budha 268மனைவியின் தொல்லை
தாங்க இயலாமல் நடு இரவில்
ஓடி விட்டவனாகவும்
இருக்கக் கூடும்...
புத்தன்

***
பெரும் முயற்சி செய்து
வாழ்நாட்களைப் பணயம்
வைத்து அடைந்த,
அடையப் போகிற எல்லாமே
சாவை நோக்கி
அழைத்துச் செல்கின்றன...

***
பக்கத்துக்கு, எதிர் வீட்டில்
சிநேகமாய் இருக்கத் தெரியாது,
ஆனால் என்ன,
லட்சோப லட்சம் மக்கள்
என்னைப் பின் தொடர
வேண்டும்- சமூக இணையத்தில்

Pin It