தேர்தல் வந்தது
அந்நாழிகை முதல்
பொற்பாதங்களுடன் அலைந்தனர் மக்கள்
சாதாரண மக்கள்
வாக்காளப் பெருமக்கள் ஆயினர்
மதவாத அரசியல் வாய்
மதச்சார்பற்ற இந்தியா என்றது
கோடீஸ்வர வேட்பாளர்
ஏழைப் பங்காளனாகி
கவலைபட பேசினார் வறுமையைக் குறித்து
சாதிக் கட்சித் தலைவர்
தனது வேட்பாளரை
பொது வேட்பாளர் என்றார்
தேர்தல் முடிவுகள் வெளியானது
கோடீஸ்வர வேட்பாளருக்கு நிதித்துறை
மதவத அரசியல்வாதிக்கு
சமூக நலத்துறை வழங்கப்பட
சமுதாய முன்னேற்றத்துக்கும்
ஜனநாயகத்துக்குமாய் சேர்த்து
பாராளுமன்றத்தில் பாடப்பட்டது
ஜன கண மண
- வெ.வெங்கடாசலம்
RSS feed for comments to this post