தன் காலங்களின்
வரையறைகளுக்கேற்ப
இயல்பாகவே அப்பறவை
நம் நாட்டை நோக்கி வருகிறது
உயரங்களில் இருந்து
பார்க்கையில்
நிலப்பரப்புகளின் தன்மையில்
சாதாரணமற்ற தோற்றம்
கீழ்நோக்கி நெருங்க
கண்களுக்குள் வலியுறச் செருகியது காட்சிகள்
வயல் வெளிகளை
விழுங்கி நிற்கும்
கட்டிடங்கள்
காடுகளின் பசுமைமிகு
ஆடைகளைக் கிழிக்கின்ற
சுற்றுலாத் தளங்கள்
புல்வெளிகளின்
அழகுத் தோற்றம் மறைத்து
மக்காத பொருட்களின் ஆக்கிரமிப்பு
நீரோட்டம் தவிர்த்து
மரணித்த நதிகளின்
சலனமற்ற சடலத் தோற்றம்
ஆங்காங்கே மிச்சமாகி
நிற்கும் உயிரிழந்த
மரங்களின் எலும்புக்கூடுகள்
அவற்றில் ஒன்றின்
இறுதி இலையும் நிலம் சேர
அப்பறவியின் ஒற்றை விழிநீர்த்துளி
அதன்மேல் விழுந்து சிதறியது ....
மனம் கதற
திரும்புகையில்
அப்பறவை ஒலியதிரக் கூவியது
மிச்சம் இருக்கும் பசுமையையும்
அழித்துவிடாதீர்
இந்நாட்டின் சொந்தப் பறவைகள்
இங்கு இருக்கின்றன ஏராளம்
அவைகளுக்கு கண்டம் தாண்டத் தெரியாது....!
- கலாசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை