைக் கைது செய்தேன். எதிரியும் நான் கைது செய்யும் வரை அங்கேயே இருந்தார். பின்னர் இரண்டா வது மாகாண நீதிபதி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு பெண்கள் தண்டனை பெற்றனர்.

பெண்கள் அபராதங் கொடுக்க மறுத்தனர். கோர்ட்டிலும் எதிரி ஆஜராகியிருந்தார். இதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் மறியல் செய்து வருகின்றனர். 21.11.1938 அன்று 8 பெண்கள் மறியல் செய்த னர். அன்றும் பெரிய ஊர்வலமாக அவர்கள் வந்தனர்.

மேலும் அவர்கள் செய்யும் மறியலால் பெருங்கூட்டம் கூடி, போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகின்றது. அவர்களையும் நான் எச்சரித்தேன்.

கேட்காததால் கைது செய்தேன். அவர்களும் தண்டனை பெற்றார் கள். அன்று வழக்கு முடிந்த பிறகு வழக்கைப் பார்க்க வந்திருந்த ஏராளமான மக்கள் திரும்பி 2 மணிக்கு வீட்டிற்குச் செல்லும் போது பல இடங்களில் கல் லெறிந்து பலருக்கு நஷ்டம் உண்டாக்கியிருக்கின்றனர்.

முதன்முதலில் தினமணி ஆபிஸ் மீது கல் லெறிந்ததாக அறிந்தேன். அதற்குப்பின் மற்றும் சில இடங்களில் குழப்பம் நேரிட்டதாகத் தெரிகிறது. ஆனால், நேரில் நான் பார்க்கவில்லை, அதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் தொடர்ந்து மறியல் செய்து வருகின்றனர்.

(குடிஅரசு 11-12-1938)

- தொடரும்

Pin It