பூமித்தாய் தந்த புகார் !!
தொ. சூசைமிக்கேல்
பூமிப்பந்(து) அன்றொரு நாள் – என்னிடம்
புகாருடன் வந்து நின்றாள்!
நாமிங்(கு) அவட்(கு) இழைக்கும் – தீமைகளை
நன்கு விளக்கி நின்றாள்!
“என்ன நடந்ததம்மா? – பூமாதேவி
என்னிடம் கூறிடம்மா!”
என்றதும், என்னிடம் தன் – கவலைகள்
எடுத்துச் சொல்லலுற்றாள்:
“காடு கழனியெல்லாம் – என்னுடைய
கட்டிள மேனியெல்லாம்,
கேடு மிக விளைக்கும் – ஆயுதக்
கிடங்குகள் ஆனது பார்!”
“கார்மேகம் ஒன்றினையே – இதுவரை
கண்டிருந்த எனையே
போர்மேகப் பேரிடிகள் – வந்துவந்து
புண்படத் தாக்குது பார்!”
“தொட்டாற் சிணுங்கிகளும் – கொல்லுதற்குத்
துப்பாக்கி தூக்குது பார்!
கட்டாந் தரைகளிலும் – கண்ணிவெடி
காவல் கிடக்குது பார்!”
“நாளும் குருதியிலே – நனைகின்ற
நாடுகள் கூடுது பார்!
வாழும் நிலைகளெலாம் – வன்முறைக்கு
வட்டி கறக்குது பார்!”
“வேதமும் சாதிகளும் – வெறிமிகு
வெங்களம் காணுது பார்!
பேதம் வகுப்பதனால் – மானுடம்
பிழைபட்டுப் போனது பார்!”
“மண்வெளி யாவதெல்லாம் – பிணங்கட்கு
மட்டும் புகலிடமா?
மண்ணின் புதல்வர்க் கெல்லாம் – உரிமை
மறுப்பது நின்றிடுமா?”
“வாழப் பிறந்தவர்முன் – எந்தவொரு
வஞ்சமும் அஞ்சுமன்றோ?
வாழப் பிறந்தவர்க்கே – என்றுமிந்த
வையகம் சொந்தமன்றோ?”
இன்னபிற நவின்றாள் – பூமியன்னை
என்னைக் கலங்கவைத்தாள்:
கண்ணீர்தனைத் துடைத்தாள் – வணங்கினேன்
கன்னியவள் மலர்த் தாள்!”
- தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

பூமிப்பந்(து) அன்றொரு நாள் – என்னிடம்
புகாருடன் வந்து நின்றாள்!
நாமிங்(கு) அவட்(கு) இழைக்கும் – தீமைகளை
நன்கு விளக்கி நின்றாள்!

“என்ன நடந்ததம்மா? – பூமாதேவி
என்னிடம் கூறிடம்மா!”
என்றதும், என்னிடம் தன் – கவலைகள்
எடுத்துச் சொல்லலுற்றாள்:

“காடு கழனியெல்லாம் – என்னுடைய
கட்டிள மேனியெல்லாம்,
கேடு மிக விளைக்கும் – ஆயுதக்
கிடங்குகள் ஆனது பார்!”

“கார்மேகம் ஒன்றினையே – இதுவரை
கண்டிருந்த எனையே
போர்மேகப் பேரிடிகள் – வந்துவந்து
புண்படத் தாக்குது பார்!”

“தொட்டாற் சிணுங்கிகளும் – கொல்லுதற்குத்
துப்பாக்கி தூக்குது பார்!
கட்டாந் தரைகளிலும் – கண்ணிவெடி
காவல் கிடக்குது பார்!”

“நாளும் குருதியிலே – நனைகின்ற
நாடுகள் கூடுது பார்!
வாழும் நிலைகளெலாம் – வன்முறைக்கு
வட்டி கறக்குது பார்!”

“வேதமும் சாதிகளும் – வெறிமிகு
வெங்களம் காணுது பார்!
பேதம் வகுப்பதனால் – மானுடம்
பிழைபட்டுப் போனது பார்!”

“மண்வெளி யாவதெல்லாம் – பிணங்கட்கு
மட்டும் புகலிடமா?
மண்ணின் புதல்வர்க் கெல்லாம் – உரிமை
மறுப்பது நின்றிடுமா?”

“வாழப் பிறந்தவர்முன் – எந்தவொரு
வஞ்சமும் அஞ்சுமன்றோ?
வாழப் பிறந்தவர்க்கே – என்றுமிந்த
வையகம் சொந்தமன்றோ?”

இன்னபிற நவின்றாள் – பூமியன்னை
என்னைக் கலங்கவைத்தாள்:
கண்ணீர்தனைத் துடைத்தாள் – வணங்கினேன்
கன்னியவள் மலர்த் தாள்!”

- தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It