1. பிறரிடம்
பேசியிருக்க வேண்டாம்
என்னிடம் சொல்லாதவற்றை.

.................................................................................................................................

2. எப்போதும் நீ வரும்
வழக்கமான வீதியையும்
மாற்றியிருக்கிறாய்.

………………………………………………………………………………………..

3. அறை மூலையில்
நீ கொடுத்த பொம்மை
அறை முழுக்க நீ..

.......................................................................................................................................

4. எனக்கும் சொல்
என்ன செய்தாய்
என்னை..?

…………………………………………………………………………………..

5. வெளித்தள்ளி கதவடைப்பதை
விடவும்
உள்ளே நுழையுமுன்
தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

...............................................................................................................................

6. உனக்குப் பதிலாய்
காற்று எழுப்புகிறது.
என் காலைகளை...

................................................................................................................................

7. திறந்து தானிருக்கிறது கதவு
நீ தட்டும் ஒசையும்
கேட்கிறது

………………………………………………………………………………………

8. முதல் மழைக்கும்
கடைசி மழைக்கும்
இடைப்பட்டது வாழ்க்கை

......................................................................................................................................

9. தூரத்துப் புள்ளி ரயில்
நொடிகளில் கடந்து போகும்
அடுத்தமுறையும்...

...............................................................................................................................

10. என்னிடம் தான்
வந்து கொண்டு இருக்கிறாய்.
எனைத் தாண்டிச் சென்ற பின்னரும்.

- ஆத்மார்த்தி

Pin It