இலைகளின் இடுக்குகளில்
ஆவியாகும் வெப்பமாய்
கனவு!

நெளிந்து நழுவும்
மலை முகட்டுப் பாம்பாய்
காதல்!

இதோ...
உள்ளீடற்ற உருவமொன்றின்
உறுமல்கள் மறுசுழற்சி
செய்கிறது- கவிதையாய்!..

இன்னுமிருக்கிறோம்..
நானும் என் தனிமையும்...!!!!!

-‍ மணவை அமீன்

Pin It