1. பிறரிடம்
பேசியிருக்க வேண்டாம்
என்னிடம் சொல்லாதவற்றை.
.................................................................................................................................
2. எப்போதும் நீ வரும்
வழக்கமான வீதியையும்
மாற்றியிருக்கிறாய்.
………………………………………………………………………………………..
3. அறை மூலையில்
நீ கொடுத்த பொம்மை
அறை முழுக்க நீ..
.......................................................................................................................................
4. எனக்கும் சொல்
என்ன செய்தாய்
என்னை..?
…………………………………………………………………………………..
5. வெளித்தள்ளி கதவடைப்பதை
விடவும்
உள்ளே நுழையுமுன்
தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
...............................................................................................................................
6. உனக்குப் பதிலாய்
காற்று எழுப்புகிறது.
என் காலைகளை...
................................................................................................................................
7. திறந்து தானிருக்கிறது கதவு
நீ தட்டும் ஒசையும்
கேட்கிறது
………………………………………………………………………………………
8. முதல் மழைக்கும்
கடைசி மழைக்கும்
இடைப்பட்டது வாழ்க்கை
......................................................................................................................................
9. தூரத்துப் புள்ளி ரயில்
நொடிகளில் கடந்து போகும்
அடுத்தமுறையும்...
...............................................................................................................................
10. என்னிடம் தான்
வந்து கொண்டு இருக்கிறாய்.
எனைத் தாண்டிச் சென்ற பின்னரும்.
- ஆத்மார்த்தி