உருவாக்கியபோதும்
ஒன்றாகத்தான் இருந்தன
களிமண்ணாக இருந்தவற்றை
கற்கள் பிரித்து சீர்படுத்தி சுட்டு ,
பின் வேக வைத்து,
வண்ணக்குழம்புகள் பூசி,
ஒன்றாகத்தான் அடைபட்டன
அந்தக் காகிதப்பெட்டிக்குள்
விலையும் அதே
ஒரு வித்தியாசமுமில்லை.
வாங்க வந்தவனும்
வேறுபாடு ஏதும்
பிரித்தறிய இயலாமல்
வாங்கிச்சென்றான்.
அதுவரை கூடவே இருந்த
கோப்பைகள்
பிரித்து வைக்கப்பட்டன.
இரண்டாவது கோப்பையாய்
டீக்கடையில்
புரியாமலே நானும்
அந்தக்கோப்பைகளை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அவையும் என்னை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- சின்னப்பயல்
- பிரிவு: கவிதைகள்