கீற்றில் தேட...

sevalai madu

1.

ஆளரவமற்ற மந்தையில்
அசரீரியாய் ஒலிக்கிறது
முன்பொரு நாள்
மூதாதையர் சுழற்றிய
தாயக்கட்டைகளின் குரல்.

2.

ஆணியில் தொங்கும் சலங்கை
அசைந்து அசைந்து
அவ்வப்போது ஞாபகமூட்டும்
செத்துப்போன செவலை மாட்டை.

3.

வணங்காமுடிகளையும்
கவிழ்த்துவிடுகிறது
சவரக்காரனின் சிறுகத்தி.

- ஸ்ரீதர்பாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.