ஒரு நீள் அசௌகரியங்களுக்குப் பின்னால்
திறக்கப்பட்டிருந்த வாயிற் கதவு வழியாய்
ஓசையின்றி கசிந்து செல்கிறது
சிறைப்பட்டிருந்த காற்றொன்று
புழுதியடைந்திருந்த நிலைக் கண்ணாடி வழியான
என் பிரசன்னம்
ஒரு பேய்க்கதையில் படித்த
அகோரியை ஒத்திருந்தது
நான் பிரமையுற்றுக் கிடந்த
சில மௌனக் கூப்பாட்டுகளுக்கு நடுவே
பாத்திரங்களிலிருந்து பதறிச் சென்ற
பூனையின் பரபரப்பில்
பதைத்துக் கொண்டது மனம்
சுவரெங்கும் படர்ந்திருந்த
சுண்ணாம்புத் திட்டுக்களினூடாய்
வெவ்வேறான உருவங்களுடைத்த பிசாசுகளின்
அகோர வதனங்கள் பல்லிளித்துக் கிடந்தன
திடுமென கீழே விழந்த
என் ராட்சத நிழலின் வாயிலாய்
அனைத்து ஜந்துக்களுக்கும்
ஒரு ராட்சதனாகி விட்டிருந்தேன் நான்
சில கணங்கள் வரை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- பிரிவு: கவிதைகள்