1. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், கொழைச்சாவடி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை. இவரது 15 வயது மகளை கடந்த 16.06.2005 அன்று சிற்றரசு உள்ளிட்ட 3 வன்னியர் சமூகத்து இளைஞர்கள் கடத்திச் சென்று ஒரு காட்டில் வைத்து அச்சிறுமியை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். இவ்வன்கொடுமைக்கு எதிராக ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலைய போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்ய மறுத்தனர். எவிடன்ஸ் அமைப்பின் தலையீட்டின் அடிப்படையில் அக்குற்றவாளிகள் மீது ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் குற்றஎண்.152/2005 பிரிவுகள் 341, 363, 376 இ.த.ச. மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். குற்றவாளி சிற்றரசிற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் கிடைத்தது. ஆனால் மேல்முறையீட்டிற்குச் சென்று வழக்கு நடந்து வந்த நிலையில் 15 வயது சிறுமியின் வாழ்க்கை கருதி அக்குடும்பத்தினரே வழக்கினை வாபஸ் வாங்கிய அவலமும் நடந்தது.

2. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மங்கலம்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் சின்னவடவாடி. இக்கிராமத்தில் வசித்து வந்த 13 வயது இருளர் சிறுமியை, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் பாவாடைராயன் என்பவர் கடந்த 15.06.2008 அன்று கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி வன்முறையில் ஈடுபட்டார். இக்கொடிய வன்கொடுமைக்கு எதிராக எவிடன்ஸ் அமைப்பின் தலையீட்டின் அடிப்படையில் மங்கலம்பேட்டை காவல்நிலைய குற்றஎண்.77/2008 பிரிவுகள் 376, 366 இ.த.ச. மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். தற்போது 17 வயதாகும் அச்சிறுமிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. வழக்கும் நடந்து வருகிறது. அந்த இளைஞன் வேறொரு திருமணம் செய்து கொண்டுள்ளான்.

3. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தீவட்டிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்டது கே.மோரூர் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வரும் 24 வயது காளியம்மாள் என்கிற இருளர் சமூகத்து பெண் கடந்த 28.12.2009 அன்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அப்பெண்ணை கடத்திச் சென்று கட்டிப்போட்டு பெருமாள் மற்றும் வேலுமணி என்கிற வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினர். இச்சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.529/2009 பிரிவுகள் 376 இ.த.ச.வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெருமாள் கைது செய்யப்பட்டார்.

4. நாகப்பட்டிணம் மாவட்டம், சீர்காழி அருகில் உள்ள கிராமம் மேலதென்பாதி. இக்கிராமத்தில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜு என்பவரின் 12 வயது மகள் கடந்த 02.03.2012 அன்று அஜித்குமார் (20) என்கிற வன்னியர் சமூகத்து இளைஞரால் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சீர்காழி காவல்நிலையத்தில் குற்றஎண்.123/2012 பிரிவு 302 இ.த.ச. மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

5. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மண்ணாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா. தலித் சமூகத்தைச் சேர்ந்த சகுந்தலாவின் 15 வயது சிறுமியை கடந்த 21.09.2011 அன்று அருள் என்கிற 21 வயது வன்னியர் சமூகத்து இளைஞர் கடத்திச் சென்று கரும்புக் காட்டில் வைத்து கட்டிப்போட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி வன்முறையில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து ஊத்தங்கரை காவல்நிலையத்தில் குற்றஎண்.519/2011 பிரிவுகள் 366(A), 376 இ.த.ச. மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

6. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் உள்ள கிராமம் அம்பலூர். இங்கு வசித்து வரும் பிரியங்கா என்கிற 18 வயது தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 20.04.2011 அன்று சின்னப்பதாஸ் என்கிற வன்னிய இளைஞர் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.202/2011 பிரிவுகள் 366(A) இ.த.ச.வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

7. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆண்டிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரது 15 வயது மகளை கடந்த 19.02.2010 அன்று அர்ஜனன் என்கிற வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் கடத்திச் சென்று கட்டிப்போட்டு சாதிய ரீதியாக இழிவாகப்பேசி கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினார். இச்சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.102/2010 பிரிவுகள் 376 இ.த.ச. மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

8. விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுனியன். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரது மகள் புனிதா என்பவரை ஜான் ஞானராஜ் என்கிற வன்னியர் சமூகத்து இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்து ஏமாற்றியுள்ளார். இச்சம்பவம் குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குற்றஎண்.11/2010 பிரிவு 376 இ.த.ச. மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செயயப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

9. சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா என்கிற தலித் பெண்ணை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரான மணிகண்டன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.202/2012 பிரிவுகள் 366(), 376 இ.த.ச. மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்

Pin It