அருவருப்பாகத்தான் இருக்கிறது
நான்கு நாட்களாகப் பார்க்கிறேன்
குப்பைத் தொட்டிக்கு வெளியில்
உதிரக் கொத்தோ
உதிரிமலர் அழுகலோ
தெரியவில்லை.
அப்புறப் படுத்தப்படாமலே கிடக்கிறது.
யாருக்குத்தான் பொறுப்பிருக்கிறது.

- உமா மோகன்

Pin It