1840களில் அமெரிக்க கிருத்துவச் சபை ஒன்று சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் (Samuel Fisk Green) எனும் மருத்துவரை / பாதிரியாரை இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்ய அனுப்பி வைத்தது. தன்னுடைய குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கை போதவில்லை என்று உணர்ந்து, மேலும் சிலரை அமெரிக்காவில் இருந்து தருவித்தார். சிறிது நாள்களிலேயே அவ்வெண்ணிக்கையும் போதவில்லை என்று கண்டு கொண்ட அவர் மேலும் தொண்டர்களை வரவழைப்பதற்குப் பதிலாக, யாழ்ப்பாண மக்களிடையே மருத்துவர்களை உருவாக்கிவிட்டால், மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று நினைத்து, மருத்துவக் கல்லூரியைக் கட்டுவதற்கு உதவும்படி அவர் சார்ந்து இருந்த திருச்சபையைக் கேட்டுக் கொண்டு, கல்லூரியையும் கட்டினார். மருத்துவக் கல்லூரியைக் கட்டும் பொழுதே அதற்கு இணையாக அவர் செய்த இன்னொரு வேலை என்னவென்றால் மருத்துவ நூல்களை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டது தான்.
இலங்கை அப்பொழுது ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால் யாழ்ப்பாண மக்களுக்கு ஆங்கிலம் அறிமுகமாகியே இருந்தது. மருத்துவத் தொண்டுடன், தான் புதிதாகக் கற்ற தமிழ் மொழியில் மருத்துவப் பாடங்களை எல்லாம் மொழிபெயர்த்துச் சிரமப்பட்டுக் கொண்டு இருந்த அப்பாதிரியாரிடம், தாங்கள் ஆங்கிலத்திலேயே மருத்துவப் பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதற்குரிய பாடப் புத்தகங்களும் தயாராக இருப்பதால், அவர் மொழி பெயர்ப்பதிலும், புதிய புத்தகங்களை அச்சிடுவதிலும், சிரமம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், பணமும் செலவழிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர் தன்னுடைய பணியில் முழுமை தேவை என்றும், ஒருவர் தன் தாய்மொழியில் கற்கும் பொழுது தான், பாடத்தின் உட்பொருளை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.
மருத்துவப் பணியையும், மொழி பெயர்ப்புப் பணியையும் ஒரு சேரச் செய்ததால் அவருக்குப் பணிச் சுமை மிகுந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மிகவும் வருத்தம் அடைந்த யாழ்ப்பாண மக்கள் அவரிடம் தாங்கள் ஆங்கிலத்திலேயே பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அவர் தன் உடல் நலனைக் கவனிக்காமல் பாடுபடுவது தங்களுக்கு மனவருத்தம் அளிப்பதாகவும் கூறினர். ஆனால் அவரோ தன் ஒருவனுடைய சிரமத்தைக் குறைப்பதற்காக, எதிர்கலத்தில் அரைகுறை மருத்துவர்களை உருவாக்குவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி, தன் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்ந்தார். அவர் நிறுவிய மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வி முறையே அறிமுகப் படுத்தப்பட்டது.
தாய் மொழியில் கல்வி கற்றால் தான் அறிவு முழுமையாக வளரும் என்பது பாதிரியார் / மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீனின் கருத்து மட்டும் அல்ல. உலகம் முழுவதிலும் உள்ள கல்வியாளர்கள் இதைத் தான் வலியுறுத்துகிறார்கள். ஆனால் தமிழன் எனும் இளிச்சவாயனின் மண்டையில் மட்டும் இது உறைப்பதாகவே தெரியவில்லை. பாதிரியார் / மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் உயர் கல்வியையும் தாய்மொழியில் தான் கற்க வேண்டும் என்பதற்காக ஓய்வு ஒழிச்சல் இன்றிப் பாடு பட்டார். நம் தமிழர்களோ ஆரம்பக் கல்வியையும் தமிழ் வழியில் படிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள்.
சரி! மக்கள் தான் எது சரி எது சரியில்லை என்று புரியாமல் செயல்படுகிறார்கள் என்றால், தமிழக அரசாவது தமிழ் வழிக் கல்வியை வற்புறுத்துகிறதா என்றால், அதுவும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்கள் நலனில் அக்கறை இன்றிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்களும் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல, தமிழ் வழியில் கல்வி கற்றவர்களை ஒதுக்கி வைப்பதால், தமிழ் வழிக் கல்வி என்பது பரிதாபத்திற்கு உரிய நிலையில் தத்தளிக்கிறது.
தமிழ் மக்கள் இப்படி இருக்கிறார்களே! மற்ற மாநில மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் நம்மைப் போல் இளிச்சவாயர்களாக இல்லை. தங்கள் மாநிலங்களில் தாய் மொழியில் கல்வி கற்கிறார்கள் என்பது (தமிழர்களைப் பொறுத்த மட்டில் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தலும்) அவர்களைப் பொறுத்த மட்டில் சாதாரண விஷயமாக உள்ளது. ஆனால் புலம் பெயர் வாழ்க்கையிலும் தாய் மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வத்துடனும் உறுதியுடனும் இருப்பது பாராட்டத் தக்கதே.
சென்னை, செளகார் பேட்டைப் பகுதியில் மார்வாடிகளும், குஜராத்திகளும், பிற வட இந்தியர்களும் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இப்பள்ளிகளில் பாடங்கள் இந்தி வழியிலும் குஜராத்தி வழியிலும் தான் நடத்தப் படுகின்றன. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக நடத்தப்படுகிறது. இந்தி வழியிலும் குஜராத்தி வழியிலும் பாடங்களை நடத்துவதில் இவர்களுக்குச் சிரமங்கள் ஏற்படுகின்றன.
இவர்கள் வேற்று மாநிலங்களில் வாழ்க்கை நடத்துவதால், ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, புத்தகங்களை அச்சிட்டுக் கொடுக்கும் அளவிற்குப் போதுமானதாக இல்லை. ஒரு பாடப் புத்தகத்தை அச்சிட வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 5,000 படிகளாவது விற்பனையாக வேண்டும். ஆனால் அவ்வளவு எண்ணிக்கையில் மாணவ மாணவிகள் இல்லை என்று மோதிலால் ஃபோம்ரா சனாதன தர்ம மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.எஸ்.ஆதியப்பன் என்பவர் 6.6.2011 அன்று தெரிவித்தார்.
அப்படி என்றால் அவர்களுடைய சொந்த மாநிலங்களில் இருந்து புத்தகங்களைத் தருவிப்பது தானே என்று கேட்டதற்கு, ஒரு மாணவன் எங்கு வாழ்கிறானோ அந்த இடத்துச் சூழ்நிலையைப் பொறுத்துக் கல்வி கற்றால் தான் மற்றவர்களுடன் போட்டியிட்டு வெல்லும் திறமை ஏற்படும் என்றும், சொந்த மாநிலங்களில் இருந்து புத்தகங்களைத் தருவித்து, அந்தப் பாடத் திட்டத்தின்படி படித்தால் இரண்டு மாநிலங்களிலும் சிறந்து விளங்க முடியாமல் போய்விடும் என்றும் அவர் கூறினார்.
சரி! அப்படி என்றால் அவர்கள் என்ன தான் செய்கிறார்கள்? தமிழ் நாட்டு அரசின் பாடப் புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து இந்தியிலும் குஜராத்தியிலும் மொழி பெயர்த்து, கணினியில் தட்டச்சு செய்கிறார்கள். அதிலிருந்து ஒரு படியை அச்செடுத்து, தேவையான எண்ணிக்கையில் நகல் (Xerox) எடுக்கிறார்கள். பின் அதைப் புத்தகமாகத் தைத்து அதை வைத்துக் கொண்டு படிக்கிறார்கள்.
தாய் மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமங்களை ஏற்றுக் கொள்ளும் மக்கள் நம் கண் முன்னால் நமக்கு அருகிலேயே இருக்கிறார்கள். ஆனால் நம் இளிச்சவாய்த் தமிழர்களோ தாய் மொழிக் கல்வியைத் தவிப்பதற்காக, வலியப் போயத் தேவை இல்லாத சிரம்ங்களை ஏற்றுக் கொள்கின்றனர். அது மட்டும் அல்ல; தமிழ் வழிக் கல்வி என்பதைப் பற்றி விவாதிப்பதையே மரியாதைக் குறைவாக நினைக்கின்றனர்.
மிகுந்த சிரமப்பட்டு, சிலரிடம் வலுக்கட்டாயமாக விவாதம் செய்த பொழுது, ஆங்கில வழிக் கல்வியிலும் எல்லாம் புரியத் தான் செய்கிறது என்றும், தமிழில் தான் புரியும் என்று கூறுவது வெறித்தனமான (Fanatic) வாதம் என்றும் கூறினர். ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கொட்டை வெந்தால் சரிதான் என்பது, நல்ல சட்டிகள் கையிருப்பில் இல்லாத பொழுது செய்யும் வாதமாகத் தான் இருக்க முடியும். நல்ல சட்டியில் கொழுக்கொட்டை சுடும் பொழுது எரிபொருள் செலவும் குறைவாக இருக்கும்; கை சுடாமல் பாதுகாப்பாகவும் இருக்கும்; கொழுக்கொட்டை விரைவாகவும் வேகும்; சுவையும் முழுமையாக இருக்கும். ஓட்டைச் சட்டியில் இவை அனைத்திலும் குறைபாடுகள் இருக்கும்.
அதே போல் பிற மொழிவழியில் கல்வி கற்போரின் அறிவுத் திறன் வேலை செய்வதற்கும், வாழ்க்கை நடத்துவதற்கும் போதிய அளவு இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் அவனே தாய் மொழியில் கற்றிருந்தால் இதைவிட அறிவுத் திறன் மிகுந்து விளங்கி இருக்க முடியும். அதனால் தான் சென்னையில் வாழும் வட இந்தியர்கள், தாய் மொழிகளில் பாடப் பத்தகங்கள் கிடைக்கவில்லை என்றாலும், நகல் எடுத்தாவது தாய் மொழிகளிலேயே படிக்க முற்படுகின்றனர்.
அரைகுறை அறிவோடு மக்களுக்குச் சேவை செய்யக் கூடாது என்ற கராணத்தினால் தான், பாதிரியார் / மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் ஓய்வு ஒழிச்சல் இன்றி ஆங்கில மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் வழியில் மருத்துவக் கல்வியை அளித்தார்.
இவ்வளவு விவரங்களையும் கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தாலும், தமிழ் வழிக் கல்வி வேண்டாம்; ஆங்கில வழிக் கல்வி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் இளிச்சவாயர்களை என்ன செய்வது?
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கட்டுரைகள்
அதோடு அன்றி, தனி மனிதர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு த் தனிமைப் பட்டுப் போக வேண்டும் என்று கூறவில்லை. இதை ஒரு இயக்கமாக வளர்த்தெடுத்து. வென்றெடுக்க வேண்டும். தங்கள் அறிவுத் திறன் முழுமையாக வளராவிட்டாலும் பரவாயில்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கல்வி பெறுவதில் உள்ள தடைகளை மேலும் இறுக்க வேண்டும் (அதன் மூலம் அவர்கள் தங்களுக்குப் போட்டியாக வருவது தவிர்க்கப்பட வேண்டும்) என்ற எண்ணம் உள்ள கயவர்கள் தான் தாய் மொழி வழிக் கல்வியின் அவசியத்தைப் புரிநது கொள்ள மறுக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளத் துப்பு இல்லாத தமிழன் எனும் இளிச்சவாயர்கள் கசாப்புக் கடைக்காரனை நம்பிப் பின்னால் போகும் ஆடுகள் போல் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்
(இதை நன்கு விளக்கும் "கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை" என்ற ஒரு ஆவணத் திரைப்படத்தை, தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் வெளியிட்டு உள்ளது. ஒரு வெற்றிகரமான வணிகத் திரைப்படம் எவ்வளவு விறுவிறுப்பாக இருக்குமோ, அவ்வளவு விறுவிறுப்பாக இதன் இயக்குநர் வினோத்குமார் (தொடர்பு எண் 9994262666) படைத்து உள்ளார்.)
பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் சொல்லியிருக்கிற ார். என் வறுமையை போக்க ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தான் தேவை என்றால் அந்த மொழிகளை கற்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை, ஆங்கிலத்தில் கற்றதால் நான் எதையும் இழக்கவில்லை.
இன்று தமிழ் என்ற மொழி அரசியல்வாதிகளுக ்கும் தீவிரவாதிகளுக்க ும் இனவெறியை தூண்டி விடுபவர்களுக்கு மட்டுமே வாழ்வு கொடுத்து கொண்டு இருக்கிறது ஆனால் அந்த அரசியல்வாதிகள் கூட தங்கள் பேரன்கள் பிள்ளைகளை CBSE பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள் (உதாரணம் வைகோ, கருணாநிதி, ராமதாஸ் மேலும் பலர்), சாதாரண மக்களுக்கு இன்று தமிழால் எந்த பலனும் இல்லை என்பது தான் நிதர்சன உண்மை இன்று தமிழ் தமிழ் என்று பேசிய அரசியல்வாதியின் தொலைகாட்சி நிறுவனத்தில் சேர்வதற்கு கூட ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒன்று தெரியும்மா நீங்கள் பெருமையாக பேசும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழே தெரியாமல் வளர்த்து வருக்கிறார்கள், அவர்கள் பிள்ளைகள் தமிழில் ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை கனடாவில் நான் பார்த்த பல இலங்கை தமிழ் குடும்பங்களில் இது தான் நிலை.
மணிகண்டன் தாய்மொழி எதுவோ அதில் படியுங்கள் !!!! கட்டுரை எழுதியவரை அரசியல்வாதி என்று பார்க்கவேண்டாம் .
தமிழ் தமிழன் என்ற வார்த்தை எங்கே எல்லாம் பயன்படுத்தபடுகி றது பாருங்கள்
ராஜீவ் காந்தியோடு சேர்த்து தமிழக மக்களை கொன்றவர்களை தமிழன் என்பதால் விடுவிக்க வேண்டும் என்கிறார்கள், முன்னால் முதலமைச்சர் கருணாநிதி தமிழ் தீவிரவாதம் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே என்று சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வக்காலத்து வாங்கினார். பக்கத்து நாட்டில் தமிழ் தமிழன் என்று சொல்லி ஆயிரகணக்கான மக்களை காவு கொடுத்தார்கள்.. .
என் பிள்ளைகளுக்கு நிச்சயம் நான் தமிழ் கற்றுக்கொடுக்க போவதில்லை. இப்படிப்பட்ட தமிழே வேண்டாம் சார், அப்படி உங்களுக்கு உண்மையில் தமிழ் மீது பற்று இருந்தால் முதலில் மனிதத்தன்மையை வளருங்கள் தமிழை தீவிரவாதிகளிடம் இருந்தும் இனவெறியர்களிடம் இருந்து மீட்டு வாருங்கள் பிறகு தாய் மொழி கல்வியை பற்றி வாய் கிழிய பேசுங்கள்.
வறுமையைப் போக்க என்று இல்லை. ஆங்கிலம் ஹிந்தி என்று இல்லை. பிற மொழிகளைக் கற்கக் கூடாது என்று எங்குமே சொல்லாத போது அப்படிச் சொன்னதாக நினைத்தால் நீங்கள் ஏதோ முன் அனுமானம் செய்து அதுவும் தவறான முன் அனுமானம் செய்து கொள்கிறீர்கள் என்று தான் பொருள்.
ஆங்கிலத்தில் கற்றதால் நான் எதையும் இழக்கவில்லை.
இல்லை நண்பரே! உண்மையில் நீங்கள் உங்கள் அறிவு மலர்ச்சி முழுமை அடையவில்லை என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். ஒரு வேளை நீங்கள் பார்ப்பனராக இருக்கலாம். (அல்லது கருணாநிதி, வைக்கோ, இராம்தாஸ் போன்று பார்ப்பனர்களின் தீவிர அடிமையாக இருக்கலாம்) உங்கள் அறிவு முழு மலர்ச்சி அடைவதைவிட, காலம் காலமாக கல்விக் களத்தில் தடம் பதிக்க மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், அதில் புகுந்து உங்களுடன் போட்டிக்கு வந்து, அவர்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்பது வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சமாக இருக்கலாம், ஆகவே நீங்கள் அப்படிக் கூறுகிறீர்கள். சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் தன் உடல் நலனையும் கெடுத்துக் கொண்டு மருத்துவப் பாடங்கள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்தார் என்றால், உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களும் தாய் மொழி வழிக் கல்வியைத் தான் ஆதரிக்கிறார்கள் என்றால், தாய் மொழி வழிக் கல்வியின் பயனை உணர்ந்து தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இன்று தமிழ் என்ற மொழி அரசியல்வாதிகளுக ்கும் தீவிரவாதிகளுக்க ும் இனவெறியை தூண்டி விடுபவர்களுக்கு மட்டுமே வாழ்வு கொடுத்து கொண்டு இருக்கிறது
அதை மாற்ற வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை?
ஆனால் அந்த அரசியல்வாதிகள் கூட தங்கள் பேரன்கள் பிள்ளைகளை CBSE பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள் (உதாரணம் வைகோ, கருணாநிதி, ராமதாஸ் மேலும் பலர்), சாதாரண மக்களுக்கு இன்று தமிழால் எந்த பலனும் இல்லை என்பது தான் நிதர்சன உண்மை இன்று தமிழ் தமிழ் என்று பேசிய அரசியல்வாதியின் தொலைகாட்சி நிறுவனத்தில் சேர்வதற்கு கூட ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்.
eநீங்கள் பார்ப்பனர்களிடம ் சோரம் போனவர்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். மக்களைப் பற்றியும் நல்ல கல்வியைப் பற்றியும் பேசுங்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியும்மா நீங்கள் பெருமையாக பேசும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழே தெரியாமல் வளர்த்து வருக்கிறார்கள், அவர்கள் பிள்ளைகள் தமிழில் ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை கனடாவில் நான் பார்த்த பல இலங்கை தமிழ் குடும்பங்களில் இது தான் நிலை.
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? தாய் மொழி வழிக் கல்வி கூடாது என்றா? உண்மையில் உங்கள் கருத்து அதுவாக இருந்தால் அதற்காக ஒரு இயக்கத்தை நிறுவி வளர்த்து எடுங்களேன்! உலகக் கல்வியாளர்கள் அதை வரவேற்கிறார்களா என்று பார்ப்பபோம்.
எனக்கு தமிழ் தமிழன் என்று சொன்னாலே இப்போது எரிச்சலாக இருக்கிறது அழகான தமிழை தற்போது இனவெறிக்கும் தீவிரவாததிர்க்க ும் தான் பயன்படுத்துகிறா ர்கள். தமிழை இப்படி தீவிரவாதிகளும் இனவெறியர்களும் தவறாக பயன்படுத்துகிறா ர்களே என்று தமிழ் மீது அக்கறை உள்ள ஒருவர் கூட கவலைப்படவில்லை என்பது உண்மையில் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும ் வேந்தனையாகவும் இருக்கிறது. தமிழ் மீது உண்மையான அக்கறை உள்ள ஒருவர் கூடவா தமிழகத்தில் இல்லை. என் பார்வையில் தமிழ் மீது அக்கறை இருப்பது போல் பேசுபர்கள் எல்லாம் வெறும் நடிப்பிற்காக அல்லது இந்த தீவிரவாத கூட்டத்தின் ஒருவராகவே தெரிகிறார், தமிழ் தமிழன் மீது தற்போது யாருக்குமே அக்கறை இல்லை என்பது நிதர்சன உண்மை.
உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கும் தமிழர்களை மாற்றி நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?
தமிழ் தமிழன் என்ற வார்த்தை எங்கே எல்லாம் பயன்படுத்தபடுகி றது பாருங்கள்
ராஜீவ் காந்தியோடு சேர்த்து தமிழக மக்களை கொன்றவர்களை தமிழன் என்பதால் விடுவிக்க வேண்டும் என்கிறார்கள்,
நண்பரே! ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் தமிழர்கள் என்பதால் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை விட்டு விடுங்கள். இதில் விசாரணையே சரியாக நடக்கவில்லை என்றும், பதவில் இருந்த போது தங்கள் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கூறுவதை நினைத்துப் பாருங்கள். குற்றங்கள் சரியாகவே விசாரிக்கப்படாம ல் கொடுமையான தண்டனையை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதால் தான் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். ஊடகங்கள் உண்மையைச் சரியாகப் பேசுபவர்களுக்கு வாய்ப்பை அளிக்காமல் இருப்பதால் பெரும்பான்மை மக்களுக்கு இது தெரியாமல் / தெரிவிக்கப்படாம ல் இருக்கிறது.
அரசியல் கொலைகளில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்களா? காந்தியைக் கொல்லப் பெருந்திட்டம் (Master Plan) தீட்டிய வீர் சவார்க்கர் விசாரிக்கப்படவே இல்லை. காந்தியைக் கொல்லப் பல காலமாக முயன்று கொண்டு இருந்த கோட்சேயால் காந்தியை நெருங்க முடியாமலேயே இருந்தது. ஆனால் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் சென்னை இராஜதானியில் இட ஒதுக்கீடு அமல் படுத்தியதைப் பற்றி காந்தியிடம் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் புகார் செய்த போது அவர் அழைத்து விசாரித்தார். ஓமந்தூராரின் விளக்கத்தை மறுக்க முடியாத காந்தி "அவர் சொல்வது சரி தானே?" என்று கேட்ட பின், கோட்சேக்கு காந்தியை நெருங்க வழி கிடைத்தது. அதற்கு உதவிய தமிழ்ப் பார்ப்பனர்களும் விசாரணை வளையத்திற்குள் வரவே இல்லை. இதே போல் தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கும் சரியாக விசாரிக்கப் படவில்லை.
முன்னால் முதலமைச்சர் கருணாநிதி தமிழ் தீவிரவாதம் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே என்று சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வக்காலத்து வாங்கினார். பக்கத்து நாட்டில் தமிழ் தமிழன் என்று சொல்லி ஆயிரகணக்கான மக்களை காவு கொடுத்தார்கள்.. .
கருணாநிதி பார்ப்பனர்களின் அடிமை. அவர் கூறுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். (நீங்கள் பார்ப்பனராக இருக்கும் பட்சத்தில், பெரியாரின் கருத்துகள் உயிரோடு இருக்கும் வரையில் தமிழ் மக்கள் கருணாநிதியைத் தான் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்; அப்பொழுது தான் பார்ப்பன நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று விரும்பலாம். அது வேறு விஷயம்)
என் பிள்ளைகளுக்கு நிச்சயம் நான் தமிழ் கற்றுக்கொடுக்க போவதில்லை. இப்படிப்பட்ட தமிழே வேண்டாம் சார்,
"நான் கெடுகிறேன்; பந்தயம் எவ்வளவு?" என்று கேட்போரிடம் பந்தயம் கட்ட முடியாது.
அப்படி உங்களுக்கு உண்மையில் தமிழ் மீது பற்று இருந்தால் முதலில் மனிதத்தன்மையை வளருங்கள் தமிழை தீவிரவாதிகளிடம் இருந்தும் இனவெறியர்களிடம் இருந்து மீட்டு வாருங்கள் பிறகு தாய் மொழி கல்வியை பற்றி வாய் கிழிய பேசுங்கள்.
தாய்மொழி வழிக் கல்வியும் அதன் ஒரு பகுதி தானே?
நான் பிராமணன் இல்லை ஆனால் பிராமணனை வெறுப்பவன் அல்ல எல்லோரையும் நேசிக்க வேண்டும் அன்பு பாராட்ட வேண்டும் என்று நினைப்பவன் நான் (தீவிரவாதிகள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள், மதவெறியர்களை நான் வெறுக்கிறேன் அவர்கள் எல்லாம் மனித இனவிரோதிகலாகவே நான் பார்க்கிறேன்).
ஆனால் தமிழ் நாட்டில் அரசு பள்ளியில் ஒரு ஏழை மாணவனுக்கு ஹிந்தி கற்க வழி உண்டா சரி அப்படியே ஏழை மாணவனுக்காக தமிழக அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்கலாம் என்ற நிலை வந்தால் உங்களை போன்ற ஆட்கள் உடனே மத்திய அரசின் கட்டாய ஹிந்தி திணிப்பு என்று பொய்களை பரப்பி ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி அந்த ஏழை மாணவனின் வாய்ப்பை நீங்கள் நாசம் செய்து விட்டு தான் மறு வேலை பார்ப்பிர்கள்.
வேண்டாம் சார் தாய் மொழி கல்வி வெங்காய மொழி கல்வி என்று சொல்லி என் வேதனையை கிளப்பாதிர்கள்.
ஒரு மாணவனின் வாழ்கை எதை படித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்ய வேண்டியது பெற்றோர்கள், அவர்களுக்கே மாணவனின் வாழ்வை முடிவு செய்வதற்கு முழு அதிகாரம் உண்டு. அரசு என்பது அந்த பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை நேர்மையாக உள்நோக்கம் இல்லாமல் ஏற்ப்பாடு செய்வது மட்டுமே. தற்போதைய நிலையில் என் பார்வையில் CBSE கல்வி தான் மிக தரமானதாக இருக்கிறது, அம்மாதிரியான ஒரு கல்வி திட்டம் தான் தமிழகத்திற்கு தேவை, அரசியல்வாதிகளுக ்கு இது நன்றாகவே தெரியும் ஆனாலும் கொண்டு வர மாட்டார்கள் கேட்டால் மொழி போர் வெங்காய போர் என்று சொல்லி மக்களை மேலும் மேலும் பின்தள்ளவே பார்ப்பார்கள்.,
தாங்கள் மட்டுமே சொகுசாக வாழ வேண்டும் மக்கள் எக்கேடு கேட்டாலும் கவலையில்லை என்ற சுயநலன் தான் தற்போது தமிழக அரசியலில் தலை தூக்கி நிற்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம் மக்களின் முன்னேற்றத்திற் கு கல்வி தரத்தை மேம்படுத்த ஒரு நாயும் முயற்சி செய்ய போவதில்லை. உங்களை போன்ற ஆட்கள் சந்தடி சாக்கில் புலிகளின் பினாமிகளாக செயல்பட்டு மேலும் குட்டையை குழுப்புவிர்கள் . தமிழ் தமிழன் என்று பேசுவதாலேயே உங்களின் உள்நோக்கத்தின் மீது சந்தேகபடுகிறேன் .
இதெல்லாம் உங்களை போன்றவர்களுக்கு புரிய போவதில்லை.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உங்களுக்கு எல்லாமே தவறாகத் தோன்றுகிறது.
நான் பிராமணன் இல்லை ஆனால் பிராமணனை வெறுப்பவன் அல்ல எல்லோரையும் நேசிக்க வேண்டும் அன்பு பாராட்ட வேண்டும் என்று நினைப்பவன் நான் (தீவிரவாதிகள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள், மதவெறியர்களை நான் வெறுக்கிறேன் அவர்கள் எல்லாம் மனித இனவிரோதிகலாகவே நான் பார்க்கிறேன்).
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று சொல்லும் போது தனிப்பட்ட பார்ப்பனர்களை எதிர்ப்பதாகக் திசை திருப்பி விடுவது பார்ப்பன உத்தியே. அறிவுத் திறன் என்பது அனைத்து வகுப்பு மக்களுக்கும் பொதுவாக இருக்கையில், அனைத்து இடங்களிலும் அனைத்து நிலைகளிலும் அனைத்து வகுப்பு மக்களும் இருக்க முடிய வேண்டும் அல்லவா? அப்படி இல்லாமல் பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் நிரம்பி வழிவதும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ் நிலை வேலைகளையே செய்ய நேரிடுவதும் ஏன்? இதை மாற்ற வேண்டும் என்று சொன்னால், அதைப் பற்றிப் பேசாமல் எல்லேரையும் நேசிக்க வேண்டும் என்று திசை திருப்பி விடுவது (நீங்கள் பார்ப்பனராக இல்லாத பட்சத்தில்) தவறு என்று தோன்றவே இல்லையா? கீழ் கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டு ள்ள கட்டுரையை நீங்கள் படித்துப் பார்ப்பது நலம்.
keetru.com/.../...
நீங்கள் கேரளா அரசு பள்ளிக்கு சென்றால் அங்கே ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் கற்க வழி உண்டு (கேரளாவில் பல அரசு தமிழ் பள்ளிகளும் உண்டு) நீங்கள் கர்நாடக சென்றால் அங்கே ஆங்கிலம் ஹிந்தி கன்னடம் கற்க வழி உண்டு அதே போல் நீங்கள் ஆந்திரா சென்றால் அங்கே ஆங்கிலம் ஹிந்தி தெலுங்கு கற்க வழி உண்டு.
ஆனால் தமிழ் நாட்டில் அரசு பள்ளியில் ஒரு ஏழை மாணவனுக்கு ஹிந்தி கற்க வழி உண்டா சரி அப்படியே ஏழை மாணவனுக்காக தமிழக அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்கலாம் என்ற நிலை வந்தால் உங்களை போன்ற ஆட்கள் உடனே மத்திய அரசின் கட்டாய ஹிந்தி திணிப்பு என்று பொய்களை பரப்பி ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி அந்த ஏழை மாணவனின் வாய்ப்பை நீங்கள் நாசம் செய்து விட்டு தான் மறு வேலை பார்ப்பிர்கள்.
தமிழ் நாட்டின் மொழிக் கொள்கைக்கான வரலாற்றுக் காரணத்தை நீங்கள் அறியவே மாட்டீர்களா? சரி! ஹிந்திக்கு அளிக்க வேண்டிய இடம் என்று அங்கலாய்க்கும் நீங்கள் பிற மொழிகளுக்கும் அத்தகைய இடம் தர வேண்டும் என்று ஏன் துடிப்பது இல்லை? ஹிந்திக்குச் சலுகைகளை அளிக்க முன் வரும் அரசு மற்ற மொழிகளுக்கு ஏன் அதை அளிப்பது இல்லை என்று ஏன் நீங்கள் கேட்பது இல்லை? இந்நாட்டின் இரண்டாம் தரக் குடிமகன் என்று நீங்களே அடிமை முறி எழுதிக் கொடுக்கிறீர்கள ா? செஞ்சீனம் அமைந்த போது மாவோவின் தோழர்கள் சிலர் நிர்வாக வசதியை முன்னிட்டு அந்நாட்டில்அதிச மாகப் பேசப்படும் (சொல்லப் போனால் உலகிலேயே அதிகமாகப் பேசப்படும்) மாண்டரின் மொழியைஅனைவரும் பயில வேண்டும் என யோசனை கூறினார்களாம். மற்ற மொழி மக்கள் அடிமைகள் அல்ல என்று மாவோ விடை அளித்தாராம்.
வேண்டாம் சார் தாய் மொழி கல்வி வெங்காய மொழி கல்வி என்று சொல்லி என் வேதனையை கிளப்பாதிர்கள்.
சுதந்திர உணர்வு உள்ளவர்களுக்கு இவை புரியும். மற்றவர்களுக்கு ஆதிக்க வர்க்கத்திற்கு அடிபணியாதவர்களை க் கண்டால் அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் ஏறும். அந்த அச்சத்தை அவர்கள் வேதனை என்று சொல்லிக் கொள்வார்கள்.
ஒரு மாணவனின் வாழ்கை எதை படித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்ய வேண்டியது பெற்றோர்கள், அவர்களுக்கே மாணவனின் வாழ்வை முடிவு செய்வதற்கு முழு அதிகாரம் உண்டு.
ஒருவன் தன் அறிவு முழு வளர்ச்சி பெறத் தான் விரும்புவான். அது தாய் மொழி வழிக் கல்வியால் தான் முடியும் என்பது அறிவியல் முடிவு.
அரசு என்பது அந்த பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை நேர்மையாக உள்நோக்கம் இல்லாமல் ஏற்ப்பாடு செய்வது மட்டுமே
படிப்பறிவு இல்லாத பலர் படிக்காமல் இருப்பதே தங்களுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள் . அதற்காக அவர்கள் படிக்காமல் இருக்கட்டும் என்று அரசு விட்டு விட வேண்டும் என்று கூறுவதைப் போல் தான் உங்கள் வாதம் உள்ளது.
. தற்போதைய நிலையில் என் பார்வையில் CBSE கல்வி தான் மிக தரமானதாக இருக்கிறது, அம்மாதிரியான ஒரு கல்வி திட்டம் தான் தமிழகத்திற்கு தேவை, அரசியல்வாதிகளுக ்கு இது நன்றாகவே தெரியும் ஆனாலும் கொண்டு வர மாட்டார்கள் கேட்டால் மொழி போர் வெங்காய போர் என்று சொல்லி மக்களை மேலும் மேலும் பின்தள்ளவே பார்ப்பார்கள்.,
நண்பரே! சமச்சீர் கல்வி அமலான பின் அதைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் CBSE திட்டதில் படிப்பவர்களை விட, சமச்சீர் கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் தான் சிந்தனைத் திறன் அதிகம் உள்ளது என்று தெரிய வந்து உள்ளது.
தாங்கள் மட்டுமே சொகுசாக வாழ வேண்டும் மக்கள் எக்கேடு கேட்டாலும் கவலையில்லை என்ற சுயநலன் தான் தற்போது தமிழக அரசியலில் தலை தூக்கி நிற்கிறது.
உங்கள் குற்றச்சாட்டு பார்ப்பனர்களுக் கும் (கருணாநிதி, வைக்கோ, இராம்தாஸ் போன்ற) பார்ப்பன அடிமைகளுக்கும் பொருந்தும்.
ஒன்று மட்டும் நிச்சயம் மக்களின் முன்னேற்றத்திற் கு கல்வி தரத்தை மேம்படுத்த ஒரு நாயும் முயற்சி செய்ய போவதில்லை.
நிச்சயமாக நீங்கள் அதில் ஒருவராக இருப்பீர்கள் அல்லவா?
உங்களை போன்ற ஆட்கள் சந்தடி சாக்கில் புலிகளின் பினாமிகளாக செயல்பட்டு மேலும் குட்டையை குழுப்புவிர்கள் . தமிழ் தமிழன் என்று பேசுவதாலேயே உங்களின் உள்நோக்கத்தின் மீது சந்தேகபடுகிறேன்
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
ஒரு பரந்த விசாலமான மனநிலை இல்லை.\
யாருக்கு?
சமஸ்கிரதம் மற்றும் பார்ப்பன வெறுப்பு உங்களை போன்றவர்களுக்கு ஒரு கட்டாயம்,
ஆம். நாங்கள் சுரண்டல் ஆதிக்கத்தை என்றைக்குமே எதிர்க்கிறோம்.
நீங்கள் மறந்த விஷயம் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு சமஸ்கிரதம் தான் ஒட்டு மொத்த இந்தியாவின் இணைப்பு மொழியாக இருந்தது,
இல்லை நண்பரே! சமஸ்கிருதம் என்றைக்குமே இணைப்பு மொழியாக என்ன, மக்கள் மொழியாகவே இருந்தது இல்லை. அது சுரண்டல் ஆதிக்க மொழியாக மட்டுமே இருந்தது. அதனால் தான் புத்தர் தன் போதனைகளை அம்மொழியில் செய்யமாமல் அவர் காலத்தில் அவர் பகுதியில் பழக்கத்தில் இருந்த பாலி மொழியில் தான் போதித்தார்.
சேர சோழ பல்லவ பாண்டியர்கள் தங்களின் அரசு ஆணைகளை இரண்டு மொழிகளில் வெளியிட்டார்கள் ஒன்று தமிழ் இன்னொன்று சமஸ்கிரதம்.
நண்பரே! சேர, சோழ, பாண்டியர்கள் பார்ப்பனர்களுக் கு அடிமைகளாக இருந்தது உண்மை தான். ஆனால் அரசாணைகளை எல்லாம் சமஸ்கிருதத்தில் வெளியிட்டார்கள் என்பது தங்களுடைய உண்மை கலப்பில்லாத கற்பனை.
இதெல்லாம் உங்களை போன்றவர்களுக்கு புரிய போவதில்லை.
நண்பரே! நீங்கள் என்னுடைய பதில்களை முழுமையாக உள்வாங்க மறுக்கிறீர்கள். நான் பதிலளித்த பல விஷயங்களை நீங்கள் கணக்கில் கொள்ளாமலேயே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். அது தங்களுடைய புரிதல் ஆற்றல் குறைவினாலா அல்லது தவறான முன் அனுமானங்களை மூர்க்கமாகப் பிடித்துக் கொண்டு இருப்பதனாலா? நீங்களே யோசித்துப் பார்க்கவும். உங்களிடம் உள்ள குறையை மற்றவர்களிடம் இருப்பதாகக் கூறிப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க வேண்டாம்.
பொய்களை கற்பனை கதைகளை பேசுவதற்கு நான் ஒன்றும் விடுதலை புலிகள் ஆதரவாளன் அல்ல.
சமஸ்கிருதம் ஆதிக்க மொழியாகத் தான் இருந்ததே ஒழிய, என்றைக்குமே மக்கள் மொழியாக இருந்தது இல்லை என்றும், ஆகவே புத்தர் தன் போதனைகளைப் பாலி மொழியில் செய்தார் என்றும் கூறி இருக்கிறேனே, அதை உள்வாங்க வேண்டும் என்று தோன்றவில்லையா? அது மட்டும் அல்ல. இப்பின்னூட்டங்க ளில் இன்னும் நிறைய விஷயங்களைக் கூறி இருக்கிறேனே, அதை நீங்கள் உள்வாங்கவில்லை என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறேனே, அவற்றை உள்வாங்க வேண்டும் என்று தோன்றவில்லையா? தயவு செய்து இக்கட்டுரையையும ், பின்னூட்டங்களைய ும், அதில் குறிப்பிட்டுள்ள கட்டுரையையும் பொறுமையாகப் படியுங்கள்; புரிந்து கொள்ள முயலுங்கள். அதன் பேரில் உங்களுக்கு ஐயம் ஏற்பட்டாலும், விமர்சனம் செய்தாலும் அவற்றிற்கும் விடை அளிக்கிறேன். தயவு செய்து சிறு குழந்தையைப் போல் பேச வேண்டாம்.
RSS feed for comments to this post