கதவைத் தட்டலாம்
அல்லது
அனுமதி கேட்கலாம்..
இரண்டும் செய்யாது
பூட்டிய கதவைத் திறந்து
குவித்த குப்பையினை
களைத்து விட
"சனியனே" என
அம்மா திட்டியதும்
கோபத்தில்
கொல்லைபுறக் கதவை
இழுத்தடித்து வெளியேறிடும்
காற்று!!!

- முரளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It