இன்றைய நாட்களில், மற்ற எல்லா ஊடகங்களைக் காட்டிலும், ஃபேஸ்புக் அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பதற்கும் பிரபலமாகியிருப்பதற்கும் அடிப்படையில் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு கருத்து வெளிப்படுத்தப்படுகிற வெளியில், அதே அளவு சுதந்திரத்துடனும் அதே அளவு விரிவான தளத்திலும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ ஒரு கருத்தை வெளிப்படுத்த இருக்கிற வாய்ப்புதான்.
ஆனால், ஒரு திரைப்படமோ, தொலைக்காட்சியோ, வானொலியோ, நாளிதழோ, விளம்பரங்களோ, சுவர் எழுத்துக்களோ, ஃபிளக்ஸ் போர்டுகளோ அவற்றின் மீதான கருத்துக்களை சம்மந்தப்பட்ட ஊடகங்கள் சந்திக்கிற வெகுமக்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லாது என்பது நாம் அறிந்ததாகும். ஒரு ஃபிளக்ஸ் போர்டு ஒரு நகரில் வாழும் இலட்சக்கணக்கான மக்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு செல்கிறது. ஆனால் அதன் மீதான நமது கருத்தை, நாம் சந்திக்கிற வெகு சிலரிடத்தில் மாத்திரமே கொண்டு செல்ல முடிகிறது.
மேற்கண்ட ஊடகங்களின் வலிமையை நாம் சாதாரணமாக குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஒருமுறை உலகறிந்த சமூக சிந்தனையாளர் அருந்ததிராய் அவர்களிடம் உள்நாட்டு பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எது? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, அவர் நீட்டி முழக்காமல், எளிமையாகச் சொன்ன பதில், "நடுத்தர மக்களின் பொதுப்புத்தி" என்பதுதான். அந்த நடுத்தர மக்களின் பொதுப்புத்தியை உருவாக்குகிற வேலையை மேற்கண்ட ஊடகங்கள் தான் உருவாக்குகின்றன என்பதும் மிகையாகாது.
இத்தகைய வலிமையான ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு வழிப் பாதையாகத்தான் இருக்கின்றனவே தவிர, ஒரு சாதாரண குடிமகனின் கருத்தை சொல்ல வாய்ப்புகளை உருவாக்குகிற வெளியை மறுக்கின்றன.
விஸ்வரூபம் திரைப்படத்தையே எடுத்திக் கொண்டாலும், ஏற்கனவே இச்சமூகத்தின் பொதுப்புத்தியில் ஊறிப் போயிருக்கிற இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்கிற எண்ணத்தீயில் பெட்ரோல் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்கிற வேலையைத்தான் செய்கின்றது. தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா உமர் கோயம்புத்தூரிலும், மதுரையிலும் இருந்தார் என்று முடிவின் முடிவாக அறிவிக்கிற படத்தில், அப்படி இல்லை என்று சொல்லுகிற வாய்ப்பை இஸ்லாமியச் சமூகத்துக்கு அந்தத் திரைப்படம் வழங்குமா? இல்லை 100 கோடி ரூபாய் செலவழித்து ஒரு திரைப்படத்தை எடுத்து, கருத்து சொல்லுகிற வலிமையைத்தான் இஸ்லாமிய சமூகத்திற்கு இந்நாடு வழங்கியிருக்கிறதா? 100 கோடி ரூபாய் பணத்தைக்கூட பிச்சை எடுத்தாவது புரட்டி விடுவதாக வைத்துக் கொள்வோம். 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கிற ஒரு திரைப்படம், 'உலக நாயகனை' கதாநாயகனாகக் கொண்டிருக்கிற விஸ்வரூபம் திரைப்படத்துக்கு கிடைத்த ஊடக வலிமையைப் பெற முடியுமா?
'உன்னைப்போல் ஒருவன்' படத்திலும் கூட இப்படித்தான். பெஸ்ட் பேக்கரியில் தனது மூன்றாவது மனைவி இறந்து போன கோபத்தில் கோயம்புத்தூரில் குண்டுவைத்ததாக ஒரு இஸ்லாமிய கதாபாத்திரம் பேசுகிறது. பெஸ்ட் பேக்கரி எரிந்தது 2002ல், கோயம்புத்தூரில் குண்டு வெடித்தது 1998ல். இந்த உண்மையைச் சொல்வதற்கு அந்தத் திரைப்படம் வாய்ப்புகளை உருவாக்கித் தருமா? இஸ்லாமியர்கள் சர்வசாதாரணமாக மூன்று, நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியும் என்கிற எள்ளலான பார்வைதானே வசனத்தில் தொக்கி நிற்கிறது! மகளுக்காகவோ, மகனுக்காகவோ, தாய் தந்தைக்காகவோ ஒரு இஸ்லாமியர் கவலைப்பட மாட்டாரா என்பது போன்ற கேள்விகளை எழுப்ப வாய்ப்பு இல்லாத ஊடகம் கருத்துச் சுதந்திரத்தை உரிமையாகக் கோர முடியுமா?
இப்படித்தான், கடந்த ஆண்டு மத்திய கல்வி வாரிய பாடப்புத்தகத்தில், 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தின் 18ம் பக்கத்தில், புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு நத்தையின் மீது அமர்ந்து போவது போலவும், அவரை நேரு சாட்டையால் அடிப்பது போலவும் ஒரு கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது. எந்தப் பொருள் குறித்தும் கேலிச்சித்திரம் வரைய சுதந்திரம் வேண்டும் என்பதுதான் நமது கருத்து. ஆனால், ஒரு முடிவின் முடிவாக, விவாதத்துக்கு வழிவகை இல்லாத எதிர்காலத் தலைமுறையின் மூளைகளில் ஒரு நச்சுக்கருத்தை விதைக்கிற வேலையை எப்படி கருத்துச் சுதந்திரமாக எடுத்துக்கொள்ள முடியும்?
ஆக, கருத்துச் சுதந்திரம் என்பது, அடிப்படை உரிமைதான். ஆனால் அது மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் தருகிற மனப்பான்மை கொண்டவர்களுக்குத்தான் அது பூரண உரிமையாகும். அதனால், விஸ்வரூபம் திரைப்படம் எடுத்தவர்கள் எப்படி கருத்து சுதந்திரப் போராளிகளாக முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையானது விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்ப்பது கருத்துச் சுதந்திரத்தை எதிர்ப்பதாகாது என்பதுவும்.
கருத்துக்களை உருவாக்குகிற திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ், தொலைக்காட்சி விளம்பரங்கள், ஃபிளக்ஸ் போர்டுகள், சுவர் விளம்பரங்கள் என்பதெல்லாம் சனநாயக வழியிலானது என்று கூறலாம். ஆனால், ஒவ்வொரு சின்னச்சின்ன கருத்துக்களுக்கும் கூட எதிர்வினைகளை உரிய மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு அவற்றுக்கான இடத்தை உத்தரவாதப்படுத்துவதே முழுமையான சனநாயகப் பண்பாகும்.
மாற்றுக்கருத்துக்களுக்கு இடம் தருகிற ஊடகங்களை உருவாக்குவது என்பது, ஒரு நீண்ட நெடிய சனநாயகப் போராட்டமாகும். அதற்கு வெகு காலம் பிடிக்கலாம். ஆனாலும் அப்படியானதொரு இலக்கை நோக்கிப் போராட முனைவதே விஸ்வரூபம் திரைப்படம் தந்துள்ள சிக்கல் நமக்கு கற்றுத் தருகிற பாடமாக இருக்க வேண்டும்.
- நீலவேந்தன்
கருத்து என்பதில் உண்மை சமுக பொறுப்புணர்வு பிறரை மதிக்கும் பண்பாடு நாகரிகம் ஒழுக்கம் என பல கட்டுமானங்களுள் ளது.
அவதூறுக்கு இது போன்ற எந்த விதிமுறைகளும் கிடையாது;அவதூறு என்றால் விதிமீறல் எல்லை தாண்டுதல் போன்ற சமூகம் மீறிய சிந்தனை செயல்.
இந்தியாவிலும் உலகளவிலும் இது போன்ற சுதந்திரத்தை தான் எல்லோரும் வேண்டி விரும்பி கேட்கின்றனர்.
கோவையில் மதுரையில் (முல்லா)உமர் எனும் கதாபாத்திரம் சமுக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை கூட உணராத அல்ல்து உணர்ந்தும் அலட்டி கொள்ளாத இரண்டு கால் பிராணிகளை கொண்ட நமது சென்ஷார் போர்டை எதனால் எதை தேய்த்து அடிப்பது என்றே தெரியவில்லை.
நடந்த மத ஜாதிய கலவரங்களுக்கு அடிப்படை பொது அறிவுக்கு கட்டுப்படாத வீண் உணர்ச்சி பயனற்ற வறட்டு முரட்டு கோபம் என ஒரு நீண்ட பட்டியலை தயாரித்து உளவுத்துறை தன்னகத்தே வைத்துள்ளது;அந் த உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் மத்திய அமைச்சர்களோ புத்தி ம்ழுங்கிய பைத்தியங்களை போல் உளறுகிறார்கள்
இது தான் இந்தியா;இந்த இந்தியாவில் தான் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.
வெட்கம்!வெட்கம் !!வெட்கம்!!!
சென்ற மீலாடி நபி பண்டிக்கை வாழ்த்தில், சில படிக்கும் சிறார்கள், பத்து பேரின் பெயரைப்போட்டு, தலைப்பில் " டெரர்" என கோடிட்டு தூண்டு பிரசுரம், இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்? இந்த வக்காலத்து வக்கில்கள்?
அன்புடன்
பஷீர் அகமது , புதுக்கோட்டை
பின்லேடன் ஒருசாராருக்கு கடவுள் மாதிரி ஆனால் அமேரிக்கர் போன்றோருக்கு தீவிரவாதி . சதம் ஹூசைனும் அது போலதான் . அதிலும் மிகக்கொடுமையானத ு நமது மேதகு பிரபாகரன் அவர்களையே பயங்கரவாதி என கூறினார்கள் ஏன்?.எல்லா விசியத்திலும் இதுபோலதான் இரு மாதிரியான கருத்துக்கள் உள்ளன. நீங்கள் எடுத்து கொள்ளும் விதம் தான்.ஏன் இப்படியும் இருக்கலாம் என்ற யூகம்தான் . ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங ்கள் அதிகப்படியான யூகங்களும் கற்ப்பனைகளும் நிறைந்ததுதான் சினிமா. நாம் பார்க்கும் படிக்கும் செய்திகளில் ஏற்படும் பாதிப்புகளிலிரு ந்து நமக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. அதை ஏற்றுக்கொள்வதும ் ஏற்றுகொள்ளாததும ் அவரவர் மன நிலையை பொறுத்தது. நீங்கள் இப்படித்தான் கருத்து சொல்ல வேண்டுமென்று கட்டாயபடுத்துவத ு கூடாது. கமல்ஹாசன் ஒரு கலைஞன் சிலரின் அரசியல் காரணங்களுக்காக இப்படத்தினை முடக்கப்பார்க்க ிறார்கள். நான் ஒன்றை கேட்கிறேன் எத்தனை முறை பாகிஸ்தான் தீவிரவாதிகளை விஜயகாந்த் சுட்டு கொன்றார் பிடித்தார். பாகிஸ்தானில் மட்டும்தான் தீவிரவாதிகள் இருக்கிரார்களா? அப்போதெல்லாம் முஸ்லிம் நண்பர்கள் எங்கெ போனார்கள். இதை விட தமிழ் சினிமா, இந்திய சினிமா , உலக சினிமா பல திரைப்படங்கள் தீவிரவாதிகளை சித்தரிக்கும் மற்றும் இரானுவ இரகசியங்களை வெளியிடுவதுபோல் அமைந்திருக்கிறத ு. அம்மாதிரியான படங்கள் வரும்போதெல்லாம் இவர்கள் கருத்து சொல்லாமல் எங்கே போனார்கள்?. ஆனால் இந்த திரைப்படத்திற்க ு மட்டும் இத்தனை தடை ஏன் என்பதுதான் புரியவில்லை.அதை தாண்டி நம் நாட்டிலே மற்ற மாநிலங்களில் எதிர்ப்பில்லாமல ் ஓடுகிறது அது ஏன்? எப்படி?. எல்லா படத்திற்கும் விமர்சனம் உண்டு ஆனால் தடை இருக்காது. இந்த படத்திற்கு மட்டும் தடையுடன் கூடிய விமர்சனம். இவர்கள் எல்லாம் தவறை சுட்டிகாட்ட தடை கோறவில்லை அதன் பின்னனியில் உள்திட்டம் தீட்டி ஒரு கூட்டம் செயல்படுகிறது. கண்டிப்பாக அந்த கூட்டத்தின் முகத்திரை ஒரு நாள் கிழியும் அப்போது உங்களுக்கு புரியும்.
நன்றி
சிலர் தங்கள் சுயலாபத்திர்க்க ாக தூண்டுகிரர்கள் நாம் உறுதியாக இருந்தால் நல்லது
திவிரவாததில் மதம் இல்லை மததில் தீவிரவாதம் புகுந்துள்ளது முறையாக களை எடுக்கவேண்டும்
இல்லை என்றால் தீவிரவாதியும் சுயநலவாதியும் நம்மை அழித்து விடுவார்கள்
அச்சுறுத்தலுக்க ும் ஆசை வார்த்தைகளுக்கு ம் அடி பணியாமல் இருந்தால் தமிழன் வாழமுடியும்
இல்லையேல் சாதிக்கும் மதத்துக்கும் அடிமைப்பட்டு
அழிவோம்
முஸ்லிம்கள் மனிதர்களையோ பிற பொருட்களை எதையுமோ கடவுளாய் நினைப்பதுமில்லை ஏற்ப்பதுமில்லை; இஸ்லாம் என்றால் கடவுளுக்கு முழுமையாய் கட்டுப்பட்டு வாழ்வது;யார் கடவுள் மீது பூரண நம்பிக்கை கொண்டு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் தான் முஸ்லிம்கள்.ஆதல ால் தான் முஸ்லிம்கள் மாதா பிதா முன்னறி தெய்வம் எனும் கொள்கைகளை ஏற்ப்பதில்லை;
சரி,இப்பொழுது கருத்துக்கு வருவோம்;ஒருவருக ்கு நன்பர் மற்றொருவருக்கு எதிரி என்பது பொது நியதி;நியதியின் அடிப்படையில் கமல்ஹாசன் தான் ஒரு முஸ்லிம்களின் எதிரி என பிரகடனபடுத்தியு ள்ளார் என்கிறீர்களா? மகேந்திரன்.
ஆப்கானிஸ்தானையோ அமெரிக்காவையோ கருவாக களமாக கொள்வதில் யாருக்கும் எந்த அபிப்ராய பேதமுமில்லை;சமு கத்தில் விவாதிக்கப்பட்ட ு கொண்டிருக்கும் ஒரு விடயத்தை விவாதிக்க முற்ப்படும் போது அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் விபரீதங்கள் ஏற்ப்படும் என்பதை பற்றிய அறிவு அக்கறை பொறுப்புணர்ச்சி மிகமிக அவசியம்;பொறுப்ப ற்றவர்கள் தான் பிராபாகரனையும் பிரபாகரன் போன்று சமுகங்களுக்காக உழைப்போரையும் தீவிரவாதியாக பயங்கரவாதியாக சித்தரிக்கிறார் கள்;
கோவைக்கும் மதுரைக்கும் ஆப்கானிற்கும் தொடர்பு ஏற்ப்படுத்தி கற்பனை செய்ய அல் குர் ஆனையும் தொழுகையையும் முஸ்லிம் சமுகத்தையும் கொச்சைப்படுத்தி னால் தான் இயலுமா?வேறு வழிகள் இல்லையா?சமுகம் ஏற்றம் பெற செய்யும் கதைகளில்லையா?அத ற்கான கற்பனை வளமில்லையா?இது எதுவுமே இல்லாத கமலஹாசனை தமிழ் கலையின் சிற்பி உலகளவிற்கு தமிழ் சினிமாவை உயர்த்தும் கலைஞானி என்கிறார்களே அது எல்லாம் சுத்த எண்ணெயில் பொறிக்கப்பட்ட பொய்யா.....ஹம்ப க்கா?
அமெரிக்க ரசிகர்களால் ஒதுக்கி புறக்கணிக்கப்பட ்ட அமெரிக்க இராணுவ சாகசங்களை- தனது ஆஸ்கார் கனவிற்காக- தமிழன் தலையில் தான் இறக்க வேண்டுமா?கேலி செய்ய கோமாளி வேஷம் கட்ட முஸ்லிம் சமுகம் தான் கிடைத்ததா?
ஒன்றை ஒப்பு கொள்கிறேன் விஜயகாந்த் அர்ஜீன் போன்ற புறம்போக்குகள் முஸ்லிம்களுக்கு எதிராக களம் அமைத்த போது எதிர்க்காதது முஸ்லிம் சமுகத்தின் தவறு குறை;ஒப்புக்கொள ்கிறேன்.
RSS feed for comments to this post