மழையால் உருபெற்ற சாலையை
வண்ணச்சிறகுகளால்
அளந்து கொண்டிருக்கிறது சாம்பல் பறவை..
ஒவ்வொரு துளியையும்
அது தன் சிறகுகளின் தனித்த அறையில்
ரசனையுடன் சேமிக்க தவறுவதேயில்லை...
சிறகுகளின் நரம்புகளில் வேற்றுலகிற்குச்
செல்லும் வழியை இரகசியமாய்
காக்கிறது..
சிறகுகளைப் பிய்த்தெரியும்
விரல்களுடன் ஊர்ந்து வருகிறது
சர்ப்பமொன்று..
பறவையுடன் நட்பு கலந்து
உலகங்களுக்குள் வண்ணமாய் பயணிக்கவும்
கற்கிறது..
உச்சியில் சுவையேறிய
அடுத்த நிமிடம்
துடிதுடிக்க பறவையைச் சுவைக்கிறது..
இரத்தத்தில் நனைந்து சுகந்த சர்ப்பம்
மெள்ள மெள்ள
மற்றுமோர் உலகை நோக்கி
பயணித்தபடி
மனிதனாய் உருமாறத் துவங்கியிருக்கிறது...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- தேனப்பன்
- பிரிவு: கவிதைகள்