அன்புடையீர்

தமிழ் இதழியல் வரலாற்றில் 16 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்த ஒரே தலித் இதழ் தலித் முரசு. அதன் நேர்த்தியான வடிவமைப்பும் ஆக்கப்பூர்வமான கருத்தோட்டங்களும் தமிழில் உள்ள மாற்று வாசகப்பரப்பு அறிந்ததுதான். ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக மட்டுமின்றி உலெகங்கும் விடுதலைக்காய் போராடும் மக்களின் குரலாகவே அது ஒலிக்கிறது.

எந்தவிதமான வியாபாரத் தந்திரேமா விளம்பர பலமோ இல்லாமல் சமூக ஆர்வலர்கள், வாசகர்களை மட்டுமே நம்பியுள்ள இதழ் தலித் முரசு. ஆனால் அத்தகைய இதழ் இன்றைக்கு தாளவொண்ணா நிதிச்சுமையில் இருக்கிறது. மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தலித் முரசினைத் தாங்குவது சமூக அக்கறைக் கொண்ட அனைவருக்கும் உரிய கடமை என்றே கருதலாம்.

அதற்காக நிதி சேகரிக்க சென்னையில் கட்டியக்காரி குழுவினர் நவம்பர் 16 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மியூசியம் தியேட்டரில் எழுத்தாளர் பாமாவின் 'மொளகாப்பொடி' நாடகத்தை நிகழ்த்துகிறோம்.

அதற்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கி தலித் முரசு இதழின் நிதி நெருக்கடியைப் போக்க உதவும்படி கோருகிறோம்.

நன்றி

தொடர்புக்கு: 94442 09355, 90940 31188, 98846 61481.

dalithmurasu_funding_show_600

Pin It