ஒவ்வொருவரின் கீழும்
ஊர்ந்து வருகிறது
ஓர் கரிய உருவம்..

செய்வதையே மீண்டும்,
மீண்டும் வந்து செய்தும்
மெலிதாகக் கசிந்து
நடப்புகளுக்கு ஏற்றாற்போல்
அடலாய் விரிவடையும்...

நடந்தேறும் எந்தவொரு
பிழையினிற்கும் அதற்கும்
இருப்பில் உள்ள உறுதிப்பத்திரம்
சில நேரங்களில் இயலாமை
காரணமாகவும்
இறுகச் செய்யப்படலாம்...
காலங்கள் நகர நகர
அவைகளின் விரிவாக்கம்
சற்றே அச்சுறுத்தும்...
அவற்றுக்கான
இரகசியங்கள் ஓர் வேற்றுலகில்
காக்கப்பட்டு
ஆர்ப்பரிப்புகள் ஓங்கியெழும்
கணத்தினில்

ஒவ்வொன்றாக கைகோர்த்து

இருள் கப்பி வானளாவும்
பிம்பமென உருவெடுக்கக் கூடும்...

அதற்குக் கீழேயும்
ஊசலாடியவாறு நிற்கும்
கரியதாய் ஓர் பிரதி..

- தேனப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It