கேள்வி : என் வயது 22. எனக்கு மூன்று வயதிலிருந்தே தோலில் சிறிது அழுத்தமாகவோ அல்லது கூர்மையாகவோ ஏதாவது பட்டால் தடித்தும் சிவந்தும் விடுகிறது. புத்தகத்தை எடுத்து செல்லும்போது தோழியர் என் கைகளை பிடித்து விளையாடும்போதும் அவ்வாறு ஏற்படுகிறது. சிறுவயதிலேயே எங்கள் ஊரிலுள்ள தோல் மருத்துவரிடம் காண்ப்பித்தோம். பயனேதுமில்லை இந்த வியாதி எனக்கு அருவருப்பையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் என்ன? இது தீராத தோல் வியாதியா..?
பதில்: இதை நோய் என்றே கூறமுடியாது. உடலில் எங்கு அழுத்தம் தரப்பட்டாலும் அந்த இடம் தடித்துப்போகும். அழுத்தம் தவிர அலர்ஜிக்கு சொத்தைப்பல், தொண்டை அழற்சி (infection), வயிற்றில் பூச்சி, வெயில், மழைத் தண்ணீர், தூசு, வியர்வை, புழுக்கம் என்று பல காரணங்கள் இருக்கலாம். இவற்றில் ஒவ்வொன்றாக விலக்கிப் பார்த்து, அழுத்தம் தருவதால்தான் தோல் தடிப்பு ஏற்படுகிறதா என்று உறுதி செய்யவேண்டும் ( பஸ்ஸின் ஜன்னலில் கைவைத்து அழுத்திய படி பயணம் செய்வது, ஹேண்ட் பேக் தோளில் தொங்கி அழுத்தம் தருவது போன்றவை). உறுதியானால், அதிக அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தோலின் தன்மை அப்படி! மெத்தை மாதிரி துணி வைத்தும் அழுத்தத்தைத் தவிர்க்கலாம். ஒவ்வாமைக்கு (அலர்ஜிக்கு) மருந்து, cetrizine- 10mg மாத்திரை உண்டு. மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். வெளியே, உடலுக்கு மேற்புறத்தில் Myconderm-c பவுடர் தடவினால் நமைச்சல் நிற்கும்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தோல் நோய்கள்
அது என்னவொ என்ட்ரு எனகு பயமக இருகிரது.
RSS feed for comments to this post